ஜெயசீலனின் கவிதைகள் – ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்

‘அரக்கர் எம் அழகு பூமிதனை ஏய்க்க எழுந்தருளின் அறம்பாடி அவரெரியவைப்போம்’இ என்றவரிகளில் கவியை ஆயுதமாக்கி எதிரியை அழித்த ஐதீகக் கதையைக் கூறும் நந்திக்கலம்பகத்தின் எதிரொலியை கேட்கமுடிகிறது. த.ஜெயசீலன் இரண்டுக்கும் மேற்பட்டகவிதைத் தொகுப்புகளைத் தந்தவர். சஞ்சிகைகளில் கவிதைகள் மூலம் அதிகம் பங்களித்துவருபவர். ‘கைக்குள் சிக்காத காற்று’ தொகுப்பில் வரும் கவிதைகள் இங்குநோக்கப்படுகின்றன.

இதனைச் செதுக்கியதில் ‘இயற்கையும் இறைநினைவும் காலமும்’ பங்களித்தமையைஇ முன்னுரையில் பதிவுசெய்கிறார். எனவேஇ முதலாவது கவிதையாக வரும் ‘துணைதருக’ என்பதை ‘காப்பு’எனக் கருதுவதில் தவறில்லை. அரக்கரைஅறம்பாடிப் புறப்பட்ட காற்றுஇ

“திராணியற்று மூன்று முறைதுப்பி முழுதாய் சபித்துவிட்டு” எதிர்த்திசையில் போகிறது.(‘ஆறும் நானும்’) இந்த முரண்இ இவரில் மட்டுமன்றிஇ அனேக கவிஞர்களிடத்திலும் காணக்கிடைக்கின்றது. இந்தமுரண்இ ஈழத்துக் கவிதையின் வெறுக்கத்தக்க பண்பாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்இ வீரம் பேசிவிட்டுத் தலைகுனிந்துபோம் நிலையாக இதனைக் கருதிஇ ‘அவமானம்’ என விபரித்துஇ வியாக்கியானஞ் செய்யவும் செய்யலாம். எண்பதுகளில் அருந்தலாகத் தென்பட்ட இந்தமுரண்இ தொண்ணூறுகளின் பின் வந்த கவிதைகளில் அதிகம் தென்படுகின்றன.

. ‘கைக்குள் சிக்காத காற்று’ தொகுதியில் எண்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. எனினும்இ ஜெயசீலனின் இதுவரை எழுதப்பட்ட கவிதைகளின் எண்ணிக்கைஇ எழுதப்படும் வேகத்தை வைத்துப் பார்த்தால்இ இவ்வெண்ணிக்கையை விட பத்துமடங்காகினும் இருக்கமுடியும். அவரது படைப்பு வேகமும் பிரசுர வேகமும் கவனிப்புக்குரியன.
‘அவற்றின் (மரத்தின்)
குறைதுயரை
எந்தக் கவிவரியில் இத்தனைநாள்
பதிவுசெய்தோம்’

இந்தவரிகள் மூலம் (‘மரநிலை’) ஜெயசீலனின் பார்வைப்புலம்இ வியாபிக்கும் எல்லைகளை சுட்டிக்காட்டமுடியும். அவ்வாறே அவர் எழுத எடுத்துக் கொள்ளும் பாடுபொருளும் பன்முகப்பட்டுள்ளன. தன்னுணர்வு சார்ந்து மட்டுமே எழுதப்பழகிய பலபேனாக்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான பேனா. அதேவேளை அப் பாடுபொருளைத் தரும் கவிதைக் கோணமேஇ கவிதையின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது என்பதையும் அழுத்திச் சொல்லவேண்டும். அனைத்து பிரச்சினைகள் குறித்தும்இ அனைத்துப் பொருள் குறித்தும் தான் கொண்டுள்ள அறிவைப் பாடுபொருளாக்கும் சுதந்திரத்தைக் கவிஞன் கொண்டுள்ளான். அவை கவித்துவத்துடன் மிளிரஇ அவ்வுலக அறிவு அனுபவத்தில் வரவேண்டும். குறைந்தபட்சம் அந்த அறிவு உணர்வுக்கு நெருங்கி வரவேண்டும். ஜெயசீலனின் சிலகவிதைகள்இ கவிதையாகாமல் போனமைக்குக் காரணம்இ உலகஅறிவுஇ பட்டறிவாக இல்லாமை காரணமாக இருக்கக்கூடும்.

சுழலுகின்ற மின்விசிறி சுழன்று
சுழன்று.. தான்
களைத்து வியர்க்கையிலே
காற்றுக்கு எங்குபோகும்? (பக்:87)

போன்றவற்றை அவ்வகையில் கவிதையாகாதவையாதற்கு உதாரணமாகக் காட்டலாம். ‘கொள்ளை போன குளம்’ (பக்கம் 6) குறிப்பிடத்தக்க கவிதை. கவிஞனின் உள்ளார்ந்த கோபத்தைஇ வாசகனில் ஏற்படுத்துவதில் வெற்றிபெறுகிறது.

தூண்டிலிட்டு நாலு சிறுதிரளி பிடித்ததனால்இ

வீட்டுப் பசிவிரட்டும்

அவனுமாராற் பசித்துள்ளான்?’

என்று கவிதை முடிகையில்இஅதுவே மீளவும் அக்கவிதை வாசிக்க வைக்கும் ‘சரடையும்’இ அதனால் அக்கவிதை அதன் இரண்டாம் வாசிப்பில் தரும் இன்னொரு கோணமும் சாத்தியமாகின்றன.

‘மறத்தல்’ (பக்கம் 11) கவிதையும் இன்னும் இறுக்கமாக வெளிவந்திருக்க வேண்டும். அடிமுடிகள் ஏதுமற்ற பிழம்பாகஇ வடுக்களை உவமித்த வரிகளில் கவிதையின் உயிர்ப்பு இருக்கிறது. இந்த‘உயிர்ப்பை’ இன்னும் பலகவிதைகளில் காணமுடியும். என் ‘அகத்தில்’ அதன் வேர்துளைத்த வலி மட்டும் இன்னும் இருக்கிறது என்ற வரிகளை (வேர்இபக்கம் 12) இவ்வகையில் குறிப்பிடலாம். ‘அகத்தில் ’என்பதற்கு மேற்கோள் குறிகள் இடப்பட்டுஇ மனத்தையும் வீட்டையும் குறிப்பால் உணர்த்துகின்றது எனக் காட்ட சற்று சிரமப்பட்டிருக்கிறார். தேர்ந்த வாசகன் தவறாமல் அந்த இரு பொருளையும் கண்டடைவான் என்பதில் கவிஞனுக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனத்ததையே இது காட்டுகிறது. கவியரங்கமாயின் இரு முறை இரு வேறு அழுத்தத்துடன்இ எடுத்துரைக்கும் முறையின் தொடர்ச்சியோ என எண்ணத் தோன்றுகின்றது.

ஈழத்துக் கவிதைச் சூழலில் ஒரு முக்கியமான அம்சம்இ கவிதை எழுதுபவர்களின் தரத்தை விட கவிதையை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிவாசிப்பவர்களின் தரம் உயர்வாக உள்ளது. இதற்கு ஆதாரமாக வகைதொகையின்றி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகும் கவிதைகளின் தரத்தையும் அவற்றுக்கு வழங்கப்படும் வாசகமதிப்பையும் காட்ட முடியும்.

ஜெயசீலனின் கவிதைகள் மரபு வடிவத்தைப் புறக்கணித்து மரபைமீறிய கவிதைகள் எழுதப்படும் முறையில் எழுதப்படுகின்றன. அதாவது வரிகள் வைக்கப்படுகின்றன. எனினும்இ மரபின் கதகதப்பைப் புறக்கணிக்க விரும்பாத கவிதைகள் இவருடையவை. அநேக கவிதைகள்இ மரபோசையுடன் வருகின்றன. கவிதைகளுக்கு அந்த லயம்இ சிற்சில சந்தர்ப்பங்களில் இவலுச் சேர்ப்பதை மறுப்பதற்கில்லை. ‘வெளிநாட்டுப் பறவைகள்’ (பக்கம் 56) என்று தலைப்பிட்ட கவிதை குறித்து சிலவரிகள் சொல்லவேண்டும். அதுபுலம்பெயர் பறவைகள் குறித்து விபரணங்களோடு ஆரம்பித்துஇ கவிதை வளர்கையில் அதுபுலம் பெயரும் பறவைகளை மட்டும் குறிக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பால் உணர்த்திச் செல்கிறது என்பதும் வாசிப்பவருக்கு விளங்குகின்றது. “வேர் பெயர்ந்து எங்கோ விழுதுவிட்டுச் சொந்தஊரைப் பார்த்துவிட்டுப் போகப் படையெடுக்கும்’ தழிரைத் தான்இ குறிப்பிடுவதை வாசகன் கவனிக்கத் தவறிவிடுவான் என்ற அச்சத்தில் கவிதையை எழுதிவிட்டுஇ கடைசியில் ‘நம்மவரும் வெளிநாட்டுப் பறவைகளா?’என இரண்டு வரிகளை சேர்ப்பதன் மூலம் கவிதைக்கு ஊறு செய்ய முற்படுகிறார். கடைசி நான்கு வரிகள் இல்லாமலே அவர் சொல்ல விழைவதும் அதன் குறிப்பும் கட்டுறுக்கத்துடன் உள்ளன என்பதை அழுத்தமாகக் கூறவேண்டும்.

‘நடத்துவதுதெய்வம் இறை நானோர் கருவி’ என்ற பான்மையில் ஆன்மீகச் சார்புடையவர் என்பன அவரது கவிதைகளும்இ கைப்பட எழுதியுள்ள குறிப்பும் காட்டுகின்றன. அவரது தத்துவார்த்த நோக்கும்இ ஆன்மிக வழிபட்டதே. குவிதை எழுதுதல் குறித்த நோக்குஇ ‘வாழ்க்கைப் போர்’ என்ற கவிதையில் எடுத்துரைக்கப்படுகின்றது. சகபாடிகளுடன் நெருங்கமுடியாதஇ ‘அந்தியமாதல்’ பிரச்சினையையும் ஒதுக்கியபோது பெறப்படும் தனிமை கவிதை எழுதப்படும் களமாவதையும் எடுத்துரைக்கிறார். இத் தொகுப்புக்கு தலைப்பைக் கொடுத்த கவிதையானஇ ‘கைகளுக்குள் சிக்காத காற்றில்’ வரும் காற்றுஇ இக் கவிஞனே சமுதாய அமைப்பை விமர்சிக்கும் அதேவேளைஇ அதை மாற்றுவது குறித்து வியாக்கியானங்கள் இன்றிஇ ‘தாமரை இலை தண்ணீர்’போல‘ ஓடும் புளியம் பழமும் போல்’ வாழவிரும்பும் ஆன்மிகப் போக்கை அடியொற்றுகிறதுஇ இவரது உலகம்

(தினக்குரல் 18.12.2005 ல் பிரசுரிக்கப்பட்டது)