வழித்தடம்

வானில் பறவைகளின் வழிமாறிப்
போனதில்லை!
நீரிலே மீன்களது
நிலை, வழி பிழைத்ததில்லை!
ஊரும் எறும்புகளை எப்படிக் கலைத்தாலும்
பாதை அவை மாறிப்
பயணித்த சரிதமில்லை!
காட்டில் விலங்குகள்….
பாலைகளில் ஒட்டகங்கள்…
காற்றிலே ஈசல்கள்…
சேற்றிலே சிற்றுயிர்கள்….
ஏதும் எவரிடத்தும் வழிகேட்டுச்
சென்றதில்லை!
வாழும் மனிதனின் வழித்தடம்
வரலாறு
வாழ்வு மட்டும்
மாறாமல் போனவர லாறில்லை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply