உளம் மாற வேண்டும்.

நல்லதிற்குக் காலமில்லை;
நல்ல முயற்சிக்கு,
நல்ல சிந்தனைக்கு,
நல்லதனைச் செய்வதற்கு,
நல்லாரைக் கூடி நடப்பதற்கு,
நாட்டிலுள்ள
நல்ல விடயங்கள் தமை
மீள நாட்டுதற்கு,
இல்லையின்று காலம்!
இவ்வாறு எதுஞ்செய்தால்…
வயிறெரிந்து, பொறாமையுற்று,
வழிமொழிய விரும்பாது,
தயவுதாட் சண்யமற்றுத் தடைபோட்டு,
அதைப்பழித்து,
எள்ளி நகைப்பதுவும்;
“இவர் எப்படிச் செய்ய ஏலும்
கள்ளம் உள் இருக்கும்” எனக் கதைப்பதுவும்;
எதுஞ்செய்யா-
திருந்து…செய்பவரை இழிவுசெய்து;
அடக்கி ஓட்டத்
திரிவதுவும்; தான் இன்று திறமையென்று பலர் உள்ளார்!
தாங்களும் செய்யாது,
செய்வாரையும் விடாது, “பேர்
தேங்கியே நாறினாலும்
தீமையில்லை” எனத்தானே
ஊரில் பலர்திரிவார்!
ஒருவன் திறமையொடும்,
ஆளுமை ஆற்றல் அறிவோடும்,
துணிவோடும்,
புதுமையொடும், நற்சேவை
புவிக்குப் புரியவந்தால்…
அதை, அவனை அரவணைத்துப்
பயனபெற நினையாமல்;
அது தமது இருப்புக்கு ஆபத்து,
“அவனருகில்
இருந்தால் இடைஞ்சல் எமக்கு”, என
ஒதுக்கி…
அற்பர்கள் தங்களுக்கு “ஆமாமாம்” போட்டுத்தம்
சொற்கேட்கும் சோத்திகளைச்
சுற்றவர அமர்த்தி…தம்
குறைகளை மறைத்து,
கொஞ்சமும் திறமையற்று,
எதும் மாற்றஞ் செய்யாது,
ஏதோ… தம் காலமோட்டிக்
கதைவிடுவார்!
அவர் ஆளும் காலமிது…
இதனால்
ஊருக்குத்தான் நஷ்டம்;
உண்மைத் திறமைகளைப்
பாராட்டா விட்டாலும் பழிக்காது
நல்லவற்றைச்
செய்பவரைச் செய்யவிட்டால்
செழிக்குமடா வையம்;
உய்யும் வரலாறு;
உளம் இதற்கு மாற வேண்டும்!

Posted in கவிதைகள் | Comments Off on உளம் மாற வேண்டும்.

வேறென்ன வேண்டும்?

சோடனைகள் உச்சமெனத் தோன்றும்
பூஞ் சப்பறத்தில்
ஆரோகணித்து வந்தாள் அன்னை;
புடைசூழ்ந்து
அடியார்கள் கூட்டம் அலைமோத…
நாதவெள்ளம்
மடைதிறந்து பாய…
வளரிரவைப் பகலாக்கி
மின்னிலே பூத்த வெவ்வேறு பூக்கோலம்
மின்ன…
‘சிட்டிவேரம் கண்ணகித்தாய்’
வீதி உலா
வந்தாள்;
அவள் விழியில் வழிந்தது கருணையூற்று!
சிந்தினாள் புன்னகையை;
சேயெனதும் நெஞ்சத்துச்
சஞ்சலந் துடைத்துத்… தந்தாள் அருட்கடாட்சம்!
பஞ்சாய்ப் பறந்தது பயம், கவலை!
சுற்றிவந்த
களையாறக், காலாற, கண்ணகித்தீ
பரிவார
இளையரொடு ‘வடக்கு வீதியிலே’ சற்றமர்ந்தாள்!
வந்த களைபோக்க
வல்ல பெருங்கலைஞர்,
விந்தைமிகு நாத சுரத் தவில் விற்பன்னர்,
மந்திர இசையாலே
வருடிக் கொடுத்தார்கள்!
நாதக் குழல் மழையும்,
நர்த்திக்கும் விரல்களாலே…
மேளங் களிலிருந்து
முழங்கிய லய இடியும்
பொங்கிப் பிரவகித்துப்
புத்துயிர்பை ஊட்டிற்று!
எங்கள் மனப்பாரம் இறக்கி,
ஒரு அமைதி
நிம்மதியைத் தந்ததந் நிமிடங்கள்;
இசை இரசித்து,
எம்மையும் அருகழைத்து,
குறைகேட்டு, வரம் தந்து,
வாழ்த்தி அனுப்பிவைத்தாள் மாதேவி!
அவளடியில்
வீழ்ந்தெழுந்து மீண்டோம்;
வேறென்ன வேண்டுமினி?

Posted in கவிதைகள் | Comments Off on வேறென்ன வேண்டும்?

பொய்கள் தோற்கும்

பொய்களைக் கண்டு பயந்து – அதைப்
புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து.
நைந்து மனங்கள் நலிந்து – ஊரில்
நாலுபேரின் முன் குனிந்து
செய்வதறியாதிருந்து – வாழ்தல்
தீது; இதற்கு மருந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கள் தோற்கும்

நீதி வெல்லும்.

காலமொன் றிருக்குது.
கடவுள் தீர்ப் பிருக்குது.
வாலையாட்டும் தீமைகள்
மாய்ந்த மெய்யிருக்குது.
போலி வேசம் பொய்மைகள்
போர்க்கு நின்ற போதிலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நீதி வெல்லும்.

தூயவை துணிந்துவிட்டால்

தூயவை செய்யத் துணிந்திடில்- இடர்
துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே-
அவை
மாயும் அகலும் வழிவிடும் – என
மா அறிஞர் முன்புரைத்தனர்- அது
நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தூயவை துணிந்துவிட்டால்

பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

பொய்கட்கு ஆயுளோ அற்பம்- அதைப்
பொருந்தாது சொல்லிடின் யார் ஏற்பர் நித்தம்?
பொய்களை மெய்போலச் சொல்லும்- பொய்யர்
புளுகையும் ஏற்காது புவிகேட் டொதுக்கும்.
பொய்யிதே என்று புரிந்தும் – அதைப்
புன்னகையோடே கடத்தல் சிறப்பும்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

ஆற்றா அழுகை

வானம் அழுவதனை வழமையாக்கிற் றொவ்வொராண்டும்!
“தோன்றும் வெளிப்பின்றோ” டென்று
உரைத்தவாயே…
நீளும் இது ‘பதினெட்டு’ வரை
எனச் சொல்ல…
வானம் அழுகிறது இன்றும்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆற்றா அழுகை

சிதைவுகள்

யுத்தம் குதற உயிரிழந்து சிதைந்தவைகள்
சத்தியமும் மெய்யும் தருமமும் மட்டுமல்ல..,
திசைகள் சிதைந்தன,
திக்குகள் சிதைந்தன,
அசையாத சொத்துக்கள் அசையும் சொத்தோடு
ஊர்கள் சிதைந்தன, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிதைவுகள்

காக்க முயன்றால்…

கலையாத கனவோடு நனவின்று வாழும்.
கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம்.
விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம்
விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்…

கலியுகம்

நீதியும் நியாயமும் நீர்த்து நொடிந்திடும்
நேரத்தில் வந்து பிறந்துவிட்டோம்.
நேர்மையாய் வாழ்ந்து நெருக்கடிகள் பட்டு
நித்தம் துயரம் சுமந்திருப்போம்.
போதனை வேறு, நடைமுறை வேறெனும்
பொய்மை உலகினில் தான் அலைவோம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலியுகம்

என்ன நடந்தது ஈற்றில்?

தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம்
செய்வோர், அடாவடியாய் முயல்வோர்,
தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால்
‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர்,
ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின்
உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என்ன நடந்தது ஈற்றில்?

கோடைத் தகிப்பு

நீளும் திசையெல்லாம் நெருப்பெறியும் கோடையிலே,
சூழுகிற காற்றினிலும் சூடு கிளம்பையிலே,
வேகுகிற வெய்யிலிலே வீதி கொதிக்கையிலே,
வேர்வை நதிகள் விரைந்து
மேனி மேடுபள்ளத்
தூடு பெருக்கெடுத்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

Posted in Video | Comments Off on சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

ஈற்றில் என்ன ஆகும்?

மூண்டுஎழும் மோதல்களில்
மூச்சிழந்து யாரெவர்…மண்
மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம்
முக்கி உசிரூசலாட வாழ்ந்தார்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஈற்றில் என்ன ஆகும்?

வெற்றிடம் தானோ விளையும்?

வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர்
மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள்
மறைவர்; இடுகாடு சூழும். -இந்த
ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள்
இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ
எமனுக்குத் தானே கொண் டாட்டம்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வெற்றிடம் தானோ விளையும்?