காக்கும் இறை.

எதுவரும் பொழுதிலும், இடர்சுடும் நொடியிலும்,
இடிகளே வீழும் கணமும்.
“எவையுமே தாக்காது எனை”யென் றெனக்குளே
எழும் ஒரு அசரீரியும்.
சதிபல செய்யினும், தருமம் பிழைப்பினும்,
தவிர்த்து…மெய் தனை ஏய்பினும்
சாத்தியம் இது; யான் ‘ இவை’ எதுஞ் செய்யலை
சாராது துன்பம் எனவும்,
விதியினை நம்பியும், வினைகளை நம்பியும்,
மிகுபெரும் இறையின் துணையும்
விடாதெனக் காத்திடும்.
தலைக்கு வருவதை
வீழ்த்தும் தலைப் பாகையொடெனவும்,
மிகநம்பிச் செல்கிறேன்; நம்பிக்கை பொய்க்கலை
விடைபெறும் நெஞ்சின் சலனம்.
விளங்குவேன்… என்வழி தவறின் எல்லாம் மாறும்;
விலகாது எனது பயணம்!

காலமும், கோள்களில் மாற்றமும், நேரமும்,
கைகளைக் கட்டப் பார்க்கும்.
கர்ம வினை, பூர்வ ஜென்ம பலன், பாவக்
கசடுகள் நின்று தாக்கும்.
காலையில் யான் அறியாது செய் பிழை, புலன்
காமத் தவறு தீய்க்கும்.
கட்டவிழ்ந்த மனம், ஆசைகள் ஏக்கங்கள்,
கறுமங்கள் தனையும் சேர்க்கும்.
பாலென யான் இருக்கின்றேன் என நினைப்
பேன்; நீர் கலக்கலாகும்.
பாதையின் கல் முள்ளும் பயணத் தடைகளும்
பதறிடக் கூட வைக்கும்.
பயமின்றிச் செல்லுவேன் அறம், தர்மம், மெய், நியாயம்
பாறாத… உள்ளமொடு நான்.
பலிவாங்க வந்தவை பயந்தோடும்; வெல்லுவேன்
பலியாகேன்; காக்கும் இறை தான்!

Posted in கவிதைகள் | Comments Off on காக்கும் இறை.

நெஞ்சோடு புலம்பல்.

ஏற்றிட முடியா இந்த
இழப்பினுக் கெதைநாம் செய்வோம்?
கூற்றுவன் கொடுமைக் காரன்…
குணநலம் குறைந்தோன்… கண்டோம்.
நேற்றிந்த நேரம் நின்றோன்…
“இன்றில்லை” என்ற உண்மை
காற்றிலே கலக்க வைத்த
காலத்தைச் சபித்தே சோர்ந்தோம்.

எங்களின் கையில் ஏதும்
இல்லையா? விதி காலம் தான்
சங்காரம் செய்து வாழ்வைச்
சரிக்குதா? சமைக்கும் தானா?
எங்கு, யார்க்கு, என்ன, எப்போ?
என்றுமே எழுதி வைத்தார்
இங்கெமை ஆட்டு கின்றார்?
எம் அறிவாற்றல் பொய்யா?

ஓர் கணம், எதிர்பா ராத
ஓர் நொடி, எல்லாம் கூடி
ஓர் விபத்தாகி வாழ்வை
உதிர்த்தது; ஆங்கேதோ ஒன்று
சேராமற் போயி ருந்தால்
மயிரிழை தனிலே தேகம்
சீர் பெற்று எழுந்தி ருக்கும்.
சிதைப்பதா விதியின் தீர்ப்பும்?

“இப்படி நடந்த தேன்தான்?”
என்றெம துளங்கள் ஏங்க,
எப்படி யேனும் தப்ப
வேணுமென் றழுதோம் நாங்க,
எப்படிக் குணங்கள், கொள்கை,
இயல்பிருந் தாலும் “வேண்டாம்
இப்படி நிலைமை” யென்றோம்..
ஏற்கலை விதியும்… மீட்க!

சாதிக்க நினைத்த வர்க்கு,
‘சாத்தியம் அறிந்த’ வர்க்கு,
நீதிக்குப் பணிந்த வர்க்கு,
நியாயத்தை மதித்த வர்க்கு,
வேதனை, சாவைத் தந்த
விதியின் உள் நோக்கம் என்ன?
சா…தனைத் தடுக்கே லாதெம்
தத்துவம் தவிப்ப தென்ன?

எல்லோரும் வாழ…தீயர்
இப்போதும் ஆள…ஆற்றல்
வல்லோனைக் கவர்ந்து காலம்
வான்சேர்த்த கொடுமை கண்டோம்!
எல்லோரும் கையா லாகா-
திருக்கிறோம்; எம்மை மீறி
எல்லாமும் நடக்கக் …கூற்றை
எதிர்க்கேலா தமைதி காப்போம்!

காலமோ, விதியோ, தெய்வக்
கரங்களோ, இழுத்து ஆட்டும்
நூலினில் ஆடு கின்ற
நொடிந்தோரோ நாங்கள்? அந்த
நூல் இடை அறுந்தால்… ஆசை,
நோக்கங்கள் நிறைவு றாது
வீழ்வதோ வாழ்க்கை? இந்த
விடை தேர்ந்த தெவரின் யாக்கை?

கோடானு கோடி பேரில்
குறித்த ஓர் நபரைத் தேர்ந்து…
தேடி, அச் சரியாம் நேரம்,
செக்கனில் சாவைத் தந்து…
கூட வந்தோரைக் காக்கும்
கொடு விதி எழுதிச் செல்லும்
நாடகம் தொடரும்; யார்தாம்
நடிக்காமல் தப்பக் கூடும்?

அவரவர் ‘புரிய’ வந்த…
அவரவர் கடமை தீர,
அவரவர் விடை பெற் றோடும்
அவலத்தை…நாங்கள் யாரும்
எவற்றையும் மாற்ற ஏலா
எதார்த்தத்தை…’வாழ்வர்த் தத்தை’
எவருமே உணராப் பாழை…
இழப்பிலா உணர்ந்தோம்… ஊழை?

என்னதான் பேசி என்ன?
எதை எதை எழுதி என்ன?
இன்னென்ன நடக்கும் என்று
இருந்தாலும்… நடத்தல் வேறு
என்றான யதார்த்த வாழ்வில்
எதுவும் நிச்சயங்கள் இல்லாத்
தன்மையை அறிந்தும்…ஆசைத்
தவிப்பினுள் அமிழ்வோம் மீண்டும்!

Posted in கவிதைகள் | Comments Off on நெஞ்சோடு புலம்பல்.

தீயவர் மாய்வர்.

மாய மந்திர ஜாலம் நிறைந்ததாய்,
மர்மப் பொய்கைகள் சுண்டி இழுப்பதாய்,
மாயைகள் புரி வல்லவர் சூழ்ச்சிகள்
வைத்து மயக்கி விழுத்தத் துடிப்பதாய்,
ஏய்த்து ஏமாற்றி ஆசைகள் காட்டிடும்
எழில்கொள் மோகினிப் பேய்கள் நிறைந்ததாய், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தீயவர் மாய்வர்.

காலத்தோடு ஓடுதல்.

காலமென்பது ஓடுகின்றது.
கால்களும் அதற் கேற்றவாறுதான்
பாலையோ அனற் பாதையோ…அதில்
பாய்ந்துமே பயணித்து உள்ளது.
கால்களில் அடி பட்டிருப்பினும்,
கால்கள் நொண்டவும், ஏதும் நோயினால் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலத்தோடு ஓடுதல்.

உளம் மாற வேண்டும்.

நல்லதிற்குக் காலமில்லை;
நல்ல முயற்சிக்கு,
நல்ல சிந்தனைக்கு,
நல்லதனைச் செய்வதற்கு,
நல்லாரைக் கூடி நடப்பதற்கு,
நாட்டிலுள்ள Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உளம் மாற வேண்டும்.

வேறென்ன வேண்டும்?

சோடனைகள் உச்சமெனத் தோன்றும்
பூஞ் சப்பறத்தில்
ஆரோகணித்து வந்தாள் அன்னை;
புடைசூழ்ந்து
அடியார்கள் கூட்டம் அலைமோத…
நாதவெள்ளம் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேறென்ன வேண்டும்?

பொய்கள் தோற்கும்

பொய்களைக் கண்டு பயந்து – அதைப்
புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து.
நைந்து மனங்கள் நலிந்து – ஊரில்
நாலுபேரின் முன் குனிந்து
செய்வதறியாதிருந்து – வாழ்தல்
தீது; இதற்கு மருந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கள் தோற்கும்

நீதி வெல்லும்.

காலமொன் றிருக்குது.
கடவுள் தீர்ப் பிருக்குது.
வாலையாட்டும் தீமைகள்
மாய்ந்த மெய்யிருக்குது.
போலி வேசம் பொய்மைகள்
போர்க்கு நின்ற போதிலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நீதி வெல்லும்.

தூயவை துணிந்துவிட்டால்

தூயவை செய்யத் துணிந்திடில்- இடர்
துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே-
அவை
மாயும் அகலும் வழிவிடும் – என
மா அறிஞர் முன்புரைத்தனர்- அது
நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தூயவை துணிந்துவிட்டால்

பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

பொய்கட்கு ஆயுளோ அற்பம்- அதைப்
பொருந்தாது சொல்லிடின் யார் ஏற்பர் நித்தம்?
பொய்களை மெய்போலச் சொல்லும்- பொய்யர்
புளுகையும் ஏற்காது புவிகேட் டொதுக்கும்.
பொய்யிதே என்று புரிந்தும் – அதைப்
புன்னகையோடே கடத்தல் சிறப்பும்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

ஆற்றா அழுகை

வானம் அழுவதனை வழமையாக்கிற் றொவ்வொராண்டும்!
“தோன்றும் வெளிப்பின்றோ” டென்று
உரைத்தவாயே…
நீளும் இது ‘பதினெட்டு’ வரை
எனச் சொல்ல…
வானம் அழுகிறது இன்றும்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆற்றா அழுகை

சிதைவுகள்

யுத்தம் குதற உயிரிழந்து சிதைந்தவைகள்
சத்தியமும் மெய்யும் தருமமும் மட்டுமல்ல..,
திசைகள் சிதைந்தன,
திக்குகள் சிதைந்தன,
அசையாத சொத்துக்கள் அசையும் சொத்தோடு
ஊர்கள் சிதைந்தன, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிதைவுகள்

காக்க முயன்றால்…

கலையாத கனவோடு நனவின்று வாழும்.
கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம்.
விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம்
விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்…

கலியுகம்

நீதியும் நியாயமும் நீர்த்து நொடிந்திடும்
நேரத்தில் வந்து பிறந்துவிட்டோம்.
நேர்மையாய் வாழ்ந்து நெருக்கடிகள் பட்டு
நித்தம் துயரம் சுமந்திருப்போம்.
போதனை வேறு, நடைமுறை வேறெனும்
பொய்மை உலகினில் தான் அலைவோம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலியுகம்

என்ன நடந்தது ஈற்றில்?

தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம்
செய்வோர், அடாவடியாய் முயல்வோர்,
தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால்
‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர்,
ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின்
உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என்ன நடந்தது ஈற்றில்?