பேனா முகில்

உன்னுடைய பேனா ஒருமழை முகில்போலாம்!
அந்த முகில்கரைந்து
அள்ளிப் பொழிந்தமழை–
போலப் பெருகி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து
ஓடிற்று உன்எழுத்து!
அதன் கருத்ததிர்வுகள்
காது செவிடுபட இடியாய் வெடித்திருக்கு!
நீ பொடி வைத்து நிஜம்சொல்ல
பளீரிட்டு
மின்னல் தெறித்ததின்று!
உன்பேனா ஓயாத
மாரி முகிலோ…? விடாது அடித்தூரை
ஏப்பமிட்டு…
ஏய்த்தவரை அற்பமான குப்பைகளாய்
வாரடித்து ஒரேயடியாய்
வழித்துத் துடைத்ததின்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply