தற்காப்பு

யாரையும் நம்பிக் கிடக்காமல்
நம்மைநம்பி
வாழ்வதே உசிதமென
வடிவாக நின் குருதி
கூறுகிற தத்துவத்தைக்
குறித்துக்கொள் மானுடவா!
காயமொன்று ஏற்பட்டால்
‘காயத்தை’ நம்பாமல்,
வேறொருவன் கட்டுப் போடுமட்டும்
காத்திராமல்,
காயத் துளையடைக்கத்
தான் கடினமாய் முயன்று….
தானுறைந்து தன் அளவைக் காத்து
முழு உயிரை
மீட்க இயங்கிடுது விரைவாக குருதி…!
அது
தானுறைய மறந்திருந்தால்
சறுக்கிவிழும் கீறலுக்கும்
போகும் உயிர்!
பாடம் புகட்டுதது;
அறி தெளி நீ !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply