பயணி பயணி நீ…

கவிதை மேகங்கள் கருணை கூருங்கள்
கனவு பூக்கட்டும் நனவிலே!
கடலின் ஆழங்கள் அறியும் ஞானங்கள்
கனிய வாழ்த்துங்கள் மனதிலே
புவியின் மர்மங்கள் புரிய…ஈகங்கள்
புரிய… வேதங்கள் எழுகவே!
புலரும் காலங்கள் பொலிய நேருங்கள்…
புதுமை நம் காட்டில் பொழியவே!

துயரும் பிணிநோயும் மரணமதுஞ்சூழ
தொலையும் கணம் மண்ணில் நிம்மதி!
சுவர்க்கம் இது இந்த இடர்கள் வரும் போகும்
துவளின்… சருகாகும் நின்கதி!
பயமும் மனஐய மதுவும் எழும்… ஓயும்
பயணி அயராமல் பயணி நீ!
பசிகள் உனைத்தூண்டும் தணிக்க கணம் நீயும்
பதிலை அறிந்துண்ணு உயர்வை நீ!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply