தூயவை துணிந்துவிட்டால்

தூயவை செய்யத் துணிந்திடில்- இடர்
துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே-
அவை
மாயும் அகலும் வழிவிடும் – என
மா அறிஞர் முன்புரைத்தனர்- அது
நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி
நோன்புகள் நேர்த்திகள் செய்துமே – நின்றால்
காலமும் நேரம் இயற்கையும் – அட
கால நிலைகளும் மாறுமாம்.

ஏதும் உள் நோக்கங்கள் அற்றுமே – மிகு
இலாபங்கள் தேடுதல், வஞ்சகம் -செய்து
தீதைப் பரப்பல், ‘முயல்வோரின் – செயல்’
தேய்ந்திடத் திட்டங்கள் தீட்டுதல்- என
பேதமை செய்து திரிந்திடார் – உண்மைப்
பீடு ஜெயிக்க உழைப்பவர் – தெய்வ
நீதிக்கு அஞ்சி நடப்பவர் – செய்யும்
நேர்த்தி பலிக்கும் ஜெயிக்குமாம்!

உண்மை இது; கதை அல்லகாண்-நேற்றெம்
ஊரில் நடந்தது; தீமையை – தூண்ட
எண்ணி இருந்தோர் ஏமாந்தனர்- நேர்மை-
யின்வழி சென்றோரே வென்றனர்- பழித்
துண்மை மறுத்தோர் குனிந்தனர்- சொன்ன
தூற்றலை ஊரார் மறுத்தனர்- நல்ல
எண்ணங்கள் எத்தடை நேரினும் – நன்றாய்
ஈடேறும் யாவரும் பார்த்தனர்!

பொறாமை எரிச்சல்கள் போட்டியால் -மனப்
புகைச்சலோ டாற்றாமை கொண்டுதான்- “தம்
திறமையால் செய்ய முடியலை – வேறு
செய்ய வழிவகையும் இல்லை”- என்ற
வறுமையில் வாடுவோர் தூற்றலாம் -அந்த
வசைகளால் ஏதும் நடந்திடா(து) – இந்தச்
சிறுமதி கொண்டோரின் திட்டுக்கள்- ஏதும்
செய்யா திது மெய் யதார்த்தமாம்!

மண்ணில் மலர்ந்த பெருமையை- மக்கள்
வாழ்க்கையை, மண்ணின் மணத்தினை- வந்த
தொன்மை மரபை, தனித்துவப் – பழஞ்
சொத்தை,விழுமியம் என்பதை – காக்க
எண்ணி இருப்போர், கலைகளில் – நிதம்
ஈடுபட்டுள்ளம் இளகியோர் – கலை
விண்ணர் ஜெயிப்பர்; இறைவரும் – அவர்
வேண்டுத லுக்கு உதவுவார்!

Posted in கவிதைகள் | Comments Off on தூயவை துணிந்துவிட்டால்

பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

பொய்கட்கு ஆயுளோ அற்பம்- அதைப்
பொருந்தாது சொல்லிடின் யார் ஏற்பர் நித்தம்?
பொய்களை மெய்போலச் சொல்லும்- பொய்யர்
புளுகையும் ஏற்காது புவிகேட் டொதுக்கும்.
பொய்யிதே என்று புரிந்தும் – அதைப்
புன்னகையோடே கடத்தல் சிறப்பும்!
பொய்களைச் சொல்வோரின் திட்டம் – இந்தப்
பூமிக்குப் புரியாதா? அவர் வாய்க்கே நஷ்டம்!

பொய்யைப் புரட்டைச் சோடித்து – சூழும்
புகழைக் கெடுத்திடவே திட்டமிட்டு
ஐயோ வக்கிரம் பொறாமை கொண்டு- காழ்ப்பு
அக எரிச்சலை வசை, கீழ்ச்சொல்லில், தந்து
“வையகம் நம்புமாம் கண்டு – அதால்
மக்கள் சாமானியர் குழம்புவார்” என்று
செய்திடும் சேட்டைகள் நின்று – பொய்போல்
தேய்ந்திடும்; உண்மை நிலைக்குமாம் வென்று!

அவதூறு பேசின்; பின்வாங்கி -யாரும்
அடங்குவார் எனப் ‘பொது வெளியிலே’ ஏங்கி
எவரையும் தூற்றியே துள்ளி… -நிற்போர்
இயல்பு, தரம், தேர்வார் எல்லோரும் எள்ளி!
எவையும் நேரே செய்ய அஞ்சி, -மோதி
எதிர் நிற்கத் துணிவின்றி, முகம் காட்டாப் ‘போலி
அவதூறு’ எழும் நொடியில் வாடி – ‘செய்யும்
அகத்’ துர்க்குணம், சிறுமை, அறியும் ஊர் தேடி!

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

ஆற்றா அழுகை

வானம் அழுவதனை வழமையாக்கிற் றொவ்வொராண்டும்!
“தோன்றும் வெளிப்பின்றோ” டென்று
உரைத்தவாயே…
நீளும் இது ‘பதினெட்டு’ வரை
எனச் சொல்ல…
வானம் அழுகிறது இன்றும்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆற்றா அழுகை

சிதைவுகள்

யுத்தம் குதற உயிரிழந்து சிதைந்தவைகள்
சத்தியமும் மெய்யும் தருமமும் மட்டுமல்ல..,
திசைகள் சிதைந்தன,
திக்குகள் சிதைந்தன,
அசையாத சொத்துக்கள் அசையும் சொத்தோடு
ஊர்கள் சிதைந்தன, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சிதைவுகள்

காக்க முயன்றால்…

கலையாத கனவோடு நனவின்று வாழும்.
கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம்.
விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம்
விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்…

கலியுகம்

நீதியும் நியாயமும் நீர்த்து நொடிந்திடும்
நேரத்தில் வந்து பிறந்துவிட்டோம்.
நேர்மையாய் வாழ்ந்து நெருக்கடிகள் பட்டு
நித்தம் துயரம் சுமந்திருப்போம்.
போதனை வேறு, நடைமுறை வேறெனும்
பொய்மை உலகினில் தான் அலைவோம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலியுகம்

என்ன நடந்தது ஈற்றில்?

தீமை விளைப்போர், அதர்மம் அராஜகம்
செய்வோர், அடாவடியாய் முயல்வோர்,
தீதென் றுணர்ந்தும் தம் ஆணவம் கன்மத்தால்
‘செய்து’…பலதில் ஜெயித்திடுவோர்,
ஊமைக்குத்தாய் மெய்யை வீழ்த்த முயன்றபின்
உதவிக் கரம்கொடுத்தே அணைப்போர், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என்ன நடந்தது ஈற்றில்?

கோடைத் தகிப்பு

நீளும் திசையெல்லாம் நெருப்பெறியும் கோடையிலே,
சூழுகிற காற்றினிலும் சூடு கிளம்பையிலே,
வேகுகிற வெய்யிலிலே வீதி கொதிக்கையிலே,
வேர்வை நதிகள் விரைந்து
மேனி மேடுபள்ளத்
தூடு பெருக்கெடுத்து Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

Posted in Video | Comments Off on சர்வதேச மகளிர் தினப் பாடல், பச்சிலைப்பள்ளி.

ஈற்றில் என்ன ஆகும்?

மூண்டுஎழும் மோதல்களில்
மூச்சிழந்து யாரெவர்…மண்
மூடி, எரிந்தே, இறந்து போனார்?-யார் தாம்
முக்கி உசிரூசலாட வாழ்ந்தார்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஈற்றில் என்ன ஆகும்?

வெற்றிடம் தானோ விளையும்?

வானம் தொடும்படி மண்ணில் வளர் நகர்
மாயும்; சுடுகாடாய் மாறும் – மக்கள்
மறைவர்; இடுகாடு சூழும். -இந்த
ஈனம் தொடர்ந்திடும்…ஏவு கணைகள்
இன்றை வரலாற்றை மாற்றும் – இப்போ
எமனுக்குத் தானே கொண் டாட்டம்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வெற்றிடம் தானோ விளையும்?

மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

பூமியைப் பொத்தல் போட்டன குண்டுகள்.
போய் ‘அடிமுடி’ தேடின வேட்டுகள்.
பாதாள லோகத் துள்ளே…பதுங்கிய
பலரையும் தேடித் தின்றது ஏவு கணை.
பாடு பட்டவர், பகலிர வாகத் தம்
பணம் உழைப்பில் செழித்த பெருங்குடி, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மிஞ்சியது ஐயமும் அச்சமும்.

நரகமாகும் நகர்கள்.

எங்கும் அழிவுகள்.
எங்கெங்கும் சிதைவுகள்.
எங்கும் புகைமூட்டம்.
எங்கெங்கும் தீப்பரவல்.
இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாகப்…
பொங்கி வெடித்துப் பொசுக்கிடுது போர்க்கணைகள். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நரகமாகும் நகர்கள்.

நடு நிலைமை

வாழ்க்கையெனும் பட்டத்தின் வாலினையும்
அதை ஏற்றும்
நூலினையும் அறுத்துவிட்டு
நோண்டுது ‘நிகழ்காலம்’.
என்செய்யும் வாழ்க்கைப் பட்டம்?
இடர்க்காற்றில், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நடு நிலைமை

தமிழ் வாகை சூடும்.

எங்கள் தமிழின் மகிமை; – அதன்
இனிமை, கனிவு, அருமை, பெருமை;
எங்கள் தமிழ் ஆழ நீளம்; – அதன்
இயல்பு, செழிப்பு, புதுமை புகுந்தும்
மங்காது பழமையும் காக்கும் – குணம்;
வரலாற்றுக் கேற்ப தனைமாற்றும் பண்பு; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழ் வாகை சூடும்.