மயான மனசு

ஒவ்வொரு மனிதருள்ளும் ஒருகோடி ஆசைகள்!
ஓவ்வொரு மனதினுள்ளும்
பலகோடி ஏக்கங்கள்!
ஆசைகள் திரண்டு காற்றாய் அடித்தலைக்க,
ஏக்கங்கள் சேர்ந்து சூறைகளாய் விரட்டப்,
போகும் சருகுகளாய்

திசைகள் புரியாமல்
ஓடும் பலர் வாழ்வு!
ஓரிரண்டு ஆசைகள்
அப்பப்போ நிறைவேறி ஓரிரு துளி மகிழ்ச்சித்
தேனை நம் வாழ்வின்
நாருசிக்க வைத்தாலும்
நிறைவேறா ஆசைகள்,
நிறைவேறா ஏக்கங்கள்,
நிறைவேறாத் தவிப்புக்கள், நிதமும் கலைந்து…
உயிர்–
விட்டுச் சடலமாக…
அவை புழுத்து நாறுமுன்னே
அவற்றைப் புதைக்கின்ற மயானமாச்சு நம்மனசு!
மனது மயானமாக…
உடலோ துடக்காக…
கழுவித் துடைத்தாலும் கறையுடன்தான்
நம்வாழ்வு!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply