ஒழுக்கு

காற்றின் இழைகளைத்
தென்னோலையாய் எண்ணி
நேற்றிருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த
அந்த இரு தும்பிகளும் அசராமல்
இன்றைக்கும்
தம்கடமை செய்ய வந்தன…என்முற்றத்தில்!
எத்தனை கிடுகுகள்?
எத்தனை வண்டில்கள்?
பின்னின தும்பிகள் இதுவரைக்கும்?
தீராமல்
தென்னோலைகள் தொடர்ந்து
விழும் எனது முற்றத்தில்…
பின்னட்டும்
இன்றும் இனவாதப் பெருமழைக்குள்
சன்னமாய் ஒழுகுமிந்த
நாட்டினையே வேய்வதற்கு
சின்னத் தனமனிதர் மறந்தார்….
இவைகளேனும்
எண்ணற்ற கிடுகுகளைப் பின்னி
அருளட்டும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply