Author Archives: Webadmin

வேலனுக்கார் ஈடு?

நல்லை ஊரை நம்பி நிதம் நாடு – அது ஞான நிழல் நல்கும் எழிற் காடு. வல்வினையில் வைக்கும் வேலும் சூடு- உந்தன் வாழ்வைமாற்றும் வேலனுக்கார் ஈடு? பக்திப் பரவசம் பெருகிப் பொங்கி – எங்கும் பாயும்; வேலின் அருள் சுரக்கும் தங்கி. முக்தி தேடுவோரும் வந்து முங்கி – தேவ மோட்சம் காட்டும் பதியைப் … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வேலனுக்கார் ஈடு?

நல்லூர்த் திருவிழா!

அண்டிவரும் பக்தருக்கு அள்ளிஅள்ளியே – செல்வம் அத்தனையும் தந்துயர்த்தும் அன்னைத் தெய்வமே! குண்டு, போர், பிணி, அனர்த்தம் சூழ்ந்த போதிலே -கொற்றக் குடை, அரணாய்க் காத்தணைத்த நல்லை வேந்தனே! என்றும் அழியா அழகு கொண்ட வேலவன் -இன்று என்ன புதுமை உள்ளதோ கொண்டாடும் நாயகன். நின்று ஒளியூட்டும் ‘அலங்கார ஆண்டவன்’- நீதி நியாயம் சொல்லி எம்குலத்தை … Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on நல்லூர்த் திருவிழா!

தேற்றி அருள்புரி.

எல்லையில் லாத எழில்கள் புனைந்து எப்போதும் புன்னகை பூத்து, எவரெவர் வந்து இருந்து எழுந்து இழகி அழும்போதும் பார்த்து, தொல்லைகள் தீர்த்து, துணிவுளஞ் சேர்த்து, தோல்விப் பயம் ஓட ஆர்த்து,

Posted in கவிதைகள் | Comments Off on தேற்றி அருள்புரி.

துணை நில்

கடலா கியநின் கருணைக் கரையில் களையா றிடுமோர் கணம்வாய்த் திடுமோ? உடலா றிடுமோ? உயிரா றிடுமோ? உணர்வூ றியவா ஒருவார்த் தையுரை!

Posted in கவிதைகள் | Comments Off on துணை நில்

உயிர்ப்பின் எழில்

சோடனைகள் விதவிதமாய்ச் சோடனைகள் வகைவகையாய்ச் சோடனைகள் என்றாலும் சோபிக்க வில்லைஏதும்! சோடனைகள் அதனைத் தூக்கி நிறுத்தவில்லை! ஏனென்றால் சோடிக்கப் பட்டதுவோ உயிரற்ற

Posted in கவிதைகள் | Comments Off on உயிர்ப்பின் எழில்

விண்ணை உலுக்கும் வினாக்கள்.

இன்னுமின்னும் தோண்ட எத்தனை கூடுகள் வந்திடும்? -அவை என்ன கொடிய கதைகளை ஊருக் குரைத்திடும்? என்ன நடந்தது யாரிவர்கள் எனும் ஐயமும், – அட என்னதான் மூடு மந்திர மென்கிற அச்சமும், இன்னும் அவிழாப் புதிராய்த் தொடருதே ஏனடா? -நிதம் எண்ணிக்கை சொல்லிக் கடந்து நாம் போறமோ? கூறடா!

Posted in கவிதைகள் | Comments Off on விண்ணை உலுக்கும் வினாக்கள்.

சுப்பிரமணி

நடக்கத் தொடங்கையிலே யார்க்கும் இடைஞ்சலில்லை. இடையில் இணைகையிலே எவரும் தடுக்கவில்லை. உடையோன் பின் வந்ததென்று ஊர் முறையிட்டதில்லை. நானே உரிமையாளன் எனயாரும் சொன்னதில்லை.

Posted in கவிதைகள் | Comments Off on சுப்பிரமணி

காக்க முயன்றால்

கலையாத கனவோடு நனவின்று வாழும். கருமங்கள் எதுஞ்செய்யத் தடைபோடும் காலம். விலைபேசி எமைவிற்க முயல்வோரின் வேகம் விழ…எங்கள் அடையாளம் தனை மீட்க வேணும்.

Posted in கவிதைகள் | Comments Off on காக்க முயன்றால்

இதுவா நேர்வழி?

என்னதான் வசை? எங்கு பார்க்கிலும் ஏனடா மனக் காழ்ப்புகள்? ஏன் பொறாமைகள்? போட்டி பூசல்கள் ஏன் பெருகுது தூற்றுதல்? நின்று நன்மைகள் செய்பவர்க்குக் கை நீட்டிக் குற்றம் சுமத்தலேன்?

Posted in கவிதைகள் | Comments Off on இதுவா நேர்வழி?

காக்கும் இறை.

எதுவரும் பொழுதிலும், இடர்சுடும் நொடியிலும், இடிகளே வீழும் கணமும். “எவையுமே தாக்காது எனை”யென் றெனக்குளே எழும் ஒரு அசரீரியும். சதிபல செய்யினும், தருமம் பிழைப்பினும், தவிர்த்து…மெய் தனை ஏய்பினும்

Posted in கவிதைகள் | Comments Off on காக்கும் இறை.

நெஞ்சோடு புலம்பல்.

ஏற்றிட முடியா இந்த இழப்பினுக் கெதைநாம் செய்வோம்? கூற்றுவன் கொடுமைக் காரன்… குணநலம் குறைந்தோன்… கண்டோம். நேற்றிந்த நேரம் நின்றோன்… “இன்றில்லை” என்ற உண்மை

Posted in கவிதைகள் | Comments Off on நெஞ்சோடு புலம்பல்.

தீயவர் மாய்வர்.

மாய மந்திர ஜாலம் நிறைந்ததாய், மர்மப் பொய்கைகள் சுண்டி இழுப்பதாய், மாயைகள் புரி வல்லவர் சூழ்ச்சிகள் வைத்து மயக்கி விழுத்தத் துடிப்பதாய், ஏய்த்து ஏமாற்றி ஆசைகள் காட்டிடும் எழில்கொள் மோகினிப் பேய்கள் நிறைந்ததாய்,

Posted in கவிதைகள் | Comments Off on தீயவர் மாய்வர்.

காலத்தோடு ஓடுதல்.

காலமென்பது ஓடுகின்றது. கால்களும் அதற் கேற்றவாறுதான் பாலையோ அனற் பாதையோ…அதில் பாய்ந்துமே பயணித்து உள்ளது. கால்களில் அடி பட்டிருப்பினும், கால்கள் நொண்டவும், ஏதும் நோயினால்

Posted in கவிதைகள் | Comments Off on காலத்தோடு ஓடுதல்.

உளம் மாற வேண்டும்.

நல்லதிற்குக் காலமில்லை; நல்ல முயற்சிக்கு, நல்ல சிந்தனைக்கு, நல்லதனைச் செய்வதற்கு, நல்லாரைக் கூடி நடப்பதற்கு, நாட்டிலுள்ள

Posted in கவிதைகள் | Comments Off on உளம் மாற வேண்டும்.

வேறென்ன வேண்டும்?

சோடனைகள் உச்சமெனத் தோன்றும் பூஞ் சப்பறத்தில் ஆரோகணித்து வந்தாள் அன்னை; புடைசூழ்ந்து அடியார்கள் கூட்டம் அலைமோத… நாதவெள்ளம்

Posted in கவிதைகள் | Comments Off on வேறென்ன வேண்டும்?