மீள் நடுகை

வானில்வாழும் நீராவி
முகில்களெனும் வண்டியேறி,
கூதலில் குளிர்ந்தொடுங்கி,
குதித்துத் துளிகளாகி,
காற்றின் தெருக்களில் கால்நடையாய் வழுக்கி,
தூரப் பயணமாகி,
தொட்டு நிலம் தழுவி,
ஓயாது பொங்கி,
உயிர்ப்பூட்டும் ‘கார்த்திகையில்’….
மண்குழைந்து நீரால் நிறைந்து அதன்
மனம்குளிர்ந்து
என்னத்தை நட்டாலும்
முளைக்கவைக்கும் உயிர்ப்பில்….
வருகிற காலத்தில்
வசந்தத்தை கூட்டிவர
குரோட்டன்களை வெட்டி,
புதுச்செடிகளை நாட்டி,
விதைகளினைத் தூவி,
வெட்டுக் கிளைகள் ஊன்றி,
பதிய முறையில் பல மரங்களைத் தேடி,
தேசப் பசுமையினைப் புதுப்பிப்போம்!
தேசத்தை
நேசித்தோர் நினைவினையும்
நிலம், நெஞ்சில் மீள் நடுவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply