கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

நாற்பது ஆண்டின்முன் நாற்றாய் எழுந்து…வந்த
காற்று, புயல்,மழையைக் கடந்து…
தினம் தினமும்
கிளைத்துத் தளைத்துக்
கெதியாய் மரமாகி,
வளர்ந்து விருட்சமாகி,
வானளையக் கிளைபரவி,
நிழல்விரித்து பலரும் நிமிர மடியாகி,
அழகோடும் ஆன்ற அறிவோடும்
சிறப்போடும்
விளங்கிடுது இது!
ஊரை விட்டு உலகளாவி
இரசிகர் களைத்தேடி,
இரசிப்பு தனைத்தாண்டி,
வரமிதனின் சொந்தம் உறவென்று
மனதாலே
இணைந்தோர் பலர் கூடி,
இன்றும் மிகச்செழித்து
இணையில்லா நிழலூடு இதம்பரப்பி,
“இவ்வூரின்
அடையாளம் இதும்” என்றும்
அற்புதங்கள் செய்கிறது!
இந்த விருட்ச நிழலின் கீழ்
ஆற்றலுள்ளோர்
வந்தமர்ந்து தம்தம் வரத்திறனைத்
திசைக்குரைத்தார்!
கிளை கொப்பில் புறாக்கள் கிளிகள்
மைனாக்கள்
எழுந்தருளிப் பாவகைகள் கீதம் இசைத்திருக்கும்!
வருடங்கள் தோறும் வரும் வசந்தம் போல் நாளில்
விருட்சம் புதுப்பொலிவாய் மிளிரும்.
அதன் சூழல்
திருவிழாவாய் மாறும்.
தேடி வந்து பசியாறி,
களைப்பாறி, பேச்சு கவி நடனம் இசையென்று
பொழிகின்ற கிளிகள், புறாக்கள்,
கலைக் குயில்கள்,
சூழலினைக் கட்டியே போடும்.
தொடர்ந்துயர்ந்து
வான்கடந்து விண்ணை வளைத்து
வளர்ந்தின்று
எந்த துயர் இடர்க்கும் அசையா நிமிர்வோடு
இன்றும் செழிக்கிறது இவ்விருட்சம்!
இன்றுவரை
எத்தனையோ பட்சிகள்
இதைப்பிரிந்து போனாலும்…,
எத்தனையோ சீவன்கள் கருத்து வேறு பட்டாலும்…,
‘புத்தம் புதியவைகள்’ அப்பப்போ
புகுவதனால்,
நித்தநித்தம் வெற்றிடங்கள்
நிரப்பப் படுவதனால்,
கிளைகள் சிலமுறிந்து
சில பக்க வேர்கள்
அழுகிச் சிதைந்தாலும்…
‘ஆதார ஆணிவேர்’
இன்றும் எல்லாமு மாயிருக்க;
ஆணிவேர்
நன்றாய் இயங்குமட்டும்;
நாளும் அதன் இயல்பு
குன்றாமல்…
ஆற்றல்,குணங்கள், தரம், திறமை
இன்றும் குறையாமல்…
யார்க்கும் தமிழ் நீழல்
தந்தித் ‘தனிவிருட்சம்’
சரிதம் படைக்கிறது!
சொந்த முயற்சியால் துளிர்க்கும்
இன்னும் நூறாண்டு!

Posted in கவிதைகள் | Comments Off on கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

உயிர்ப்பழியா இசை.

இசையின் இதம் நீ;
உயிர்ப்பென்றும் குன்றாத
இசையின் பழமை, எழில், நவீனம் நீ;
அழியாத
இசையுன் இசை! வயது மூப்புவந்தும்
இளமைகுன்றா Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பழியா இசை.

குளிர்த்திப் பொங்கல்.

ஆர்க்கும் பறையதிர்வு அயலை உருவேற்ற…
தீச்சட்டி, அடுக்குத் தீபம்,
கொழுந்துவிட்டு
நூரா தொளிர…
கரும்புகையும், கற்பூர
வாசமும், சாம்பிராணி மணமும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on குளிர்த்திப் பொங்கல்.

பிழை பொறு.

பசுமைகள் பூசியே படரும் பொன் வயல்களும்
பரவி ‘இங்கிதம்’ தந்திடும்.
பலசாலி நானெனப் பவிசோடு முகம் காட்டி
பனை சுற்றி அணை போட்டிடும்.
கசிந்தூறும் கவிதையாய் அருளூறும் பொய்கையுன்
கழல் சுற்றிக் குளிரூட்டிடும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிழை பொறு.

காரணி

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வித வாழ்க்கை.
ஒவ்வொரு உயிர்க்கும்
ஒவ்வொரு வகை வலிகள்.
ஒவ்வொரு உடற்கும் ஒவ்வொரு விதி,
துன்பம்.
ஒவ்வொரு வருக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காரணி

காணக் கிடைக்காக் கவின்

காணவே கிட்டாத கும்பாபி ஷேகத்தின்
காட்சிகள் காணல்… வரம்.
காலம் கனிந்தது, கனவும் பலித்தது,
‘கண்டு- கொள்வாய்’ புண்ணியம்.
மாசம் இப் ‘பங்குனி உத்தரக்’ காலையில்
மகா கும்பாபிஷேகம் நிகழும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காணக் கிடைக்காக் கவின்

பயணி

இந்தத் தெருஅறியும் எது தனது தொடக்கம்,
எந்த இடம் தனது முடிவு, அந்தம்,
என்பதனை!
அதிலே பயணிக்கும்
அனேகர் அறிவார்கள்
எது தொடக்கம் முடிவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பயணி

கோடைத் தகிப்பு

ஆயிரம் ஆயிரம் அனற் சுவாலைக் கைகளினை
நாலு திசைகளிலும் நகர்த்தித்,
தன் கொதிப்பைக்
கோடையாக்கி, திக்குகளைக்
கொள்ளிவைத்தும் கொழுத்தி,
சூட்டை ஒளியைச் சுரக்கின்றான் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

கூடி வாழ்

“யாரும் தேவையில்லை” என்று யாருமிங்கு வாழலாம்.
யாரையும் வெறுத்து நீ…ஒதுங்கி நின்று ஆளலாம்.
“யாரையும் நாம் நம்பவில்லை” என்று பலரும் கூறலாம்.
“யமனும், நோயும் என்ன செய்யும்”என்றும் மமதை கொள்ளலாம்.
“காசு, பட்டம், பதவி,உண்டு” என்று நீ நினைக்கலாம்.
“காசெறிந்தால் யாவும் ஆகும்” என்று நீ விசுக்கலாம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கூடி வாழ்

யாராலே வாழும் அறம்,தர்மம்?

யாருக்கும் மற்றவரைப் பற்றிக் கவலையில்லை.
யாருக்கும் ஏனையோர்கள் மீது
அன்பு, இரக்கமில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யாராலே வாழும் அறம்,தர்மம்?

பிரகடனம்

நெஞ்சில் நேர்மையும், வாயிலே உண்மையும்,
நீதியின் வழி சென்றிடும் கால்களும்,
அஞ்சிடாது தவறைத் திருத்திடும்
ஆற்றலும், பணம் காசு பதவியில்
கொஞ்சமும் பற்றற்ற குணமும்…நம்
கோவில் குளம் பழ மரபில் நம்பிக்கையும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிரகடனம்

நிலை

சோத்துக்கு வழியில்லை. சோதனைக்கு முடிவில்லை.
சோத்தியாய்த்தான் நாடு…ஆனால்
சோடனைக்குக் குறைவில்லை.

தலையில் முடியில்லை.
வளர வழிகளில்லை.
விலைமிகுந்த கொண்டையுடன்
வேசத்திற் களவில்லை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நிலை

மர(ன)ம்

மரம் தனது அன்பை
அயலிலுள்ள உயிர்களுக்குத்
தருகிறது… பூக்கள், காய்கள்,
பழம் விதையாய்;
இதநிழலாய்;
கிளைகள் இலைகள் அசையவரும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மர(ன)ம்

மெய்

மெய்யென்று சொன்னது பொய்யாகிப் போனதே
மேனியைத் தீ தின்றதே!
மீட்டிய நினைவுகள் மட்டுமே மிஞ்சுதே
மெய்யுடல் இன்றில்லையே!
ஐயகோ எத்தனை அழகு புனைந்தனம்
அடிக்கடி குளிப்பாட்டியே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மெய்

எதார்த்தக் கவிதை எழுது!

கண்களில் ஆயிரம் கனவு ததும்பக்
கவிதை எழுதடா கவிஞா!
காலத்தை வென்றிடும் கற்பனை கூட்டி நற்
கருத்தை விதையடா கவிஞா!
புண்களை மாற்றிடும் பொது மருந்தொன்றையே
பூசடா கவிதையாய்ப் புலவா! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எதார்த்தக் கவிதை எழுது!