Author Archives: Webadmin

கலிகாலம்

அன்பு, பாசம், எல்லா அயல் உயிர்களிலுமே மென்மை மிகு நேசம், கருணை, ஜீவ காருண்யம், தீயவை சிந்திக்காச் சிந்தை, பிறர்க்கேதும் தீங்கு விளைவிக்காச் செயல்கள், அடுத்தவரில் காழ்ப்பு பொறாமை கொள்ளாக் காதல், ஒருவரது வளர்ச்சியில் வயிறெரியா மனது, ஆடம்பரங்களற்ற எளிமை, உழைப்புக்கு ஏற்ற கூலி தேடலன்றி ஊரைச் சுரண்டி உடல்வளர்க்கும் அவா இன்மை, “போதும்” எனும்உள்ளம், … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கலிகாலம்

காலமும் நேரமும்

காலம் உனக்குச் சாதகமாய் இருக்கையிலே… காலத்தின் காற்றுந்தன் பக்கம் அடிக்கையிலே… காலத்திற் குன்னால் இலாபம் கிடைக்கையிலே… காலத்திற் குன்னுடைய தேவை இருக்கையிலே… இந்தக் கணம், அடுத்த கணம், மறு கணம், எல்லாம் உந்தன் பயணம் ஒழுங்காய்த்தான் ஒப்பேறும்! காலம் உனக்குப் பாதகமாய் இருக்கையிலே… காலத்தின் காற்றுனக்கு எதிராய் அடிக்கையிலே… காலத்திற் குன்னால் பயனில்லாப் போதினிலே… காலம் … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காலமும் நேரமும்

வாழ்வின் கேள்விகள்

பாதை நூறு கண்களின் முன் விரிந்து உள்ளது. -அதில் பயணம் எதால் போகவேணும்? மனம் மயங்குது. மாதிரியாய் வாழ்ந்தவரை மனது தேடுது – சென்று வாழ்வமோ? யாம் மாய்வமோ? யார் யாரைக் கேட்பது?

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வின் கேள்விகள்

ஆகும் ஊழும் போகும் ஊழும்

கடந்துகொண் டிருக்கின்ற ஒவ்வொரு கணங்களிலும் நடக்கவேண்டிய தென்னென்று நம்விதியோ… தலையெழுத்தோ… காலமோ… நேரமோ… கடவுளோ…வினைப்பயனோ…

Posted in கவிதைகள் | Comments Off on ஆகும் ஊழும் போகும் ஊழும்

செய்…வா!

ஆயிரம் தடைகள் சூழ்ந்து அடக்கிடும் போதும்…நூறு ஆயிரம் இடர்கள் சீண்டி அழித்திட முயலும் போதும்… பாய்ந்ததை எதிர்க்கும் நெஞ்சும், பயப்படாக் கை, கால், கண்ணும்,

Posted in கவிதைகள் | Comments Off on செய்…வா!

இயற்கை நியதி

தெருவெலாம் துன்பம் திரளுது எனினும் திசைகளிற் பூத்தன மலர்கள். தினந்தினம் வெய்யில் தீய்த்திடும் போதும் செடிகளில் தோன்றின தளிர்கள். பெருமழை வெள்ளம் மூழ்கடித் தாலும் பின் எழும் புதுப்புதுப் பயிர்கள்.

Posted in கவிதைகள் | Comments Off on இயற்கை நியதி

புறம்போல் அகமில்லை.

மனிதர்கள் மனிதர்களாய் இல்லை இந்த நாட்களிலே! மனிதர்கள், சராசரி மனிதக் குணங்களுடன் புறத்திலும் அகத்திலும் புதிர்ப்போலி வேசங்கள்

Posted in கவிதைகள் | Comments Off on புறம்போல் அகமில்லை.

இடர் மேலாண்மை

‘முன்னாயத் தம்’ என்று முறைக்கு முறைகதைத்து, என்னென் றியற்கையிட- ரிருந்துதப்புவ தென்றாய்ந்து, என்னென் றனர்த்தத்தைத் தணிப்பதெனத் திட்டமிட்டு, என்னென் றிடர்க்குமுகம் கொடுப்பதெனக் கற்பித்து, ஊரினைக் காப்பதற்கு ஒத்திகை களும்பார்த்து, ஆயிரம் கதையளந்து,

Posted in கவிதைகள் | Comments Off on இடர் மேலாண்மை

திக்(வா) விஜயம்

“அழிவு எங்கெங்கும் அழிவுகள்” என்றுதான் அங்கும் இங்குமே செய்திகள் பேசின. அழிவு, மரணங்கள் என்று அடிக்கடி அன்று… போரிடை வந்திட்ட செய்திகள் முழுதும் ஓய்ந்து அப்பப்போ அங்கங்கு மோதல், விபத்து, வாள் வெட்டுகள்,போதையால்

Posted in கவிதைகள் | Comments Off on திக்(வா) விஜயம்

‘விலான கம’, ரம்புக்கணை.

உறங்கிக் கிடந்தது ஊர்; நேற்று மட்டுமல்ல பரம்பரை பரம்பரையாய் வசித்து மகிழ்ந்துயிர்த்த ஊரது; நிம்மதியாய் உண்டு களித்துறங்கும்

Posted in கவிதைகள் | Comments Off on ‘விலான கம’, ரம்புக்கணை.

பாடம்

இயற்கையைத் தடுக்க எவராலும் முடியாது. இயற்கையை அடக்க எவராலும் இயலாது. இயற்கை என் செய்யுமென்று எதிர்வுகூறல் ஏலாது. இயற்கை ஏன் மாறுதென்று எவரும் கேட்கலாகாது.

Posted in கவிதைகள் | Comments Off on பாடம்

காலக் குருதி

காலமோ நிற்காமல் கணம்கணமும் தொடர்ந்து ஓடிக்கொண் டிருக்கும் உயிர்க்குருதி! எப்படித்தான் குருதி உடலுள் சுழன்றோட உயிர்துடித்து இருக்குமோ…அப்படி இக்காலக் குருதி ஓட…

Posted in கவிதைகள் | Comments Off on காலக் குருதி

நேருவோம்

வாடிக் கிடக்கும் நிலமெலாம் – மழை வார்த்து மகிழ்ந்தது வான்முகில் -துணை தேடித் தவிக்கும் உயிர்க்கெலாம்- சுகம் சேர்த்துப் பொழிந்தது பொன்மழை -அனல் கூடி எரித்த சிதைகளும் – நூர்ந்து கொள்ளவே…ஆறிற்று தாய்மடி -உயிர்

Posted in கவிதைகள் | Comments Off on நேருவோம்

சிவனுக்கு விண்ணப்பம்.

‘மார்க்கண்டே யனைப்’ போல் – இந்த மண்ணில் மிக மிக நல்ல குணத்துடன் ஆயுள் மிகக் குறைவாய் – வாழ்ந்து அற்புதம் செய்பவரோ சில பேர்களே! ஆயிரம் தீக் குணங்கள் – கொண்டு ஆயுளும் கெட்டியாய் நீளத் தொடர்ந்து

Posted in கவிதைகள் | Comments Off on சிவனுக்கு விண்ணப்பம்.

எங்களது கொற்றம் எமைக்காக்கும்.

தேனாறு பாயாத போதும், தினந்தினமும் பாலாறு பாயாத போதும், எம் நிலம் சிரிக்கும். சாவைத் துரத்திச் சரித்து நம் திசையெங்கும்

Posted in கவிதைகள் | Comments Off on எங்களது கொற்றம் எமைக்காக்கும்.