தும்மலின் மூலம்

தும்மல் வருமாப்போல் தோன்றி இப்போ
துப்புரவாய் மறைகிறது… நீயும் இப்போ
என்னைநினைத் திருப்பாயே என்றிருந்தேன்…
நினைக்கவில்லை… எனப்புரிந்து தவிக்கும் நெஞ்சு!
தும்மவேண்டும் போல் உழையும் மூக்கு… நீயும்
நினைத்தாற்தான் அதுநடக்கும் தொடர்ந்து காத்து
தும்மல்வரா துடைந்துபோனேன்… இப்போ யார்தான்
தும்முவாரோ உன்நினைப்பில் …. ஏங்கும் மூக்கு!

எனை மறந்து எவனைத்தான் நினைத்து… இப்போ
இருக்கின்றாய் நீ? நானும் தொடர்ந்து இங்கே
உனைநினைத்து கிடக்கின்றேன்.. தும்மிக் கொண்டா?
உழையாத மூக்கோடா இருக்கின்றாய் நீ?
உனக்கு வரும் தும்மலுக்குக் காரணம் யார்?
ஒரு தடைவ இதையேனும் சிந்தித்தாயா?
எனக்குழைய வில்லையிப்போ மூக்கு… தும்மி
இருப்பாயோ பிறர்நினைப்பில் ஏங்கும் நெஞ்சு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply