மலைத்தோம் கண்டு!

தீந்தமிழின் அடையாளம்,தெய்வச் சொத்து,
‘சிறுவாழ்வின்- பேருண்மை’ பகரும் வேதம்,
வான் மறை,நற் தெய்வ வாக்கு,அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய
மாந்தருக்கும் அருமருந்து,அமுது,என்று
வேந்தர்முதல் பாமரரும் ஏற்றிப் போற்றும்
மேன்மைமிகு திருக்குறளை வணங்கு கின்றோம்!

திருக்குறளைப் படைத்தளித்த தெய்வச் சான்றோன்
திருவள்ளு வனைப்பணிந்தோம்; அன்னான் அன்று
அருளிய நூல் பலபதிப்புக் கண்டு, யார்க்கும்
அறிவாற்றல் தருகுதின்றும்…மகிழ்ந்து கற்றோம்!
வரலாற்றில் முழுக்குறளை கல்லில், கையால்
வடித்துவைத்து அதற்கென்றோர் வளாகம் கண்ட
சரிதமில்லை; அது ‘மாவை’மண்ணில் இன்று
சாத்தியமாய் ஆகிறது; மலைத்தோம் கண்டு!

‘ராஐராஐன்’… ‘பெருங்கோயில்’தஞ்சை மண்ணில்
சமைக்கையில்…. நாம் பார்த்ததில்லை; அவனின் கோவில்
ஆயிரமா யிரம்ஆண்டு தாண்டி இன்றும்
அவன்பெயரைச் சொல்வதுண்மை! இன்று மட்டும்
கோடிகோடி பேர் வாழ்ந்து திர்ந்தும்…..அன்னான்
கோவில் வாழ்ந்தொளிர்கிறதே! அதுபோல் இன்று
ஓர் வளாகம் திருக்குறளுக் கெழுதல் பார்த்தோம்
உடனிருந்து: இது எமது வாழ்வின் பேறே!

‘திருமுருகன்’ என்ற எங்கள் ‘ராஐராஐன்’
‘சிவபூமி திருக்குறள் வளாகம்’ கட்டி
தரையுள்ள வரைவாழும் சரிதம் செய்தார்!
தனவந்தர், கொடையாளர் உதவி னார் ;இவ்
வரலாற்று நிகழ்வில் நாமும் பங்கு கொள்ளும்
வரம்பெற்றோம்; என்ன தவம் செய்தோம்? ஈஃது
‘இருபத்தைந் தாண்டு வெள்ளி விழாவைக்’ காணும்
‘சிவபூமி’அடைந்த ‘மைல் கல்லே’என்போம்!

‘சிவபூமி திருக்குறள் வளாகம்’, இன்னோர்
‘திருக்குறள் ஆராச்சி நூல் நிலையம்’, மற்றும்
நவ ‘தியான மண்டபம்’,’ஆய்வாளர் இல்லம்’,
நற்செல்வர் கைங்கர்யத் தாலே இன்று
புவிவியக்க ‘மாவை’மண்ணிற் பூத்து; வாடாப்
பொதுமலராய் யுகயுகமாம் வாழும் நின்று!
‘அவதாரம்’ நிகர்த்த ‘திரு முருகன்’ சேவை
அவனியுள்ள வரைபோற்ற படும்காண் இங்கு!

‘செயல்-சிலதைக்’கண்டெவரும் வியப்ப துண்டு!
‘தெய்வஅருள்’, ‘பூதகணப் பலத்தோ’டல்லால்
இயலாது அவை…எனும் ஐதீகம் உண்டு!
இம்மண்ணின் ‘தமிழ்ச் சைவக் குரவர்’ பேச்சால்
உயர்ந்த….. ‘திரு முருகர்’; இடையறாது ‘செய்தும்’
உலகுக்கு உவந்து தமிழ் சைவம் தன்னை
உயர்த்துகிற சேவைகளும் ‘அது’ போல் என்போம்!
உளமார வாழ்த்திப்…பணி தொடர நேர்வோம்!

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு!

உயர்வுக்காய்த் துணையும் நல்கு

யாழ்ப்பாணம் இந்துப் பண்ணை
யாம் பெற்ற இரண்டாம் அன்னை!
வாழ்வில் யாம் உயர…லட்சம்
வரம் தந்த தெய்வ அன்னை!
நாளொரு பொழுதாய்.. நாம் அந்
நாயகி மடி தவழ்ந்து
கேள்வி ஞானத்தால் கற்ற
கீதைதான் ஒன்றா..? நூறு!

அவள் நிறைந்திருக்கும் இல்லம்
ஆலயம் தான் ;பார் போற்றும்
தவப் பெருஞ் சீலர், கற்றோர்,
காலடித் தடம் பட்டாங்கே
குவிந்தது ஞானச் செல்வம்!
குறைவின்றிக் கற்பித் தோர்கள்
கவிந்ததால் ….விரும்பிக் கற்ற
சேய்களால் …..கலக்கும் முற்றம்!

அன்னையின் நிழலில் நின்றோர்
அறிவொடு ஆற்றல் பொங்க
மன்னவர் ஆவார்; தம்தம்
துறைகளில்,வளர்ந்து ஓங்கி
எண்திசை தாண்டி ..விண்ணை
எட்டிநற் புகழும் கொள்வார்!
“அன்னையால் வாழ்ந்தோம்” என்று
அனுதினம் போற்றி நிற்பார்!

யாழ் இந்துக் கல்லூரீயில்
யாம் கற்கக் கிடைத்த பேறு
நாம்.. போன nஐன்மம் பத்தில்
செய்த புண்ணியத்தின் சாறு!
யாழ் இந்து அன்னை நாமம்
ஜகமுள்ள வரை மென்மேலும்
ஓங்க நீ உதவு:தாயின்
உயர்வுக்காய் துணையும் நல்கு!

Posted in கவிதைகள் | Comments Off on உயர்வுக்காய்த் துணையும் நல்கு

உன்னைக் காணல்

ஒவ்வொரு வரும் ஒவ்வோர் விதத்தில் உனைக்காண்பர்.
ஒவ்வொரு வரும் ஒவ்வோர் வழியில் உனைக்காண்பர்,
அற்புதப் பதிகங்கள் பாடி உனைக் காண்பர் சிலர.;
கற்பூரச் சட்டியதன் சூட்டில் உனைக் காண்பர் சிலர்.
கண்மல்கி ஆறுகாலப்
பூசைகளில் காண்பர் சிலர்.
உண்டியலில் விழும் சில்லறையில் காண்பர் சிலர்
பூசும் விபூதி,சந்தனத்தில் குங்குமத்தில்,
பூமாலை கட்டியுன்மேல் போடுவதில் காண்பர் சிலர்.
தூர ஒலிக்கும் மணி ஓசையிலே காண்பர் சிலர்.
ஆரத்தித் தீப ஒளிச்சுடரில் காண்பர் சிலர்,
வார்த்தை “அரோகராவில்”
வடிவாகக் காண்பர் சிலர.;
தூபப் புகையிட்டுச், சுற்றிக் குடைபிடித்து,
ஊதிச்சங் கொலிக்கவைத்து,
சேமக் கலமடித்து,
நாதசுரம் தவிலின் இனிமையிலும் காண்பர் சிலர்,
வேதஒலி சங்கீத மெல்லிசையில் காண்பர் சிலர்,
பஐனைகள் பாடுவதில்,
உருக்கொண்டு ஆடுவதில்,
அடிஅளித்து பாற்செம்பு காவிப் பிரதட்டை
அடித்து விழுந்தெழும்பி
அழுவதிலும் காண்பர் சிலர்,
வெவ்வேறு விதமாய்ப் பிடிக்கும் விரதத்தில்,
எவ்வெவ் அபிN~கம் அருச்சனைகள் செய்வதனில்,
நேர்த்திவைத்து தங்கம், நினைத்த நகைவகைகள்,
கீர்த்திமிகு ‘வாகனங்கள்’
செய்து கொடுப்பதனில்,
காண்டா மணிவார்த்து வழங்குவதில்,
கோவிலிலே

“நான்செய்து தருகிறேன் ஓர்
கட்டடத்தை; இல்லை ஒரு
கோபுரத்தை அமைத்தே கொடுக்கின்றேன்” என்பதனில்,
காண்பர் சிலர்!
ஏழ்மை கலைத்தாலும்….. எளிமையுடன்
சாண்வயிறும் பசிகிடக்க தமக்கேதும் கேட்காது
ஊண்வேண்டும் உலகிற்கு எனநேரும் நேர்த்தியிலும்,
வீண்வார்த்தை பேசாத மௌனத்திலும்…..கேட்கும்
ஆன்மீகப் பேச்சினிலும்,
ஆண்டவனைக் காண்பர் சிலர்!
நானென் கவிதைகளில்…..,
நான் எதுவும் தாராது
மௌனமாய் கேணியடி முகப்பில்….,
நல்லை வீதிதனில்…,
கோபுரத்தின் உச்சியினில்….,
குளிர்ந்த ‘வில்வ மரத்தடியில்’…,
காண்கின்றேன் உன்னை;
நிதம்கதைத்து திரும்புகிறேன்!

Posted in கவிதைகள் | Comments Off on உன்னைக் காணல்

உனது வெற்றிடம்

கடல் சுதி மீட்டிட, அலை ஜதி போட்டிட,
கவி நூறு பாடி வருவாய்.
கனவினில் கண்டவை நனவினில் கைவரக்
கருவியாய்க் கலையைத் தொடுவாய்.
விடையிலாக் கேள்விகள் மிகமிக அதிகமே…
விளங்கிதை; ஞானம் பெறுவாய்.
‘விதியுனைத் தேர்ந்தது – எதையோ நடத்திட’
வினைபுரி நன்று…விரைவாய்.

உனதுவாழ் வென்பது வரையறை கொண்டது
உடலுக்கும் வயது உளது.
உயிர்செய்ய எண்ணினும் உடல் இயலாதழ
உளம் சோரக் கூடும் தொழுது.
உனதிடம் என்பது தனித்துவ மானது
உலகில்; உன் கடமை எஃது?
உணர்; அந்தக் கடமையை உனதாயுள் தீருமுன்
உரிமையாய்ச் செய்தல் அழகு!

உன்கடன் தீர்ந்திடில் உன்பணி நிறைவுறில்
உன்கதை முடிந்து போகும்.
உன்னாலே வந்திடும் வெற்றிடம் தன்னை ஓர்
உயிர் வந்து நிரவி மேவும்.
“உன்வெற்றிடம் வேறு யாராலுமே நிரவ
முடியாது” என்று வையம்
உரைக்க வாழ்; அதுதானே உன்பேரை
என்றென்றும்
உதிராமல் ஆள வைக்கும்!

Posted in கவிதைகள் | Comments Off on உனது வெற்றிடம்

கொடுங் கோடை

தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள்.
ஏப்பம் இடுகிறது அனல்
எட்டுத் திசைகளையும்.
யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது?
யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது?
மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கொடுங் கோடை

அறிதிகொலோ?

காலகால மாக இங்கு வாழும் மெய் உயிர்ப்புகள்,
கல்லை மண்ணை நீரை தீயை காற்றை ஆளும் ஓர் பொருள்,
சூலை – விந்து சேரவே வளர்ந்து வாழுமாம் உயிர்,
சூழும் தாவரத்தில் பூவை – வித்து ஆக்கும் மாதிறண்,
காலிலாதியங்கி வையம் காக்க நிற்கும் சக்திகள்,
கர்மம் தீவினைகளுக்குத் தோன்றும் தண்டனை, இவை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிதிகொலோ?

எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

மனதிலே நிற்கின்ற கவிதையாய் இல்லையே…
மனது தொட்டு வருடியே
மலரென, வாடாத மல்லிகைப் பூவென,
மலரணும் காண்… கவிதையே!
நனவில் நடந்ததைக் கனவில் கிடந்ததை
நவிலணும் சுவை கூட்டியே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

Posted in Video | Comments Off on புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

கவலை

உதிர்ந்த இலைகள், பூ, கிளைகள், வேர்கள் பற்றிக்
கவலைப் படுவதில்லை காண்…
மரங்கள்; கலைந்த
முகில்களை எண்ணி முறைப்பதில்லை வான்; நிலத்தில்
விழும்துளிகள் பற்றி வினவாது மேகம்; வீழ்ந்து
சிதைந்த அலைகள்பற்றிச் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கவலை

மலைத்தோம் கண்டு

தீந்தமிழின் அடையாளம், தெய்வச் சொத்து,
சிறுவாழ்வின் – பேருண்மை பகரும் வேதம்,
வான் மறை, நற் தெய்வ வாக்கு, அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல்,
வைய Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு

புது விதி எழுதிடா!

கண்ணா லுனைக் காண எனக்
கண்ணீருடன் கதறும்…
கையற் றவர் கால ற்றவர்
கதையை மறந்தாயோ?
புண்பட்டவர் நொந்திற்றவர்
புதிரை அவிழ்க்காயோ? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புது விதி எழுதிடா!

அறிக!

பஞ்சம்பசி வந்தும், பாய்ந்து சமர் தின்றும்,
பாறவில்லை மண்ணின் அழகு.
பாறையிடை நன்னீர் ஊறும்; நில ஈரம்
பச்சையுடை போக்குந் தனக்கு.
கொஞ்சும் கடல் செல்வம் கொட்டும்; உயர்வானம்
கொண்டுதரும் சொர்க்க அமுது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிக!

யான்

அடிமையாக இருக்கமாட்டேன்; யாரை யேனும்
அடக்கி அடிமையாக்கிடவும் மாட்டேன்; யார்க்கும்
குடிமைசெய்து வாழமாட்டேன்; குட்டக் குட்டக்
குனிந்தேவல் செய்யமாட்டேன்; யாரும் யாரை
அடக்கவந்தால் அதைப்பார்த்தும் இருக்கேன்; எந்தன்
ஆயுதமாய் கவியெடுத்து யுத்தம் செய்வேன். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யான்

அக்கப்போர்

தேர்தல் வருகிறது – இந்தத்
தேசம் முழுதும் அடித்துப் புரளுது.
ஊர்கள் கொதிக்கிறது – எங்கும்
உற்சாகம் பீறிட் டொளிர்ந்து பெருகுது.
தேர்தலை வெல்வதற்கு – தத்தம்
திட்டங்கள் கொள்கையைத் தம்பட்டம் தட்டி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அக்கப்போர்

ஒரே காற்று

வீசியது ஒரே காற்று;
எமக்குமேல் சுழன்றடித்து
வீசிற்று ஒரே காற்று;
அவன்மீது அது அள்ளித்
தூவிற்று பூக்களை, சுகந்தம், மகரந்தத்தை.
தூவிற்று என்மீது தூசியை, மணல் மழையை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஒரே காற்று