உன்னால் நிகழ்ந்தது

காற்று வானிலே சூழுரைத்தது
கைகள் கொட்டியே ஆழி ஆர்த்தது
சேற்றிலாடின கால்கள் கைகளோ
திக்கு எட்டிலும் கோலமிட்டன!
ஆற்றலுள்ளவை அற்புதங்களை
அள்ளி வீசின…ஊழி வேள்வியின்
ஈற்றில் மானுடம் வாகை கொண்டது!
எப்படி என…ஊழ் வியந்தது!

தோப்பு ஒன்றுதான் தாறதண்நிழல்
தூய ஓர்மரம் தந்து சென்றதாய்
காப்புச் செய்யுளே காவியம் என
கட்டியாக நற் கருத்துரைத்ததாய்
ஏப்பமிட்டது எம்மை…நின்குரல்!
இமயந்தாண்டிற்று நின் ஒவ்வோரடி!
சாப்பிட்டெங்களைக் கொள்ளையிட்டதுன்
செவ்வாய் நல்வழி காட்டிற்றுன்விழி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply