கடன்

மனமெனும் நெய்யில் நினைவெனும் தீயை
வளர்த்துளே வழிபடு கின்றோம்.
வலி பகிராமல்… வதை உரையாமல்…..
வரங்களுக்காய்த் தவம் செய்தோம்.
கனவுகள் வெந்து நனவிலும் நொந்து
கவிதையில் நேர்ந்தழுகின்றோம்.
கழியுமோ சாபம்? கலையுமோ தாகம் ?
கடன் அடைக்காதின்றும் உள்ளோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply