Category Archives: கவிதைகள்

அக்கப்போர்

தேர்தல் வருகிறது – இந்தத் தேசம் முழுதும் அடித்துப் புரளுது. ஊர்கள் கொதிக்கிறது – எங்கும் உற்சாகம் பீறிட் டொளிர்ந்து பெருகுது. தேர்தலை வெல்வதற்கு – தத்தம் திட்டங்கள் கொள்கையைத் தம்பட்டம் தட்டி யார்க்கும் உரைப்பதுவே- இனி ராவும் பகலும் நடந்திடப் போகுது! ‘பாரம்பரியக்’ கட்சி – அட பார்க்க முளைத்து வளரும் புதுக்கட்சி ஓரிரண்டு … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அக்கப்போர்

ஒரே காற்று

வீசியது ஒரே காற்று; எமக்குமேல் சுழன்றடித்து வீசிற்று ஒரே காற்று; அவன்மீது அது அள்ளித் தூவிற்று பூக்களை, சுகந்தம், மகரந்தத்தை. தூவிற்று என்மீது தூசியை, மணல் மழையை. காற்றிலும் குறையில்லை… ஏனென்றால் அன்னவனோ வீற்றிருந்தான் சோலையிலே.., யான் கிடந்தேன் பாலையிலே!

Posted in கவிதைகள் | Comments Off on ஒரே காற்று

புயலை எதிர்வுகூறல்

எதைநாங்கள் எதிர்வு கூறி இருந்தாலும் அதுஎன்ன எண்ணி, அது என்ன முடிவெடுத்து, எந்த வழியில் இயங்க நினைக்கிறது என்பதைநாம் முழுதாய் அறிய இயலாது. எதிர்வு நாம் கூறியதில்

Posted in கவிதைகள் | Comments Off on புயலை எதிர்வுகூறல்

இந்த இரவு

இந்த இரவு வழமையான இரவல்ல! இந்த இரவு… இடைவிடாத மழைப்பொழிவை, இந்த இரவு… எங்கும் வெள்ளக்காட்டை, இந்த இரவு…

Posted in கவிதைகள் | Comments Off on இந்த இரவு

திருவெம்பாச் சொர்க்கம்

காலையைப் பனி கட்டிப் பிடித்துமே கருணை யற்று உறைந்திட வைத்திடும் வேளை; பிரம்ம மூர்த்தத்தின் பின்னான வேளை; நடுங்கக் குளித்துச் சிவசின்னம் சூடி… காற்று, சாரல், இருள், கூதல் சூழவே கோவில் செல்வோம்! அதி காலைப்

Posted in கவிதைகள் | Comments Off on திருவெம்பாச் சொர்க்கம்

பொங்குகிறோம் இம்முறையும்!

பொங்குகிறோம் இம்முறையும்! புதிய பானை, புத்தரிசி, புதுப்பால், சற்கரை, தேன், நெய்யும், மங்கலமாய்க் கோலமும், தோரணமும், இஞ்சி மஞ்சள் மா இலை, பழங்கள், கொண்டு…மீண்டும் பொங்குகிறோம்! நீராடி, புனிதம் சூட்டி, பானையேற்றி, பால் பொங்கும் வரை தீ மூட்டி,

Posted in கவிதைகள் | Comments Off on பொங்குகிறோம் இம்முறையும்!

தமிழ், சைவம் காத்த பெண்மை

‘ சிவத்தமிழ்ச் செல்வி’ என்று திசையெட்டும் அழைக்கும் அன்னை. தவப்பெரு வாழ்வு வாழ்ந்து தமிழ்,சைவம் காத்த பெண்மை. எவர்க்கும்…ஈடில்லாத் தாய்மை. இரும்புப் பெண்ணான தூய்மை.

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ், சைவம் காத்த பெண்மை

கணிக்க முடியாது.

கணிக்க முடியவில்லை… காற்று புயலாவதனை. கணிக்க முடியவில்லை… கனமழை தொடர்வதனை. கணிக்க முடியவில்லை… காற்றழுத்தத் தின்திசையை.

Posted in கவிதைகள் | Comments Off on கணிக்க முடியாது.

அமைதிப்புயல் ஃபெங்கால்

“அடக்கமுடையார் அறிவிலர் என்று கருதிக் கடக்கக் கருத வேண்டாம்” இக் கருத்தை வலியுறுத்த இப் ஃபெங்காலை

Posted in கவிதைகள் | Comments Off on அமைதிப்புயல் ஃபெங்கால்

இன்றைய ஜனநாயகம்?

பாராளு மன்றைத் தெரிய பழுதில்லாத் தேர்தல் நடந்தது. தேர்தலிலே போட்டியிட்டோர் ஆர்வம் அளப்பெரிது. ‘இருநூற்றிருபத்தைந்து’

Posted in கவிதைகள் | Comments Off on இன்றைய ஜனநாயகம்?

புயலடிக்கப் போகிறதாம்…

புயலடிக்கப் போகிறதாம். புரட்டிற்று அறிவிப்பு! புயலடித்தல் நிச்சயம். புயலெந்த வழியில் ‘கரை கடக்குமெனக்’ கணித்தல் கடினம். “என்னவும்

Posted in கவிதைகள் | Comments Off on புயலடிக்கப் போகிறதாம்…

தெரிவு

இன்னுமென்ன என்ன கொடுமைகள் கன்றாவி இங்கேநம் முன்காண உள்ளோம்? முழுவிருப்பி னோடு முனைந்தாண்டு சென்றவர்கள் போக… கிறுக்கர் புளுகர் திறமையற்றோர் இன்றெழுந்தார் எம்மை எடுத்தாள என்ன இழவிதுவோ?

Posted in கவிதைகள் | Comments Off on தெரிவு

என்ன ஆகும்?

விழலுக்கு இறைக்கின்ற நீராய்த் தானே வீழுது நம் வாக்குக்கள்; தேர்தல் என்னும் தொழிலுக்குப் புதிதாகப் பலபேர் வந்து சூழுரைத்துத் திரிகின்றார்.ஒன்றாய் அன்று புழங்கியவர் தங்களுக்குள் குத்துப் பட்டு புதிய புதிய கட்சி, சுயேட்சை, என்று

Posted in கவிதைகள் | Comments Off on என்ன ஆகும்?

தெரிதல்

சகோதரம் எனப் ‘போட்டாய்’. அயலான், உறவுகள், சகநட்பு, உனக்குத் தெரிந்த முகம், நினது சாதி, குலம், சமூகம், சமயம், நிறம், இனமும், தான் என்றும் வாக்கிட்டாய்.

Posted in கவிதைகள் | Comments Off on தெரிதல்

வழி

எத்தனை முகங்கள் எங்கள் சுவர்களிலே? எத்தனை முகங்கள் புதிதாய்ச் சிரித்தபடி? எத்தனை முகங்கள் கைகூப்பி கைகாட்டி? எத்தனை முகங்கள்? இன்றுவரை நாமறியா

Posted in கவிதைகள் | Comments Off on வழி