பேதம்

இவ்வானும் முகில்களும் இருகரையும்
தென்னைகளும்
கொடுத்துத்தான் வைத்தவைகள்!
குனிந்து தினம் தம் முகத்தைப்
பார்த்து இரசித்துளன….
ஆற்றுக் கண்ணாடியிலே….!
“ஆற்றுக் கண்ணாடி
அதன்முகத்தை எங்குபார்க்கும்?”
கேட்கின்றேன்….
இயற்கையிலும் பேதமுண்டா? புரியலையே….!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply