காத்து நமையுயர்த்து!

நெஞ்சின் கவலையிடர் நீறவைத்து,
நம்மனதின்
சஞ்சலங்கள் சாய்த்து,
தலைகோதி மெய்வருடித்
தஞ்சமும் தந்து,
தழுவிடுவான் நல்லூரான்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காத்து நமையுயர்த்து!

இருபத்து நான்கு ஆண்டின்பின் இன்று….

அந்த இனியகாலம் அகன்று மறைந்துபோய்
இன்று ‘இருபத்து நான்காண்டு’!
‘அது’ எங்கள்
வாழ்வின் வசந்தகாலம்.
மனம் துள்ளிக் குதித்த காலம்.
கால் கையில் தளைகளற்று, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இருபத்து நான்கு ஆண்டின்பின் இன்று….

அரண் செய் ( நல்லைக் கந்தர் அநுபூதி)

திரு நல் லையதன் திருநாள் களிலே
திசைகள் அளந்து தினம் சுற் றிவரும்
கருணைச் சுடரே! கதியற் றுழல்வோர்
கவலை களைநீ களைவாய் களையாய்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அரண் செய் ( நல்லைக் கந்தர் அநுபூதி)

பன்னிரெண்டு கண்திறந்து பார்

பன்னிரெண்டு கண்திறந்து பாவிகள் எங்களினை
இன்றைக்குப் பாரைய்யா!
என்றென்றும் பாருமையா!
நெற்றிக்கண் நெருப்பிருந்து நிலைத்து , ‘மும் மல’ அசுரர்
பற்றி எரியவைத்த பரம்பொருளே… இன்று நம்மில்
தொற்றும் துயரெல்லாம் சுடு; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பன்னிரெண்டு கண்திறந்து பார்

கிளியானதென் மனது

சூழ்ந்த பகற்திரவம் சொட்டுச் சொட்டாய் வடிய,
சூழும் இராத்திரவம் துளித்துளியாய்
வழிந்துவர,
பொன்னந்தி கருக,
மைம்மற் புகார் மூட,
மென்குளிர்க் காற்றுவீசி மேனி Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கிளியானதென் மனது

இன்று…

‘இந்த நேரத்தில் ……தான்’.
‘சனாதிபதி……தான்’.
‘வெல்லும்……..’
‘தேசமே பயப்படாதே’.
‘…….. விரட்டுவோம்’.
எங்கள் தோழர்….., Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இன்று…

கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

நாற்பது ஆண்டின்முன் நாற்றாய் எழுந்து…வந்த
காற்று, புயல்,மழையைக் கடந்து…
தினம் தினமும்
கிளைத்துத் தளைத்துக்
கெதியாய் மரமாகி,
வளர்ந்து விருட்சமாகி, Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கம்பன் கழகமெனும் கலை விருட்சம்

உயிர்ப்பழியா இசை.

இசையின் இதம் நீ;
உயிர்ப்பென்றும் குன்றாத
இசையின் பழமை, எழில், நவீனம் நீ;
அழியாத
இசையுன் இசை! வயது மூப்புவந்தும்
இளமைகுன்றா Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பழியா இசை.

குளிர்த்திப் பொங்கல்.

ஆர்க்கும் பறையதிர்வு அயலை உருவேற்ற…
தீச்சட்டி, அடுக்குத் தீபம்,
கொழுந்துவிட்டு
நூரா தொளிர…
கரும்புகையும், கற்பூர
வாசமும், சாம்பிராணி மணமும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on குளிர்த்திப் பொங்கல்.

பிழை பொறு.

பசுமைகள் பூசியே படரும் பொன் வயல்களும்
பரவி ‘இங்கிதம்’ தந்திடும்.
பலசாலி நானெனப் பவிசோடு முகம் காட்டி
பனை சுற்றி அணை போட்டிடும்.
கசிந்தூறும் கவிதையாய் அருளூறும் பொய்கையுன்
கழல் சுற்றிக் குளிரூட்டிடும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிழை பொறு.

காரணி

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வித வாழ்க்கை.
ஒவ்வொரு உயிர்க்கும்
ஒவ்வொரு வகை வலிகள்.
ஒவ்வொரு உடற்கும் ஒவ்வொரு விதி,
துன்பம்.
ஒவ்வொரு வருக்கும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காரணி

காணக் கிடைக்காக் கவின்

காணவே கிட்டாத கும்பாபி ஷேகத்தின்
காட்சிகள் காணல்… வரம்.
காலம் கனிந்தது, கனவும் பலித்தது,
‘கண்டு- கொள்வாய்’ புண்ணியம்.
மாசம் இப் ‘பங்குனி உத்தரக்’ காலையில்
மகா கும்பாபிஷேகம் நிகழும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காணக் கிடைக்காக் கவின்

பயணி

இந்தத் தெருஅறியும் எது தனது தொடக்கம்,
எந்த இடம் தனது முடிவு, அந்தம்,
என்பதனை!
அதிலே பயணிக்கும்
அனேகர் அறிவார்கள்
எது தொடக்கம் முடிவு Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பயணி

கோடைத் தகிப்பு

ஆயிரம் ஆயிரம் அனற் சுவாலைக் கைகளினை
நாலு திசைகளிலும் நகர்த்தித்,
தன் கொதிப்பைக்
கோடையாக்கி, திக்குகளைக்
கொள்ளிவைத்தும் கொழுத்தி,
சூட்டை ஒளியைச் சுரக்கின்றான் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

கூடி வாழ்

“யாரும் தேவையில்லை” என்று யாருமிங்கு வாழலாம்.
யாரையும் வெறுத்து நீ…ஒதுங்கி நின்று ஆளலாம்.
“யாரையும் நாம் நம்பவில்லை” என்று பலரும் கூறலாம்.
“யமனும், நோயும் என்ன செய்யும்”என்றும் மமதை கொள்ளலாம்.
“காசு, பட்டம், பதவி,உண்டு” என்று நீ நினைக்கலாம்.
“காசெறிந்தால் யாவும் ஆகும்” என்று நீ விசுக்கலாம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கூடி வாழ்