வரம்

சிறப்போ டிருக்கையிலே,
புகழ்குன்றாப் பொழுதினிலே,
மரியாதை கிடைக்கையிலே,
மதிப்பும் தொடர்கையிலே,
வெறுப்பு வருமுன்பே,
விமர்சனம் எழுமுன்னே,
“இருக்காரோ சிலகாலம் இன்னும்”
என்று கேட்கையிலே…
“இருக்கிறானோ இன்னும்” என
எவரும் விரட்டுமுன்பே….
பதவியில் இருந்தும்…இப்
புவியில் இருந்தும்…யான்
விடைபெற்றுப் போகும் விதியைப்
பெறவேண்டும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply