இன்று வரை…

தோண்டக் கிழங்குவரும்
வளம்சூழ்ந்த நம் அயலில்
தோண்ட… எலும்புகளின் கூடுவரும் துயர்க்காலம்!
சுடலைதான்;
‘எரிக்கும் சுடலைதான்’;
அதற்குளின்று
கிடைப்பதுவோ… தாட்ட எலும்புகளின் நதிமூலம்!
இன்றுவரை ‘முப்பத்து மூன்று’;
எத்தனைதான்
இன்னும் வரவுளதோ?
இதுபோல எங்கெங்கு
மனிதப் ‘புதையல்கள்’ மறைந்து கிடக்கிறதோ?
இனம்,மதம், மொழி, சாதி
இவற்றில் தெரிகிறதோ?
யாரிவர்கள்? ஏன் சாய்க்கப் பட்டார்கள் இவர்கள்?
யார் எப்ப புதைத்தார்கள்?
ஏன் இங்கே புதைந்தார்கள்?
காணாமற் போனவரா? கடத்தப்பட் டிற்றவரா?
தேடியவர் எங்கே?
சிறுவர் – பெரியவராய்
வாடியதன் காரணம்தான் என்ன?
இவர் வெற்றிடத்தை
மூடியதா காலம்?
முன்னே…. தனித்தனியாய்,
ஒன்றோடு ஒன்றாய்,
உயரங்கள் வேறுவேறாய்,
சின்னவர் பெரியவர் சேர்ந்தபடி,
பாடசாலைப்
பையோடு சிறுஉருவம்,
பக்கத்தில் நொருங்கிக்
கைவளையல் சிலது,
இன்னுமென்ன வகைவகையாய்…
வரவுள்ளன தொடர்ந்து?
இவை சாட்சிகளாய் ஊர்க்கு
அறையவுள்ள உண்மையெது?
இவை சுமந்த வதை,அவலம்…
மரணபயம், வலி,நோ, ஓலமிந்த
மண்ணோடு
கரைந்து சிதைந்துக்க…
தம் கதையை உலகிற்கு
உரைக்க முயன்றுளதா ஒவ்வொன்றும்?
அவற்றினது
இறுதிமூச்சு இன்றும் இக் காற்றில்
அலைந்திருக்கா?

Posted in கவிதைகள் | Comments Off on இன்று வரை…

வேண்டாத போர்

“வாழத்தான் பூமிவந்தோம்;
வதைசுமக்க அல்ல” என்று
போரை வெறுத்து
புதுமையுடன் அன்பினது
ஆழ இணைப்பில் அனைவருமே ஒற்றுமையை
ஆளத்தான் காத்திருந்தோம்!
“யாவருமே… வாழ்வினர்த்தம்
என்ன” என அறியும்;
“இயற்கை மறைத்துவைத்த
எண்ணற்ற அதிசயங்கள் இன்னும்
இருக்கு” எனக்
கண்டு உணரும்;
களிப்பு, மகிழ்வு, சுகம்,
இன்னுமென்ன உண்டோ…
எல்லாம் அனுபவிக்கும்;
ஆசை ஏக்கம் அவாவோடு…
ஆயிரமாய்ச்
சூழ்ந்து இடர் தடைகள் தோன்றி வறுத்தாலும்….
ஓர் நாள் விடிவு ஒளிபெற்று மின்னுமென்று
காத்துக் கிடக்கின்றோம்!
கடவுள் காப்பாரென்றும்;
‘ஆத்தையப்பா வான – இயற்கை விதி’
மீட்குமென்றும்;
எங்கள் உழைப்பும், எமதுறவும்,
எம் அறமும்,
எங்கள் இலட்சியமும்,
எங்கள் நம்பிக்கையதும்,
நிச்சயம் உயர்வொன்றை
”இறுதி’யின்முன் நீட்டிவிடும்
அச்சம் ஐயமில்லை ஆனந்தம் சூழுமென்றோம்!

ஆனால் சிலநீசர்…
ஆயிரம் வியாக்கியானம்,
ஏதேதோ கொள்கை, எதுவெதுவோ கோட்டாடு,
ஏதேதோ தத்துவங்கள், எதுவெதுவோ வாகடத்தைக்,
காரணமாய்க் காட்டி;
கண்சிவந்து கைமுறுக்கி;
சேர்த்துவைத்த ஆயுதங்கள் தீட்டி;
பலர் தடுக்க
போர்போர் எனமுழங்கி;
போதாக்குறைக்குப் போய்
வீணாகச் சீண்டி வேண்டியே கட்டுகிறார்!
“நாமும் குறைந்தவர்கள் இல்லை”
என நாண்டுநின்றார்!
தீயை பலர் தூண்டுகிறார்!
தீ எங்கள் எல்லையிலும்,
தீ எதிரில் உள்ள திசைகளிலும்,
தொடர்ந்து பற்றி
எல்லாத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கி மூழ்கிறது!
வல்லமைகள் அற்ற எங்களைப்போல்
அங்கெங்கும்
உள்ளோர் …உணர்வும், உடலும், உயிர்வகையும்,
முள்ளினிலே சேலையாக
முற்றாய்க் கிழிகிறது!

Posted in கவிதைகள் | Comments Off on வேண்டாத போர்

உலகமும் நாமும்

ஓரிரு நொடிப் பொழுதில் பெரும்பெரும்
ஒளிர் நகர்கள் இடிந்திருள் சூழ்ந்தது.
பேயிரைச்ச லோடேவு கணை நிரை
பேரிடிகளாய் இலக்கைச் சரித்தது.
ஆயிரம் மைல் தாண்டி அவைபாய்ந்து
அழித்தன நெடு மாடிகள் யாவையும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உலகமும் நாமும்

பதிலென்ன?

யாரென்ன சொன்னாலும்
யார் எதுதான் செய்தாலும்
யாரெவரைத் தேரிலேற்றி முடிசூட்டி விடுவதென்றோ…
யாரெவரைத் தள்ளிவீழ்த்தித் தாழ்த்தி மிதிப்பதென்றோ…
யாரெவரின் உயிரை எப்போது எடுப்பதென்றோ…
யாரெவரை மயிரிழையில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பதிலென்ன?

என் சாபம்

ஓரிரு நொடியில் உயர்ந்த பெருவிமானம்
கீழே தடுமாறி வீழ்ந்து வெடித்ததையோ!
இயக்கி நகரவைத்த எரிபொருளே
விமான உடல்
உயிரைத் தகனக் கிரிகைசெய்து
தீய்த்ததையோ! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என் சாபம்

எரிந்த நாள்

எங்கெங்கோ இருந்த எங்களது வேர்களினை
அங்குதேடிச் சேகரித்தோம்.
நம் ‘ஞானப் பெட்டகமாய்’
அமைத்திருந்தோம் அதனை.
ஆவணங்கள், சுவடிகள்
எமது சரிதம் இயம்பிய நூல், பத்திரிகை, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எரிந்த நாள்

புயலிடை நின்ற மரங்கள்.

கண்களில் தெரிந்தது கனவதன் கோலம்.
கண்ணீரில் கரைந்தது நனவினில் யாவும்.
புண்களே மிகுந்தன பொன்னுடல் எங்கும்.
பூசவோ மருந்திலை வலிகளே மிஞ்சும்.
பண்களில் மகிழ்ச்சிகள் மலரலை இன்னும்.
பாட்டுகள் ‘திரிந்தன’ அந்நியம் மின்னும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புயலிடை நின்ற மரங்கள்.

மலைத்தோம் கண்டு!

தீந்தமிழின் அடையாளம்,தெய்வச் சொத்து,
‘சிறுவாழ்வின்- பேருண்மை’ பகரும் வேதம்,
வான் மறை,நற் தெய்வ வாக்கு,அடிகள் ரெண்டுள்
வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள்,
மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய
மாந்தருக்கும் அருமருந்து,அமுது,என்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு!

உயர்வுக்காய்த் துணையும் நல்கு

யாழ்ப்பாணம் இந்துப் பண்ணை
யாம் பெற்ற இரண்டாம் அன்னை!
வாழ்வில் யாம் உயர…லட்சம்
வரம் தந்த தெய்வ அன்னை!
நாளொரு பொழுதாய்.. நாம் அந்
நாயகி மடி தவழ்ந்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயர்வுக்காய்த் துணையும் நல்கு

உன்னைக் காணல்

ஒவ்வொரு வரும் ஒவ்வோர் விதத்தில் உனைக்காண்பர்.
ஒவ்வொரு வரும் ஒவ்வோர் வழியில் உனைக்காண்பர்,
அற்புதப் பதிகங்கள் பாடி உனைக் காண்பர் சிலர.;
கற்பூரச் சட்டியதன் சூட்டில் உனைக் காண்பர் சிலர்.
கண்மல்கி ஆறுகாலப்
பூசைகளில் காண்பர் சிலர். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னைக் காணல்

உனது வெற்றிடம்

கடல் சுதி மீட்டிட, அலை ஜதி போட்டிட,
கவி நூறு பாடி வருவாய்.
கனவினில் கண்டவை நனவினில் கைவரக்
கருவியாய்க் கலையைத் தொடுவாய்.
விடையிலாக் கேள்விகள் மிகமிக அதிகமே…
விளங்கிதை; ஞானம் பெறுவாய். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உனது வெற்றிடம்

கொடுங் கோடை

தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள்.
ஏப்பம் இடுகிறது அனல்
எட்டுத் திசைகளையும்.
யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது?
யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது?
மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கொடுங் கோடை

அறிதிகொலோ?

காலகால மாக இங்கு வாழும் மெய் உயிர்ப்புகள்,
கல்லை மண்ணை நீரை தீயை காற்றை ஆளும் ஓர் பொருள்,
சூலை – விந்து சேரவே வளர்ந்து வாழுமாம் உயிர்,
சூழும் தாவரத்தில் பூவை – வித்து ஆக்கும் மாதிறண்,
காலிலாதியங்கி வையம் காக்க நிற்கும் சக்திகள்,
கர்மம் தீவினைகளுக்குத் தோன்றும் தண்டனை, இவை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறிதிகொலோ?

எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

மனதிலே நிற்கின்ற கவிதையாய் இல்லையே…
மனது தொட்டு வருடியே
மலரென, வாடாத மல்லிகைப் பூவென,
மலரணும் காண்… கவிதையே!
நனவில் நடந்ததைக் கனவில் கிடந்ததை
நவிலணும் சுவை கூட்டியே! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

Posted in Video | Comments Off on புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்