“தந்தனத் தானன தன தான” மெட்டு
நல்லையின் கோபுரம் வரவேற்க
நாதமும் வேதமும் உயிரூட்ட
பல்வகை வாத்தியம் இசைமீட்ட
பாரடா கண்கள் எம் இடரோட்ட! Continue reading
“தந்தனத் தானன தன தான” மெட்டு
நல்லையின் கோபுரம் வரவேற்க
நாதமும் வேதமும் உயிரூட்ட
பல்வகை வாத்தியம் இசைமீட்ட
பாரடா கண்கள் எம் இடரோட்ட! Continue reading
வாயினால் உனைப் பாடிப் பரவலே
வாழ்க்கை… என்றுதான் வாழும் பலரிடை
யானுமோர் மகன்; உன்றனின் வாசலில்
யாசகன்; வரும் இன்பங்கள் துன்பங்கள்,
யான் அடைகிற வெற்றிகள் தோல்விகள்,
நன்மை தீமைகள்,யாவும் நின் செய்கையாய் Continue reading
‘ராஜ பவனி’ ‘வசந்த மண்டபத்’திருந்து
ஆரம்ப மாக,
தவில் நாத சுரம் பொழியும்
“தந்ததன தானா தந்த தன தா” வாம்
கம்பீர மல்லாரி கலையாட்ட,
வகைவகையாயக் Continue reading
‘அலங்காரக் கந்தன்’ எழில் நல்லூரான் – யாழின்
அடையாளம் என என்றும் பொலிகின்றான்.
‘நிலை’ என்ன வரும்போதும் நிழலாவான் -எங்கள்
நிஜக் காவல் அரணாக நிலைக்கின்றான். Continue reading
எல்லையற்ற எழில்குவிந்து ஒளிர்ந்து இருக்கும்.- திக்கு
எட்டினிலும் புனித அருள் நிறைந்து கொழிக்கும்.
‘நல்லை’ கொடியேறி விட்டால் ஊரே சிலிர்க்கும் -திரு
நாள்கள் ஒவ்வொன் றினிலும் புது மேன்மை துளிர்க்கும். Continue reading
கண்கள் திறந்திருப்பீர் – இரு
காதுகள், மூக்கை, விரித்து இரசித்துமே
எண்ணத்தினைக் குவிப்பீர் – உங்கள்
இதயத் தினையும் வெளியாக்கிக் கொள்ளுவீர்.
வண்ணம் மிகு எழிலும் – இசை
வார்ப்பும், கவியும், மலர்களும், தென்றலும் Continue reading
“ஏமாளி நீ” என்றாய்.
“இந்த உலகத்தில்
வாழத் தெரியா வகையில் நீயும் ஒன்று” என்றாய்.
நீதி நியாயங்கள்,
நேர்மை அறம் உண்மை
பாவத்திற் கஞ்சல், Continue reading
விடிவெள்ளி எழுமென்று விழிபூத்திருந்தோம்.
விதிமாற்றும் திசைநோக்கி வழிபார்த்திருந்தோம்.
தொடுவானில் தெரிகின்ற திலக்கென்றிருந்தோம்.
தொடர்ந்தேனோ தடம்மாறித் தடுமாறுகின்றோம்? Continue reading
எப்படி வந்தது இக்குழிக்குள் அப்பொம்மை?
எப்படி வந்தது?
இதன் ‘உரிமையாளனுடன்’
விளையாடிக் கொண்டிருந்த வேளையிலே…
அவனோடு
அளவளாவி நின்றதுவோ? Continue reading
தோண்டக் கிழங்குவரும்
வளம்சூழ்ந்த நம் அயலில்
தோண்ட… எலும்புகளின் கூடுவரும் துயர்க்காலம்!
சுடலைதான்;
‘எரிக்கும் சுடலைதான்’;
அதற்குளின்று Continue reading
“வாழத்தான் பூமிவந்தோம்;
வதைசுமக்க அல்ல” என்று
போரை வெறுத்து
புதுமையுடன் அன்பினது
ஆழ இணைப்பில் அனைவருமே ஒற்றுமையை
ஆளத்தான் காத்திருந்தோம்! Continue reading
ஓரிரு நொடிப் பொழுதில் பெரும்பெரும்
ஒளிர் நகர்கள் இடிந்திருள் சூழ்ந்தது.
பேயிரைச்ச லோடேவு கணை நிரை
பேரிடிகளாய் இலக்கைச் சரித்தது.
ஆயிரம் மைல் தாண்டி அவைபாய்ந்து
அழித்தன நெடு மாடிகள் யாவையும். Continue reading
யாரென்ன சொன்னாலும்
யார் எதுதான் செய்தாலும்
யாரெவரைத் தேரிலேற்றி முடிசூட்டி விடுவதென்றோ…
யாரெவரைத் தள்ளிவீழ்த்தித் தாழ்த்தி மிதிப்பதென்றோ…
யாரெவரின் உயிரை எப்போது எடுப்பதென்றோ…
யாரெவரை மயிரிழையில் Continue reading
ஓரிரு நொடியில் உயர்ந்த பெருவிமானம்
கீழே தடுமாறி வீழ்ந்து வெடித்ததையோ!
இயக்கி நகரவைத்த எரிபொருளே
விமான உடல்
உயிரைத் தகனக் கிரிகைசெய்து
தீய்த்ததையோ! Continue reading
எங்கெங்கோ இருந்த எங்களது வேர்களினை
அங்குதேடிச் சேகரித்தோம்.
நம் ‘ஞானப் பெட்டகமாய்’
அமைத்திருந்தோம் அதனை.
ஆவணங்கள், சுவடிகள்
எமது சரிதம் இயம்பிய நூல், பத்திரிகை, Continue reading