செயல்

கதைக்கின்றோம்…
தொடர்ந்து கதைத்துக்கொண் டிருக்கின்றோம்!
கதைப்பதற்குச் சார்பெதிராய்
கட்டுக் கட்டாக
ஆலோசனைகள் ஆயிரம் எழுதுகிறோம்!
நேற்றுப் போலன்றி
அனேகமாய் எல்லோரும்
தாமாகத் தம்தம் அபிப்பிராயம் கருத்துகளை
ஊருக்கு உரைக்கின்றோம் அஞ்சாமல்
விவாதித்து
மாற்றுக் கருத்துகளால்
மல்யுத்தம் நிதம்புரிவோம்!
யார்தான்..கதைத்ததில்,
எழுதியதில், விமர்சனம்
நீள நடத்தியதில், நூற்றினிலே ஒருபத்து
வீதம் செயலினிலே காட்டினோம்?
அதால்தான்
எம்பேச்சு எழுத்து விமர்சனம்
எவையுமே
எம்மையொரு அங்குலமும் உயர்தவில்லை…
எவர் ஏற்றோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply