ஏன் ?

‘சிறுத்தீவுக்’ கடலில்
சிறிய ஒரு ‘குல்லாவில்’
பொறிகளான’ஆறு ‘ ஒரேவயது இளம்புதிர்கள்
உற்சாக பிறப்பு கொண்டாட்ட
மயக்கத்தில்
நிற்க…கடலன்னை
‘சரவணப் பொய்கை’ என
ஒன்றாய் எடுத்தணைத்தாள்!
பெற்றோர்க்கும் உற்றோர்க்கும்
என்ன ‘அறம் ‘ சொல்ல இதைச் செய்தாள்?
மூன்று ‘பாகத்’
தண்ணீர்ப் புதைகுழியை
கண்ணீர்ப் புதைகுழியாய்
மாற்றி உயிர் புதைத்தாள்!
‘மாணவம்’ எதை உணர
கூற்றாகி ஆறு உயிர்குடித் தமைதியானாள்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply