தும்பிச் சூரன்!

ஈட்டி முனைக்கூரில்
தன் ஒருகாற் பெருவிரலை
ஊன்றிநின் றொருநூறு யுகங்கள்
தவம் செய்து
சாகா வரம் பெற்றுச்
சகலரையும் ஆட்டுவித்த
சூர பத்மனின் வம்சத் தும்பி
முள்ளுக்கம்பிக்
கூரில் தவமிருக்கு!
சூரனைப்போல் கூற்றுவனால்
சாகா வரம்கேட்டுத் தானா செபிக்குதது?
ஈசன் அருள்வானா வரமின்று?
“சூரனினால்
போதுமடா பட்டதெல்லாம்”
என்றொளிவானா கண்டு?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply