எப்படித்தான் ஓடிற்று இருபத்தேழு நாட்கள்?

வில்லங்கம் ஏதுமின்றி வெகு விமரிசையாக
‘நல்லூர்த் திருவிழா’
நடந்து முடிந்ததென
நிம்மதிப் பெருமூச்சு நிறைகிறது!

கடலாக
இம்மண்ணை மூடி
எங்கெங்கோ இருந்துவந்த
ஈசற் சனக்கூட்டம்
எங்கே பறந்துபோச்சு?
மனமெங்கும் வசந்தம் மலரவைத்த
இருபத்தேழ்-
இனிமைநாட்கள் எப்படிக் கழிந்ததெனும் ஆச்சரியம்
போன வருடம்போல்
எழுகிறது இம்முறையும்!

அடுத்தடுத்து நூறு, ஆயிரம் வியப்புகளை
இடைவிடாது பரவவைத்த எசமான்,
குருக்கள்மார்,
சிறுதொண்டர், பணியாளர்,
‘சிவப்புச் சால்வை’ அன்பர்,
“அப்பாடா” என்றாசு வாசமாய் அமராமல்…
இப்போ…’வழமைநிலை’ வர ஓடி இயங்குகிறார்!

தேர்முட்டி அடைபட்டு சீமெந்துக் கட்டுகட்டி
மூடியாச்சு.
மஞ்சம், கைலாச வாகனங்கள்,
போயின தம்தம் இருப்பிற்கு.
சப்பற
பூச்சப்பறச் சலாகை தடி பலகை கழற்றி
சீராய் அடுக்கியாச்சு.
சகடைகட்கும் பாதுகாப்பு
வேலி அமைச்சாச்சு.
வீதி உலா வாகனங்கள்
யாவும் அவையவற்றின் இடத்தில்
துணிச்சீலை
மூடி ஒதுக்கியாச்சு.
‘கொம்புகள்’ கவனமாக
அந்தந்த தளத்தில் மழைபடாமல் வைத்தாச்சு.
கொடித்தம்பம், குத்து விளக்கு, பூசைப் பொருட்கள்,
நடமாடும் மணி, கற்பூரவண்டி, ‘சிவப்புவெள்ளைக்
கொடிச் சீலை, கொடிகள்,
எங்கோ – அங்கு போயிற்று.
இந்தப் பராமரிப்பால் இவை பல ஆண்டுகளாய்
இன்றும் பயன்படுது.
களற்றிவைத்த வெளிவீதிக்
கம்பிவேலி,தூண்கள் கட்டி முடிகிறது!

இனிவழமை நாட்கள்.
இனி வழமைப் பூசை.
இனி வழமை ஆட்கள்.
இனி வழமை அமைதி.
இனிஏதும் இடைஞ்சல் இரைச்சல் புகைச்சலில்லை.
சனவெக்கை இனியில்லை.
சாமான் விற்ற சத்தமில்லை.
கலகலப்பு கிளுகிளுப்புக் கரைச்சலில்லை.
கோவிலுக்கு
வழக்கமாக வந்துபோகும் சிலரோடு
நாமுந்தான்
வழிபடுவோம்;
நெருக்கடிகள் ஏதுமில்லை!
இந்த முறை
வழமைபோல்…’புதுப்புது விடயங்கள்’
திருவிழாவை
ஒளிரவைத்து அடியாரை உவகைகொள்ள வைத்தனகாண்!

போய்வருவோர் ‘மணி அடித்துப்’ போன முன் இரும்புவேலி,
“பன்னிரெண்டு கையும் சேவற் பதாதையும்”
என்று வசந்த மண்டபப் பூசைமுன் ஒலித்த கானம்,
கொடியேற்றி கொடியிறக்கி சுவாமி உள் வீதி சுற்றி
வர…எட்டு மூலையிலும்
நடனத்துடன் தீபம்,
இரவுத் திருவிழாவில் ஒன்றையொன்று விஞ்சிய
நிற மாலைச் சாத்துபடி, வேல் புனைந்த தலைப்பாகைகள்,
வெளிவந்த புதுத் ‘தங்க வாகனங்கள்’,
நீண்ட…
வளைந்த… குழல் கொம்புப் பிளிறல்,
முன் மண்டபத்தில்
‘அலங்காரா – நல்லூரா’ வாசகம்,
அதை உரைத்த கோஷம்,
‘வாழ்க சீர் அடியரெல்லாம்’
என்ற பொதுப் பதாகை,
லோக ஷேமம்கருதி வெளி வீதியிலே
‘சாம வேதம்’,
ஆம் ‘பட்டித் திருவிழா’ வில் ‘ஆஸ்த்தான காளை’, நற்
‘பேர்’ பெற்ற பசுக்கள்,
அவைக்கு ‘விசேச வெண்பொங்கல்’,
கீரை கொடுப்பு,
கோபியர் நடனம், ‘கந்தர்-
சிறுவர் மாம்பழக் கடன்திட்டம்’
தொடர்ந்த
‘ஒரு முகத் திருவிழாவில்’
உலகம் வியந்து பார்க்கும்
“பரியேறி வாறார்” ‘பராக்’ கின்முன்
சிலிர்க்கவைத்த
திருவாசகப் பாக்கள்,
திகைக்கவைத்த சப்பறம்,
தேர்த்-
திரைச்சீலை நவீனம்,
திருவாசிகளிற் தங்கம்,
பெருந்தேரில் பவுண் தகட்டுப் பதிப்பு,
தீர்த்தத்
தினம் ஐந்து தங்க வாகனங்களில் சுவாமி
மினுங்கி வெயிலில் ஜொலித்தஎழில்,
‘சிருங்கார
மண்டபமாய்’ முன்வாசல் மாற…
ஊர் திரண்டிருந்து
கண்ட ‘திருக் கல்யாணம்’,
தாலிகட்டி முடிய
“குமார கல்யாண வைபோகமே”
என இசைத்த
செமகானம்,
என்று…சிறப்பு புதுமை பொங்கிப்
பொலிய; மின்னி முழங்கி
விரைந்துபோச்சு
‘இருபத்து ஏழ்நாள்’ எழில்விழா!
அடுத்தவிழா
வருமட்டும் இந்த வசந்த நினைவுகளை
இரைமீட்டு எம்மனங்கள்
இனிமை காணும்.
இதில் கிடைத்த
வரங்களினால் வாழ்வு மலரும்; வரும்
இடரை வெல்லும்.

Posted in கவிதைகள் | Comments Off on எப்படித்தான் ஓடிற்று இருபத்தேழு நாட்கள்?

யானிருப்பேன் என்று…

என் வாழ்வில்; நாற்பத்தைந் தாண்டின்மேல்…
யான் பிறந்த
என்நல்லூர் மண்ணிருந்து
‘எனக்கு நினைவு
என்று தெரியத் தொடங்கியதோ’ அன்றிருந்து…
கண்டு சிலிர்த்துள்ளேன்… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யானிருப்பேன் என்று…

காவல் தெய்வம்

காலனாக வந்து மண்ணில் வாழுகின்ற வைரவர்.
காவல் நின்று ஊரை வாழ்த்தும் ‘மண்டையோட்டு மாலையர்’.
சூலம் வீசி தீ நுதல்களாலே தீமை தீய்ப்பவர்.
தொல்லை செய்யும் மாய மந்திரம் துரத்திச் சாய்ப்பவர். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காவல் தெய்வம்

அனுதினமும் அலங்காரம்.

‘அலங்காரக் கந்தனுக்கு’ அனுதினமும்…
விதவிதமாய்
அலங்காரம்!
வெவ்வேறு அழகு நிற மலரில்
மாலை புனைந்து;’சாத்துப் படி’
வடிவாய்ச் சோடித்து; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அனுதினமும் அலங்காரம்.

காத்து நமையுயர்த்து!

நெஞ்சின் கவலையிடர் நீறவைத்து,
நம்மனதின்
சஞ்சலங்கள் சாய்த்து,
தலைகோதி மெய்வருடித்
தஞ்சமும் தந்து,
தழுவிடுவான் நல்லூரான்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காத்து நமையுயர்த்து!

இருபத்து நான்கு ஆண்டின்பின் இன்று….

அந்த இனியகாலம் அகன்று மறைந்துபோய்
இன்று ‘இருபத்து நான்காண்டு’!
‘அது’ எங்கள்
வாழ்வின் வசந்தகாலம்.
மனம் துள்ளிக் குதித்த காலம்.
கால் கையில் தளைகளற்று, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இருபத்து நான்கு ஆண்டின்பின் இன்று….

அரண் செய் ( நல்லைக் கந்தர் அநுபூதி)

திரு நல் லையதன் திருநாள் களிலே
திசைகள் அளந்து தினம் சுற் றிவரும்
கருணைச் சுடரே! கதியற் றுழல்வோர்
கவலை களைநீ களைவாய் களையாய்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அரண் செய் ( நல்லைக் கந்தர் அநுபூதி)

பன்னிரெண்டு கண்திறந்து பார்

பன்னிரெண்டு கண்திறந்து பாவிகள் எங்களினை
இன்றைக்குப் பாரைய்யா!
என்றென்றும் பாருமையா!
நெற்றிக்கண் நெருப்பிருந்து நிலைத்து , ‘மும் மல’ அசுரர்
பற்றி எரியவைத்த பரம்பொருளே… இன்று நம்மில்
தொற்றும் துயரெல்லாம் சுடு; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பன்னிரெண்டு கண்திறந்து பார்

கிளியானதென் மனது

சூழ்ந்த பகற்திரவம் சொட்டுச் சொட்டாய் வடிய,
சூழும் இராத்திரவம் துளித்துளியாய்
வழிந்துவர,
பொன்னந்தி கருக,
மைம்மற் புகார் மூட,
மென்குளிர்க் காற்றுவீசி மேனி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கிளியானதென் மனது

இன்று…

‘இந்த நேரத்தில் ……தான்’.
‘சனாதிபதி……தான்’.
‘வெல்லும்……..’
‘தேசமே பயப்படாதே’.
‘…….. விரட்டுவோம்’.
எங்கள் தோழர்….., Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இன்று…

கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

நாற்பது ஆண்டின்முன் நாற்றாய் எழுந்து…வந்த
காற்று, புயல்,மழையைக் கடந்து…
தினம் தினமும்
கிளைத்துத் தளைத்துக்
கெதியாய் மரமாகி,
வளர்ந்து விருட்சமாகி, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

உயிர்ப்பழியா இசை.

இசையின் இதம் நீ;
உயிர்ப்பென்றும் குன்றாத
இசையின் பழமை, எழில், நவீனம் நீ;
அழியாத
இசையுன் இசை! வயது மூப்புவந்தும்
இளமைகுன்றா Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பழியா இசை.

குளிர்த்திப் பொங்கல்.

ஆர்க்கும் பறையதிர்வு அயலை உருவேற்ற…
தீச்சட்டி, அடுக்குத் தீபம்,
கொழுந்துவிட்டு
நூரா தொளிர…
கரும்புகையும், கற்பூர
வாசமும், சாம்பிராணி மணமும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on குளிர்த்திப் பொங்கல்.

பிழை பொறு.

பசுமைகள் பூசியே படரும் பொன் வயல்களும்
பரவி ‘இங்கிதம்’ தந்திடும்.
பலசாலி நானெனப் பவிசோடு முகம் காட்டி
பனை சுற்றி அணை போட்டிடும்.
கசிந்தூறும் கவிதையாய் அருளூறும் பொய்கையுன்
கழல் சுற்றிக் குளிரூட்டிடும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிழை பொறு.

காரணி

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வித வாழ்க்கை.
ஒவ்வொரு உயிர்க்கும்
ஒவ்வொரு வகை வலிகள்.
ஒவ்வொரு உடற்கும் ஒவ்வொரு விதி,
துன்பம்.
ஒவ்வொரு வருக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காரணி