பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

கண்திறந்து தன்அடியார் காட்டுகிற பக்தியினைத்,
துன்பம் சுமந்து
தொடர்ந்து செய்யும் நேர்த்திகளைப்,
பார்த்துச் சிலிர்த்தருள்வான்…
பார்போற்றும் நல்லூரான்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on பார்த்துச் சிலிர்த்தருள்வான்.

திரு நல்லை.

யாழின் தனித்துவம்.
யாழின் பெருமையம்சம்.
யாழின் திமிர், கர்வம்.
யாழ் மரபின் குறியீடு.
யாழ்ச் சைவக் கலாசார வாழ்வின்
அடையாளம். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on திரு நல்லை.

வென்று எழ வை!

ஏது பிழை ஏது சரி என்று உரைப்பாயா?
ஏங்கியழும் எம் இதயம் கண்டு களிப்பாயா?
ஆதரவு தந்து எமைத் தொட்டு அணைப்பாயா?
அச்சமொடு ஐயமதும் ஓட அருள்வாயா?
வேதனைகள் சூழ்ந்துவரும் வெட்டி அழிப்பாயா?
வேகும் வரை பார்த்திருந்து மீட்டு எடுப்பாயா? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வென்று எழ வை!

உன்னை விட மாட்டோம்.

நாதமழை வேதமழை நம்கண் மழை யாலே
நாற்திசையும் பக்திபுனல் பாய்ந்து வரும் போதே
வீதிகளில் வீழ்ந்தடியார் சொல்லும் குறை நூறே!
மேவியவை தீர்த்தருள தேரில் எழு வாயே!
சோதனைகள் ஆயிரமாய்ச் சூழ்ந்துவரும் காலம்
தோன்றும் திருநாளில் பதில் பெற்றுத் தர வேணும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உன்னை விட மாட்டோம்.

தமிழின் தலைவன் முருகன்

(தனன தனன தனன தனன
தனன தனன தன தான….சந்தம்)

எனது மனதில் ‘பதி- வை’… ‘கவி-தை’;
இரவும் பகலும் அதைநானும்…
எழுதி உலகும் வியக்கும் வகையில் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தமிழின் தலைவன் முருகன்

மாம்பழமும் வேட்டையும்

நாளும் ஒவ்வொரு விதமாய் நடக்கும் திருவிழா -திரு
நல்லையிலே நித்தம் புதிய சேதி சொல் உலா!

காலையிலே மாம்பழத்திற் காக மோதினான் – அண்ணன்
கணபதியும் கனியைக் கொள்ள பழநி ஏகினான்.
ஆண்டிக் கோலத்தோடு வேலன் வாடியேங்கினான் – அந்த
அரிய கனியினாலே என்ன ஞானம் சொல்கிறான்? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on மாம்பழமும் வேட்டையும்

உள்ளப் பனிக்கட்டி உருகி…

உள்ளப் பனிக்கட்டி உருகிக் கரைந்துவரும்
வெள்ளம் இருகண்ணால் வழிந்து
விழுந்தோட
நிற்கின்றோம்;
நின்றன் நிஜஎழிலைக் கண்டு…வீதி
சுற்றி வருகையிலே Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உள்ளப் பனிக்கட்டி உருகி…

அவன் செயல்

‘பணிப்-பகை மயிலில்’ பவனிவந்து
எங்களது
‘பிணிப்- பணிகள்’ தம்மை
பிய்த்துக் குதறிடுது
ஆழ்ந்தகன்று நுணுகிய ‘அழகுவேல்’!
நம்…புரியா Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அவன் செயல்

கார்த்திகை நாளினில் கதி நீயே!

“தந்தனத் தானன தன தான” மெட்டு

நல்லையின் கோபுரம் வரவேற்க
நாதமும் வேதமும் உயிரூட்ட
பல்வகை வாத்தியம் இசைமீட்ட
பாரடா கண்கள் எம் இடரோட்ட! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கார்த்திகை நாளினில் கதி நீயே!

முழுதும் உன் செயல்.

வாயினால் உனைப் பாடிப் பரவலே
வாழ்க்கை… என்றுதான் வாழும் பலரிடை
யானுமோர் மகன்; உன்றனின் வாசலில்
யாசகன்; வரும் இன்பங்கள் துன்பங்கள்,
யான் அடைகிற வெற்றிகள் தோல்விகள்,
நன்மை தீமைகள்,யாவும் நின் செய்கையாய் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on முழுதும் உன் செயல்.

‘ராஜ பவனி’

‘ராஜ பவனி’ ‘வசந்த மண்டபத்’திருந்து
ஆரம்ப மாக,
தவில் நாத சுரம் பொழியும்
“தந்ததன தானா தந்த தன தா” வாம்
கம்பீர மல்லாரி கலையாட்ட,
வகைவகையாயக் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ‘ராஜ பவனி’

ஆளவைப்பான்

‘அலங்காரக் கந்தன்’ எழில் நல்லூரான் – யாழின்
அடையாளம் என என்றும் பொலிகின்றான்.
‘நிலை’ என்ன வரும்போதும் நிழலாவான் -எங்கள்
நிஜக் காவல் அரணாக நிலைக்கின்றான். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஆளவைப்பான்

நல்லூரான் புகழ்

எல்லையற்ற எழில்குவிந்து ஒளிர்ந்து இருக்கும்.- திக்கு
எட்டினிலும் புனித அருள் நிறைந்து கொழிக்கும்.
‘நல்லை’ கொடியேறி விட்டால் ஊரே சிலிர்க்கும் -திரு
நாள்கள் ஒவ்வொன் றினிலும் புது மேன்மை துளிர்க்கும். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூரான் புகழ்

ஞானம் பெறுக!

கண்கள் திறந்திருப்பீர் – இரு
காதுகள், மூக்கை, விரித்து இரசித்துமே
எண்ணத்தினைக் குவிப்பீர் – உங்கள்
இதயத் தினையும் வெளியாக்கிக் கொள்ளுவீர்.
வண்ணம் மிகு எழிலும் – இசை
வார்ப்பும், கவியும், மலர்களும், தென்றலும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஞானம் பெறுக!

ஏமாளி

“ஏமாளி நீ” என்றாய்.
“இந்த உலகத்தில்
வாழத் தெரியா வகையில் நீயும் ஒன்று” என்றாய்.
நீதி நியாயங்கள்,
நேர்மை அறம் உண்மை
பாவத்திற் கஞ்சல், Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on ஏமாளி