பெருமை

“எம்மிடமும் அன்றே இருந்ததொரு
யானையென”
எம்பெருமை பேசி,
இன்றுவரை அதைவைத்தே
எம்காலம் ஓட்டி,
இன்று ஒரு பூனைகூட
எம் சொத்தாய் இல்லா
இழிவைக் கணக்கெடாமல்…
எம் யானை என்றோ
இறந்ததைப் புரிந்திடாமல்….
எம்மைவிடப் பின் நின்றோர்
எதை எதையோ சேர்த்து உய்ய
எம் முயல்வும் செய்யாமல்…
இன்றும் நாம் பெருமைகொள்வோம்
“எம்மிடமும் அன்றே இருந்ததொரு
யானையென”

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply