Category Archives: கவிதைகள்

நிழலாய்த் தொடரு!

யாரா யினிலும் அவர் அண் டிவர சாதா ரணமாய்த் தழுவும் தலைவா! வேரா கஎமக் குதவும் அரனே வேலா பெருநல் லைகுகா சரணம்! “தா தா” எனவும் அழுவேன் உதவாய். நானாய் வினவாப் பலதும் தருவாய். ஏதும் அறியான் எனையும் கவியாய் எல்லோ ருமே ஏற்றிட வைத் தவனே. உன்வா சலிலே உலவும் பொழுதெம் உள்ளத் … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிழலாய்த் தொடரு!

தேரிலேறி தீமை தீய்ப்பான்

‘ஆறுமுகர்’ தேரிலேறி ஆடி வந்திடும் – காலை அதிசயங்கள், அற்புதங்கள் கோடி பொங்கிடும். வீறுகொண் டாக்ரோஷமோடு சஞ்சரித்திடும் – வேலன் விழிப்பிளம்பு தீமைகளை சங்கரித்திடும். இலட்ச இலட்சமாக பக்தர் வந்து கூடுவார். – கந்தன் “எங்கள் குறை தீர்க்க வேணும்” என்று தேடுவார். நிலை மறந்து நெஞ்சுருகி நேர்ந்து வீழுவார் – வேலின் நிழலில்…உடல் உயிர் … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தேரிலேறி தீமை தீய்ப்பான்

நல்லூரானை நாடி.

எங்கிருந்து இங்கு சனம் வந்து சேர்ந்தது? – அட எள்ளுவிழ இடமிலாது எவ்வாறு சூழ்ந்தது? எங்கிருந்து எந்தக் காந்தம் ஈர்த்திழுக்குது? – பக்தர் இதயம் நல்லை அறுமுகனைத் தேடித் திரழுது! யாரும் சேர்த்திடாது வந்திணைந்த கூட்டமாம் – ஏதும் யாசகங்கள் வாங்கி சேர்ந்திடாதிந் நாட்டமாம். பேர் புகழிற்காக ஏங்கிடாத தேட்டமாம்- நல்லை பெரியவன் தேரேறக் கண்டால்… … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூரானை நாடி.

வேலன் விழா.

“யாரெவரும் எப்படியும் வாழட்டும் இப்படித்தான் வாழ்வேன்” எனவாழும் ‘இலட்சிய வாதியை’ப்போல்…

Posted in கவிதைகள் | Comments Off on வேலன் விழா.

அருள் …கார்த்திகையில்

எதுதான் முடிவு எனவும் தெரியோம். எதுதான் விடிவு எனவும் தெளியோம். விதிஎவ் வழிபோ கவிடும் புரியோம். வினைஎன் னபழி தருமோ அறியோம்.

Posted in கவிதைகள் | Comments Off on அருள் …கார்த்திகையில்

ஒதுங்குவோம் உன் அடி நிழலில்

யானொரு கருவி நீயே தான் சுருதி யாதையும் பார்த்துக்கொள் நீயே! யான் விடும் பிழை, என் சரி, நன்மை தீமை, என்வெற்றி தோல்வி, நோய் சுகமும், யாவுமுன் செயலே! யான் வெறுஞ் சடமே! எனை இயக்கும் சக்தி நீயே!

Posted in கவிதைகள் | Comments Off on ஒதுங்குவோம் உன் அடி நிழலில்

வேலனுக்கார் ஈடு?

நல்லை ஊரை நம்பி நிதம் நாடு – அது ஞான நிழல் நல்கும் எழிற் காடு. வல்வினையில் வைக்கும் வேலும் சூடு- உந்தன் வாழ்வைமாற்றும் வேலனுக்கார் ஈடு?

Posted in கவிதைகள் | Comments Off on வேலனுக்கார் ஈடு?

நல்லூர்த் திருவிழா!

அண்டிவரும் பக்தருக்கு அள்ளிஅள்ளியே – செல்வம் அத்தனையும் தந்துயர்த்தும் அன்னைத் தெய்வமே! குண்டு, போர், பிணி, அனர்த்தம் சூழ்ந்த போதிலே -கொற்றக் குடை, அரணாய்க் காத்தணைத்த நல்லை வேந்தனே!

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூர்த் திருவிழா!

தேற்றி அருள்புரி.

எல்லையில் லாத எழில்கள் புனைந்து எப்போதும் புன்னகை பூத்து, எவரெவர் வந்து இருந்து எழுந்து இழகி அழும்போதும் பார்த்து, தொல்லைகள் தீர்த்து, துணிவுளஞ் சேர்த்து, தோல்விப் பயம் ஓட ஆர்த்து,

Posted in கவிதைகள் | Comments Off on தேற்றி அருள்புரி.

துணை நில்

கடலா கியநின் கருணைக் கரையில் களையா றிடுமோர் கணம்வாய்த் திடுமோ? உடலா றிடுமோ? உயிரா றிடுமோ? உணர்வூ றியவா ஒருவார்த் தையுரை!

Posted in கவிதைகள் | Comments Off on துணை நில்

உயிர்ப்பின் எழில்

சோடனைகள் விதவிதமாய்ச் சோடனைகள் வகைவகையாய்ச் சோடனைகள் என்றாலும் சோபிக்க வில்லைஏதும்! சோடனைகள் அதனைத் தூக்கி நிறுத்தவில்லை! ஏனென்றால் சோடிக்கப் பட்டதுவோ உயிரற்ற

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பின் எழில்

விண்ணை உலுக்கும் வினாக்கள்.

இன்னுமின்னும் தோண்ட எத்தனை கூடுகள் வந்திடும்? -அவை என்ன கொடிய கதைகளை ஊருக் குரைத்திடும்? என்ன நடந்தது யாரிவர்கள் எனும் ஐயமும், – அட என்னதான் மூடு மந்திர மென்கிற அச்சமும், இன்னும் அவிழாப் புதிராய்த் தொடருதே ஏனடா? -நிதம் எண்ணிக்கை சொல்லிக் கடந்து நாம் போறமோ? கூறடா!

Posted in கவிதைகள் | Comments Off on விண்ணை உலுக்கும் வினாக்கள்.

சுப்பிரமணி

நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை. இடையில் இணைகையிலே எவரும் தடுக்கவில்லை. உடையோன் பின் வந்ததென்று ஊர் முறையிட்டதில்லை. நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை.

Posted in கவிதைகள் | Comments Off on சுப்பிரமணி

காக்க முயன்றால்

கலையாத கனவோடு நனவின்று வாழும். கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம். விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம் விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும்.

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்

இதுவா நேர்வழி?

என்னதான் வசை? எங்கு பார்க்கிலும் ஏனடா மனக் காழ்ப்புகள்? ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள் ஏன் பெருகுது தூற்றுதல்? நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை நீட்டிக் குற்றம் சுமத்தலேன்?

Posted in கவிதைகள் | Comments Off on இதுவா நேர்வழி?