நாளைக்காக

எத்தனையோ ஆண்டின் பின்
எழ இருக்கும் மரணத்தின்
ஒத்திகை தான் உறக்கம் உணர் மைந்தா!
நீ நிலத்தில்
பிறந்த தினம் தொட்டுப்
பிணமாகும் நாள் வரைக்கும்
‘இறப்பதற்கே பயிற்சி’ இருக்குதெனில்…
நீ வாழ்வில்
சிறக்க முயற்சியெதுவுஞ் செய்யாமல்
நிதமொடுங்கி
இருப்பது சரியாடா?
எதிர்காலம் புஷ்பிக்க…
எருவிடவும் பஞ்சியோடா?
நாளைக்காய்… இன்றைக்கே
வரங்கேட்டல் உனது கடனாகும்
துயர்வனத்தின்
வருங்காலம் வரவோர் வழிசெய்,
மண் உனை வாழ்த்தும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply