புனிதம்

மீள மீளப் பாறைகளில் 
வந்து வந்து மோதியே 
போம்…அலைகள் 
பாறைகளின் அழுக்ககற்றி புனிதமாக்கும் 
தீவிர பணியில் திளைக்கிறதா?
இல்லாட்டில் 
பாறைகளில் மோதிமோதித் 
தமைத்தாம் துவைத்தபடி 
“தாம் புனிதம் ஆகிடலாம்” என்று 
தவித்தனவா?
யார் – யாரைப் புனிதமாக்க வேண்டும் 
என்று புரியாது- 
தான்…இவைகள் போராடி 
விடை தெரியா துள்ளனவா?
பாறைகளும் கரையாத மனதோடு 
பார்த்துளதா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply