உன் இசை

சிலரின் இசை…தேன்!
சிலரின் இசை…மது!
சிலரின் இசை…பால்!
சிலரின் இசை…தயிர், நெய்!
சிலரின் இசை…தண்ணீர்!
சிலரின் இசை…அமிலம்!
சிலரின் இசை…காரம்!
சிலரின் இசை…பெற்றோல்!
சிலரின் இசை…கண்ணீர்!
சிலரின் இசை … நஞ்சு!
சிலரின் இசை பாதரசம்!
சிலரின் இசை…விந்து!
சிலரின் இசை…மருந்து!
இவை கலந்தும்….
இவை கடந்தும்….
உனது இசை ….’அமுதம்’!
எல்லா உயிர்களது
உயிர்க்கும் ‘ஒளியாகி’ வாழவைக்கும்
உயிர் அமுதம்!!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply