தர்மம்

கவிதை பாடினோம் கனவை நாடினோம்
கலையுமாடினோம் கதிரைதேடினோம்
புவியையாழ்பவர் இறைவரென்று ஊர்
புரியவாடினோம்.. புனிதந்தேடினோம்!
அவலம் சூழ்ந்தது; அயல்சிதைந்தது
அனல்எழுந்தது; உயிரவிந்தது!
தவறு எங்கென எவருரைப்பது?
தருமம் விட்டதால் இவைநடந்தது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply