ஒரு துளி விசப்பொய்

நாங்கள் உரைத்த ஒரேயொரு பொய்யினது
வேசம் தெரியவர….
இதுவரைநாம் சொல்லிவைத்த
உண்மைகளிற் சந்தேகம் உலகுக்கு ஏற்பட்டு
போலியாய் நாங்கள்
புரிந்து கொள்ளப்பட்டிருப்போம்!
ஒரு துளி விசமாகும் ஒரு பொய்
ஒரு துளியே
ஒரு பெரிய பாற்கடலை
ஒரேயடியாய்ப் புறக்கணிக்க
வைக்கும்படி பொய்யின்
வலிமை பெரிதாகும்!
திரைந்தபால் மீண்டும் சிறந்தபாலாகிடுமா?
விசமான பாற்கடல்
புனித அமுதாகிடுமா?
இல்லையிதை எவர்தெளிந்தோம்?
இன்றும் நம் உண்மைகளில்
சந்தேகம் தோன்றாத தகுதியினைக் காப்பாற்ற
ஒரு பொய்யை யேனும் உரையோம்
என்றுறுதி கொள்வோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply