மார்கழி

மார்கழி பிறந்தாலோ மனசெல்லாம்
குளிருறையும்.
ஈரலிப்பும், அடிக்கடி கசியும்
இளஞ்சாரலதும்,
இழகிய நிலமும்,
ஈரஞ் சிதம்பும் மண் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மார்கழி

சரி செய்வதார்?

ஏறி விலைஏற எட்டு மடங்காக
எங்கள் செவி கேட்டு அதிர
“எப்படிநாம் வாங்க?” இன்று பணம் வீங்க
ஏங்கி பொருள் தேங்கி.., அணுக
வேறு வழி இன்றி போசணையும் குன்றி
வெந்து வயிறெங்கும் புகைய Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சரி செய்வதார்?

கைகள் கோரும்

வருமானம் குறைந்து தேயும் நொந்து -விலை
வாசி பாயும் மும்மடங்கு என்று
அரைகுறையாய்க் குடித்துண்டு கொண்டு -வாழ்வோம்
அதை ‘நிறைக்க’ திராணியற்று இன்று! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கைகள் கோரும்

‘வருட’ மலர்.

கால விருட்சத்தில் காய்ந்தோர் ‘வருட’ மலர்
வீழ்ந்து உதிர்ந்தது!
விரிந்து ‘புது வருட’
மொட்டு மலர்ந்தது!
முகிழ்ந்து அது இனிமேல்
அட்ட திசைகளுக்கும் அருளும்
கருணைசெய்யும்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘வருட’ மலர்.

ஈடு இணை?

சின்னக் குளிர்தூவிச் சிலிர்க்கவைக்கும் பொன்மாலை!
தென்றல் தவழும் திசையெங்கும்
பக்திமயம்!
‘அன்னைமார்’ மூவருக்கு
அடுத்து மும் மூன்றுதின
நவராத்ரி பூசை! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஈடு இணை?

விதைப்பு?

குண்டு மாமழை கொட்டுகின்றது.
குருதி ஆறுகள் பொங்குகின்றது.
சண்டை ஏன் எதற்கின் றெழுந்தது?
சாவி னோலங்கள் மட்டும் கேட்குது.
விண்ணை முட்டிடும் வீடு,கட்டடம்
வீழ்ந்துமே சல்லிச் சல்லி யாகுது. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on விதைப்பு?

உன்னுடைய வார்த்தைகள்.

உன்னுடைய வார்த்தைகள் உலவின
திசையெங்கும்.
உன்னுடைய வார்த்தைகள் உதிர்ந்தன அயலெங்கும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னுடைய வார்த்தைகள்.

சொல்

சொற்கள் விழுந்து சொரிந்தன திசையெங்கும்.
சொற்கள்…
எண்ணுக் கணக்கற்ற
விதவிதமாய்ச்
சொற்கள்…பெருகிச்
சொரிந்தன திசையெட்டும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சொல்

கோடையும் மாரியும்

நீண்ட நெடுங்கோடை
நெருப்பாய்த் தகித்தெரிய,
காய்ந்து புல் பூண்டும்
கருகிவிட,
இலையுதிர்த்து
வேம்பு விருட்சங்கள் கிளை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கோடையும் மாரியும்

எவர் எங்களை மீட்கிறது?

வேதனை நீங்கிடும் வேளையைத் தேடியே
வெந்து தவமிருப்போம் -எங்கள்
மேனியின் காயங்கள் ஆறிட நேர்ந்துமே
மேலும் விழித்திருப்போம் -தொடர்
சோதனை தாங்கிட, ஆன்ம பலம் பெற,
சோராது நோன்பிருப்போம் – எங்கள் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எவர் எங்களை மீட்கிறது?

அறங் காக்கும்

யாரிடம் இங்கே அரசியல் இல்லை
யாரிடம் சுயநலம் இல்லை?
யாரிடம் மற்றோர் உயர்வதைப் பார்த்து
மனமெரியுங் குணம் இல்லை?
யாரிடம் போட்டி பொறாமைகள் இல்லை?
யாரிடம் ஆசைகள் இல்லை? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அறங் காக்கும்

பங்கம் துடைப்பேன்!

சொற்கள் நதியாய்ச் சுரந்து கொண்டே
இருக்க,
கற்பனை
ஆழம் அகலம் காணாக் கடலாய்
விரிந்த படி பெருக,
விந்தைப் பொருள் வகையோ Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பங்கம் துடைப்பேன்!

பிரகடனம்

நெஞ்சில் நேர்மையும், வாயிலே உண்மையும்,
நீதியின் வழி சென்றிடும் கால்களும்,
அஞ்சிடாது தவறைத் திருத்திடும்
ஆற்றலும், பணம் காசு பதவியில்
கொஞ்சமும் பற்றற்ற குணமும்…நம்
கோவில் குளம் பழ மரபில் நம்பிக்கையும், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பிரகடனம்

யதார்த்தம்

சீராய் ஒன்று சிறப்பாய் நடந்தால்
திசைகள் ஏற்காது -கண்டு
சேர்ந்துமே போற்றாது -அதை
நேர் நோக்கோடு நோக்கு தற்கும்
நெஞ்சம் விரும்பாது -குறைகள்
நீட்டும் பலவாறு. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யதார்த்தம்

புதிர்கள் அவிழ் நீ!

வாழும் வழிகாட் டிடுவாய் முருகா!
மாய வினைகள் தனில் தீ யிடுவாய்.
ஆளும் மனமும், அறம் சேர் கவியும்,
ஆரா அமுதே அருள்வாய். தருவாய்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புதிர்கள் அவிழ் நீ!