நம்பிக்கை

கால்கள் இன்றைக்கும் ஓய்ந்திட வில்லையே.
கைகள் இன்றும் களைத்ததும் இல்லையே.
வாய்கள் ஊமையாய்ப் போனது இல்லையே.
மனங்கள் என்றும் மயங்கிய தில்லையே.
தாகம், பசி, நோ, தணியாத போதிலும்
தவிப்பின் ஏக்கம் அடங்கிட வில்லையே.
வாழு மட்டும் வரளாத நம்பிக்கை
வரங்களைத் தரும்…ஐயங்கள் இல்லையே!

நம்பிக்கைகள் ஒருநாள் பலித்திடும்
நமது கற்பனை ஓர்நாள் உருப்பெறும்.
சம்பவங்களும் மாறும் …சரித்திரம்
தருமம் நீதியின் பக்கமே நின்றிடும்.
கும்பி எரிவு குறையும் . பசி தாக
கொடுமை ஓர்நாள் முடியும்! மனங்களில்
தெம்பெழும்…அந்தத் தினத்தில் வடு காயம்
தேறி…எம்தலை மகுடம் புனையுமாம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply