பாவம்

“மந்திரச் செபத்தாலே மாறிவிடும்
இல்லையெனில்
அந்த உயிரிறைவன் அடியினையே சென்றுசேரும்.
எந்த மருத்துவமும்
இதைத்தடுக்க முடியாது.
எந்தெந்தச் சட்டமும் இதைக்கேட்கக் கூடாது.”
என்ற விடாப்பிடியோ…
ஈடில்லாக் கல்வியினைத்
தந்த நம் ஆசானைக் கூடஇன்று
சாய்த்ததெனில்
வென்ற விஞ்ஞானத்தை,
மருத்துவ தர்மத்தை,
அன்றிருந்து இன்றுவரைக் கூர்ப்படைந்த அறிவியலை,
“உயிரை உடலை உறவு வாழ்வைக்
காக்கத்தான்
உயிர்வாழும் மதங்கள்”; என்ற
பெரும் உண்மையினை,
கொன்று… மனிதத்தைக் குடிகெடுக்கும் சிந்தனையை
என்சொல்வேன்?
நம்பிக்கை என்ற பெயரில்…உயிர்
தின்னும் சிறுமைகளைக் காண்கின்றேன்…
என்செய்வேன்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply