வீதி விதி

துப்பாக்கி, கைக்குண்டு ,
ஆர்.பி.ஜி , எறிகணையை 
அப்போது நம்பி அலைந்த 
எமதர்மன் 
எப்போதோ டெங்கை,
தற்கொலையை, கொலையை, நம்பி… 
இப்போது அநேகமாக 
நம்புகிறான் விபத்துகளை !
எப்பாதை தனில் வருவான் இவன் 
சொல்வார் யார் பதிலை?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply