என்ன நடந்தது ஈற்றில்?

தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம்
செய்வோர், அடாவடியாய் முயல்வோர்,
தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால்
‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர்,
ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின்
உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர்,
ஓங்கி உயர்கிறார்; உண்மையாய் நேர்மையாய்
ஊழல் செய்யாதவரோ…நலிவார்!

சட்டம் எதையும் ‘தனத்தை’ எறிந்துமே
தன்கட்டுப் பாட்டினில் கொண்டுவந்து,
தகுதி யிலாத பொழுதும்… உயர்ந்தோரைச்
சார்ந்து அவர் கை, கால், வால்பிடித்து,
திட்டப்படி தன் பதவி திரு புகழ்
சேர்த்து “அசைக்க ஏலாது” என்று,
தீமை பழிகட்கு அஞ்சாது, சம்பவம்
செய்வோரே ஆள்கிறார் இன்று வென்று!

இந்தக் கலியினில் எல்லாம் தலைகீழாய்
இங்கு நடப்பது தான் வழமை.
ஏய்த்துத் திருடி, ஊர் தன்னைத் தட்டிச் சுற்றி
இடறி விழுத்தியே தன் கடமை-
முந்தி ஜெயித்திட வைத்து; புகழ், திரு
முன்னிலை காண்பதற்கே தலைமை
முக்கியே கொள்வார்; முயன்று உழைப்பவர்
முப்பொழுதும் வீழுவதே நிலமை!

“இப்படியே விதி நீண்டு நிலவுமோ”
என்று அடிக்கடி கேள்வி எழும்.
இன்று வரை பல இப்படி நேர்ந்தது
‘என்ன நடந்தது ஈற்றில்’…சொ(ல்)லும்?
சப்பியே துப்பும் சரிதம்…அதர்மத்தை;
தர்மமும் உண்மையும் தான் ஜெயிக்கும்!
சான்று பல இருந்தாலும்…’மனமந்தி’
சந்தேகத்தோடே நிதமலையும்.

Posted in கவிதைகள் | Comments Off on என்ன நடந்தது ஈற்றில்?

கோடைத் தகிப்பு

நீளும் திசையெல்லாம் நெருப்பெறியும் கோடையிலே,
சூழுகிற காற்றினிலும் சூடு கிளம்பையிலே,
வேகுகிற வெய்யிலிலே வீதி கொதிக்கையிலே,
வேர்வை நதிகள் விரைந்து
மேனி மேடுபள்ளத்
தூடு பெருக்கெடுத்து
உடலைக் கழுவையிலே,
ஒற்றி எடுக்க… ஒத்தடங்கள் தான் பிடிக்க…
முற்றத்தில் தேடிவந்து முத்தமிட…
இளம்காற்று
வாராக் கொடுமையிலே,
மனம் உடலும் தகித்தபடி
சீராட்ட ஆட்களில்லாத் தீய்ந்த தனிமையிலே,
வாடிக் கிடக்கின்றேன்.
வரண்டு வெடிக்கின்றேன்.
கூடவில்லை மகிழ்வு குத்தி முறிகின்றேன்.
இப்படியோர் சூழலிலே…
எதையும் வறுத்தெடுத்துச்
சப்புகிற கோடையிலே…
தளிரும் செடிகொடியும்
சோர்ந்து துவழ்கையிலே…
ஓரிரு துளி உதிர்த்துத்
தூவாதோ ஏதும் முகில்கள்?
துடித்தவையும்
வாடி வரண்டனவோ?
வானில் மழை துளிர்க்க
ஏதும் சமிக்ஞைகள் இல்லையோ?
வாடுமிந்த
ஈரமிலாக் கோடையை இதமாக்கக்
குளிர் குழைத்து
யாரேனும் பானங்கள் தாராரோ?
குளிரூட்டி
போல் எவரும் போக்காரோ புளுக்கத்தை?
சிலிர்ப்பூட்டி
யாரேனும் பாடாரோ?
எவரேனும் பனிப்பொழிவாய்
ஏதும் ஒருசிந்து, எழிற்கவியை,
மெல்லிசையை
வீசாரோ எம்மேல்?
வீணை, வயலினினால்
தூவாரோ பன்னீர்?
துரத்துமிக் கோடைவாழ்வில்
ஏதும் இதம்அருள
இறைவர் விரும்பாரோ?
சூழலின் கோடை, தொடர்ந்தடிக்கும் போர்க்கோடை,
வாழ்க்கையின் கோடைக்கும்,
தீர்வினையார் தருவாரோ?

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

Posted in Video | Comments Off on சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

ஈற்றில் என்ன ஆகும்?

மூண்டுஎழும் மோதல்களில்
மூச்சிழந்து யாரெவர்…மண்
மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம்
முக்கி உசிரூசலாட வாழ்ந்தார்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஈற்றில் என்ன ஆகும்?

வெற்றிடம் தானோ விளையும்?

வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர்
மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள்
மறைவர்; இடுகாடு சூழும். -இந்த
ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள்
இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ
எமனுக்குத் தானே கொண் டாட்டம்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வெற்றிடம் தானோ விளையும்?

மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள்.
போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள்.
பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய
பலரையும் தேடித் தின்றது ஏவு கணை.
பாடு பட்டவர், பகலிர வாகத் தம்
பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

நரகமாகும் நகர்கள்.

எங்கும் அழிவுகள்.
எங்கெங்கும் சிதைவுகள்.
எங்கும் புகைமூட்டம்.
எங்கெங்கும் தீப்பரவல்.
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்…
பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நரகமாகும் நகர்கள்.

நடு நிலைமை

வாழ்க்கையெனும் பட்டத்தின் வாலினையும்
அதை ஏற்றும்
நூலினையும் அறுத்துவிட்டு
நோண்டுது ‘நிகழ்காலம்’.
என்செய்யும் வாழ்க்கைப் பட்டம்?
இடர்க்காற்றில், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நடு நிலைமை

தமிழ் வாகை சூடும்.

எங்கள் தமிழின் மகிமை; – அதன்
இனிமை, கனிவு, அருமை, பெருமை;
எங்கள் தமிழ் ஆழ நீளம்; – அதன்
இயல்பு, செழிப்பு, புதுமை புகுந்தும்
மங்காது பழமையும் காக்கும் – குணம்;
வரலாற்றுக் கேற்ப தனைமாற்றும் பண்பு; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ் வாகை சூடும்.

எவரிருப்பார்?

விடிவொன்று வருமென்று மனமிருக்கும் – அது
விளைவென்ன தருமென்று இனமிருக்கும்.
முடியாதோ இடரென்று சனமிருக்கும் -யாரும்
முயலார்கள்; இழிவோடே நனவிருக்கும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எவரிருப்பார்?

வாழ்வின் யதார்த்தம்.

அடுத்த கணமென்ன ஆகுமெனக்
கண்டறிய
முடியாத வாழ்வினிலே…
மோதி அடிபட்டு,
ஏதேதோ ஏக்கங்கள் தீர்க்கும்
அவா… குறையாப் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் யதார்த்தம்.

வலியது விதி

எப்படித்தான் எமைப்பாது காத்த போதும்
எமனிடத்தில் இருந்தெவரும் இலகு வாகத்
தப்பிவிட முடியாது; தருணம் வந்தால்
சரியாக நமைக்காத்தே நடந்த போதும்…
எப்படியோ ஏதோ ஓர் ரூபத் தோடே
எமன்வருவான்; பிடர்பிடித்துத் தள்ளிச் சாவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வலியது விதி

கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே
மென்மை மிகு நேசம்,
கருணை, ஜீவ காருண்யம்,
தீயவை சிந்திக்காச் சிந்தை,
பிறர்க்கேதும்
தீங்கு விளைவிக்காச் செயல்கள், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே…
காலத்தின் காற்றுந்தன்
பக்கம் அடிக்கையிலே…
காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே…
காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே…
இந்தக் கணம், அடுத்த கணம், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்

வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில்
பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது.
மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று
வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்