தட்டுப் பாடு

எப்போ வரும் போகும்?
என்று தோன்றும் மறையும்?
எப்போ உறங்கும்?
எப்போ விழித்தெழும்பும்?
என்று எவரறிவார்?
போர்நாளில் திடீரென்று
மண்ணெண்ணை, பெற்றோல், சவர்க்காரம்,
மா, சீனி,
மின்சாரம், மர்மமாய்
விலகி மறைந்தது போல்…,
அத்தியா வசியங்கள் அகன்று
பதுங்குதல்போல் ..,
தட்டுப்பா டெழுவது போல்…, தான்
சமூக வலைத்தளங்கள்
கிட்ட வெடிச்சத்தம் கேட்டால்…
ஒருதுயரம்
எட்ட நடந்தால் இருள்கிறது!
ஒரு செய்தி
நொட்ட… மறுகணமே நூர்கிறது !
வலைவீரர்
திட்டத்தாலா திசைகள் தீய்கிறது?
உண்மைக்கும்
தட்டுப் பாடின்றேன்
அடிக்கடி வருகிறது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply