அர்த்தம்

எத்தனை அழகுகளை நீவிர் வரைந்தாலும்,
எத்தனை அழகுமாடம்
நீர் கட்டி வளர்த்தாலும்,
எத்தனை எழிற் சிற்பம் நீவிர் செதுக்கினாலும்,

எத்தனை எழில் நகைகள்
நீர் நுணுகிப் புனைந்தாலும்,
அத்தனையும் ஒன்றுமற்ற தாக்கிவிடும்
மாயை இருள்!
அத்தனையும் துலங்கவைத்து அழகாக்கும்
தூய ஒளி!
ஒளியாயா இருளாயா உலவுகிறீர்
நீவிர் இவ்
உலகத்தில் என்பதில் தான்
உறைந்துளதும் வாழ்வின் அர்த்தம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply