Author Archives: Webadmin

சுப்பிரமணி

நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை. இடையில் இணைகையிலே எவரும் தடுக்கவில்லை. உடையோன் பின் வந்ததென்று ஊர் முறையிட்டதில்லை. நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை. பாத யாத்திரையில் சேர்ந்து பணிந்திணைந்து, யார்க்கும் கரைச்சலற்று, யாரோடும் முரண்படாது, ஊனுணவு விட்டு, சைவ உணவுண்டு, தானாய் நடந்தது! அவ் ஐந்தறிவு ஜீவனுக்கு ஞானம் பிறந்ததென்று யானுரைக்க வில்லை; ஆனால் ‘ஏனையவை’ … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on சுப்பிரமணி

காக்க முயன்றால்

கலையாத கனவோடு நனவின்று வாழும். கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம். விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம் விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும். அடையாளம் எமதென்று எதைக்காட்ட வுள்ளோம்? அயல், மேற்கின் அடையாளம் தனையா… நாம் கொள்வோம்? அட எங்கள் திசையெங்கும் உள, யாம் கைக் கொண்ட, அனைத்தும்… ஏன் இழிவென்று நமைத்தாழ்த்து கின்றோம்? மரபாக … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்

இதுவா நேர்வழி?

என்னதான் வசை? எங்கு பார்க்கிலும் ஏனடா மனக் காழ்ப்புகள்? ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள் ஏன் பெருகுது தூற்றுதல்? நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை நீட்டிக் குற்றம் சுமத்தலேன்?

Posted in கவிதைகள் | Comments Off on இதுவா நேர்வழி?

காக்கும் இறை.

எதுவரும் பொழுதிலும், இடர்சுடும் நொடியிலும், இடிகளே வீழும் கணமும். “எவையுமே தாக்காது எனை”யென் றெனக்குளே எழும் ஒரு அசரீரியும். சதிபல செய்யினும், தருமம் பிழைப்பினும், தவிர்த்து…மெய் தனை ஏய்பினும்

Posted in கவிதைகள் | Comments Off on காக்கும் இறை.

நெஞ்சோடு புலம்பல்.

ஏற்றிட முடியா இந்த இழப்பினுக் கெதைநாம் செய்வோம்? கூற்றுவன் கொடுமைக் காரன்… குணநலம் குறைந்தோன்… கண்டோம். நேற்றிந்த நேரம் நின்றோன்… “இன்றில்லை” என்ற உண்மை

Posted in கவிதைகள் | Comments Off on நெஞ்சோடு புலம்பல்.

தீயவர் மாய்வர்.

மாய மந்திர ஜாலம் நிறைந்ததாய், மர்மப் பொய்கைகள் சுண்டி இழுப்பதாய், மாயைகள் புரி வல்லவர் சூழ்ச்சிகள் வைத்து மயக்கி விழுத்தத் துடிப்பதாய், ஏய்த்து ஏமாற்றி ஆசைகள் காட்டிடும் எழில்கொள் மோகினிப் பேய்கள் நிறைந்ததாய்,

Posted in கவிதைகள் | Comments Off on தீயவர் மாய்வர்.

காலத்தோடு ஓடுதல்.

காலமென்பது ஓடுகின்றது. கால்களும் அதற் கேற்றவாறுதான் பாலையோ அனற் பாதையோ…அதில் பாய்ந்துமே பயணித்து உள்ளது. கால்களில் அடி பட்டிருப்பினும், கால்கள் நொண்டவும், ஏதும் நோயினால்

Posted in கவிதைகள் | Comments Off on காலத்தோடு ஓடுதல்.

உளம் மாற வேண்டும்.

நல்லதிற்குக் காலமில்லை; நல்ல முயற்சிக்கு, நல்ல சிந்தனைக்கு, நல்லதனைச் செய்வதற்கு, நல்லாரைக் கூடி நடப்பதற்கு, நாட்டிலுள்ள

Posted in கவிதைகள் | Comments Off on உளம் மாற வேண்டும்.

வேறென்ன வேண்டும்?

சோடனைகள் உச்சமெனத் தோன்றும் பூஞ் சப்பறத்தில் ஆரோகணித்து வந்தாள் அன்னை; புடைசூழ்ந்து அடியார்கள் கூட்டம் அலைமோத… நாதவெள்ளம்

Posted in கவிதைகள் | Comments Off on வேறென்ன வேண்டும்?

பொய்கள் தோற்கும்

பொய்களைக் கண்டு பயந்து – அதைப் புறஞ் சொல்லுவாரென் றதிர்ந்து. நைந்து மனங்கள் நலிந்து – ஊரில் நாலுபேரின் முன் குனிந்து செய்வதறியாதிருந்து – வாழ்தல் தீது; இதற்கு மருந்து

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கள் தோற்கும்

நீதி வெல்லும்.

காலமொன் றிருக்குது. கடவுள் தீர்ப் பிருக்குது. வாலையாட்டும் தீமைகள் மாய்ந்த மெய்யிருக்குது. போலி வேசம் பொய்மைகள் போர்க்கு நின்ற போதிலும்

Posted in கவிதைகள் | Comments Off on நீதி வெல்லும்.

தூயவை துணிந்துவிட்டால்

தூயவை செய்யத் துணிந்திடில்- இடர் துயர்கள் தொடர்ந்திட மாட்டுதே- அவை மாயும் அகலும் வழிவிடும் – என மா அறிஞர் முன்புரைத்தனர்- அது நூறு சதவீதம் உண்மையாம் – எண்ணி

Posted in கவிதைகள் | Comments Off on தூயவை துணிந்துவிட்டால்

பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

பொய்கட்கு ஆயுளோ அற்பம்- அதைப் பொருந்தாது சொல்லிடின் யார் ஏற்பர் நித்தம்? பொய்களை மெய்போலச் சொல்லும்- பொய்யர் புளுகையும் ஏற்காது புவிகேட் டொதுக்கும். பொய்யிதே என்று புரிந்தும் – அதைப் புன்னகையோடே கடத்தல் சிறப்பும்!

Posted in கவிதைகள் | Comments Off on பொய்கட்கு ஆயுளோ அற்பம்.

ஆற்றா அழுகை

வானம் அழுவதனை வழமையாக்கிற் றொவ்வொராண்டும்! “தோன்றும் வெளிப்பின்றோ” டென்று உரைத்தவாயே… நீளும் இது ‘பதினெட்டு’ வரை எனச் சொல்ல… வானம் அழுகிறது இன்றும்!

Posted in கவிதைகள் | Comments Off on ஆற்றா அழுகை

சிதைவுகள்

யுத்தம் குதற உயிரிழந்து சிதைந்தவைகள் சத்தியமும் மெய்யும் தருமமும் மட்டுமல்ல.., திசைகள் சிதைந்தன, திக்குகள் சிதைந்தன, அசையாத சொத்துக்கள் அசையும் சொத்தோடு ஊர்கள் சிதைந்தன,

Posted in கவிதைகள் | Comments Off on சிதைவுகள்