Author Archives: Webadmin

உனது வெற்றிடம்

கடல் சுதி மீட்டிட, அலை ஜதி போட்டிட, கவி நூறு பாடி வருவாய். கனவினில் கண்டவை நனவினில் கைவரக் கருவியாய்க் கலையைத் தொடுவாய். விடையிலாக் கேள்விகள் மிகமிக அதிகமே… விளங்கிதை; ஞானம் பெறுவாய். ‘விதியுனைத் தேர்ந்தது – எதையோ நடத்திட’ வினைபுரி நன்று…விரைவாய். உனதுவாழ் வென்பது வரையறை கொண்டது உடலுக்கும் வயது உளது. உயிர்செய்ய எண்ணினும் … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on உனது வெற்றிடம்

கொடுங் கோடை

தீப்பிடித்து எரிகிறது எங்களது பகல்கள். ஏப்பம் இடுகிறது அனல் எட்டுத் திசைகளையும். யாரெவரின் பெருமூச்சு அனற்காற்றாய் அடிக்கிறது? யார் கரித்து இட்ட சாபம் கனலை வளர்க்கிறது? மண்ணும் மரமும் வனமும் குளம் கடலும்

Posted in கவிதைகள் | Comments Off on கொடுங் கோடை

அறிதிகொலோ?

காலகால மாக இங்கு வாழும் மெய் உயிர்ப்புகள், கல்லை மண்ணை நீரை தீயை காற்றை ஆளும் ஓர் பொருள், சூலை – விந்து சேரவே வளர்ந்து வாழுமாம் உயிர், சூழும் தாவரத்தில் பூவை – வித்து ஆக்கும் மாதிறண், காலிலாதியங்கி வையம் காக்க நிற்கும் சக்திகள், கர்மம் தீவினைகளுக்குத் தோன்றும் தண்டனை, இவை

Posted in கவிதைகள் | Comments Off on அறிதிகொலோ?

எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

மனதிலே நிற்கின்ற கவிதையாய் இல்லையே… மனது தொட்டு வருடியே மலரென, வாடாத மல்லிகைப் பூவென, மலரணும் காண்… கவிதையே! நனவில் நடந்ததைக் கனவில் கிடந்ததை நவிலணும் சுவை கூட்டியே!

Posted in கவிதைகள் | Comments Off on எழிற்பாக்கள் செய்வம் ஆர்த்து.

புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

Posted in Video | Comments Off on புலக்கண் இணையத்திற்கு வழங்கிய நேர்காணல்

கவலை

உதிர்ந்த இலைகள், பூ, கிளைகள், வேர்கள் பற்றிக்கவலைப் படுவதில்லை காண்…மரங்கள்; கலைந்தமுகில்களை எண்ணி முறைப்பதில்லை வான்; நிலத்தில்விழும்துளிகள் பற்றி வினவாது மேகம்; வீழ்ந்துசிதைந்த அலைகள்பற்றிச்

Posted in கவிதைகள் | Comments Off on கவலை

மலைத்தோம் கண்டு

தீந்தமிழின் அடையாளம், தெய்வச் சொத்து, சிறுவாழ்வின் – பேருண்மை பகரும் வேதம், வான் மறை, நற் தெய்வ வாக்கு, அடிகள் ரெண்டுள் வழக்கிலுள்ள தத்துவங்கள் உரைத்த பாக்கள், மாந்தருள்ள வரை வாழும் நெறிநூல், வைய

Posted in கவிதைகள் | Comments Off on மலைத்தோம் கண்டு

புது விதி எழுதிடா!

கண்ணா லுனைக் காண எனக் கண்ணீருடன் கதறும்… கையற் றவர் கால ற்றவர் கதையை மறந்தாயோ? புண்பட்டவர் நொந்திற்றவர் புதிரை அவிழ்க்காயோ?

Posted in கவிதைகள் | Comments Off on புது விதி எழுதிடா!

அறிக!

பஞ்சம்பசி வந்தும், பாய்ந்து சமர் தின்றும்,பாறவில்லை மண்ணின் அழகு.பாறையிடை நன்னீர் ஊறும்; நில ஈரம்பச்சையுடை போக்குந் தனக்கு.கொஞ்சும் கடல் செல்வம் கொட்டும்; உயர்வானம்கொண்டுதரும் சொர்க்க அமுது.

Posted in கவிதைகள் | Comments Off on அறிக!

யான்

அடிமையாக இருக்கமாட்டேன்; யாரை யேனும் அடக்கி அடிமையாக்கிடவும் மாட்டேன்; யார்க்கும் குடிமைசெய்து வாழமாட்டேன்; குட்டக் குட்டக் குனிந்தேவல் செய்யமாட்டேன்; யாரும் யாரை அடக்கவந்தால் அதைப்பார்த்தும் இருக்கேன்; எந்தன் ஆயுதமாய் கவியெடுத்து யுத்தம் செய்வேன்.

Posted in கவிதைகள் | Comments Off on யான்

அக்கப்போர்

தேர்தல் வருகிறது – இந்தத் தேசம் முழுதும் அடித்துப் புரளுது. ஊர்கள் கொதிக்கிறது – எங்கும் உற்சாகம் பீறிட் டொளிர்ந்து பெருகுது. தேர்தலை வெல்வதற்கு – தத்தம் திட்டங்கள் கொள்கையைத் தம்பட்டம் தட்டி

Posted in கவிதைகள் | Comments Off on அக்கப்போர்

ஒரே காற்று

வீசியது ஒரே காற்று; எமக்குமேல் சுழன்றடித்து வீசிற்று ஒரே காற்று; அவன்மீது அது அள்ளித் தூவிற்று பூக்களை, சுகந்தம், மகரந்தத்தை. தூவிற்று என்மீது தூசியை, மணல் மழையை.

Posted in கவிதைகள் | Comments Off on ஒரே காற்று

புயலை எதிர்வுகூறல்

எதைநாங்கள் எதிர்வு கூறி இருந்தாலும் அதுஎன்ன எண்ணி, அது என்ன முடிவெடுத்து, எந்த வழியில் இயங்க நினைக்கிறது என்பதைநாம் முழுதாய் அறிய இயலாது. எதிர்வு நாம் கூறியதில்

Posted in கவிதைகள் | Comments Off on புயலை எதிர்வுகூறல்

இந்த இரவு

இந்த இரவு வழமையான இரவல்ல! இந்த இரவு… இடைவிடாத மழைப்பொழிவை, இந்த இரவு… எங்கும் வெள்ளக்காட்டை, இந்த இரவு…

Posted in கவிதைகள் | Comments Off on இந்த இரவு

திருவெம்பாச் சொர்க்கம்

காலையைப் பனி கட்டிப் பிடித்துமே கருணை யற்று உறைந்திட வைத்திடும் வேளை; பிரம்ம மூர்த்தத்தின் பின்னான வேளை; நடுங்கக் குளித்துச் சிவசின்னம் சூடி… காற்று, சாரல், இருள், கூதல் சூழவே கோவில் செல்வோம்! அதி காலைப்

Posted in கவிதைகள் | Comments Off on திருவெம்பாச் சொர்க்கம்