உயிர்த்த ஞாயிறு

மனிதர்களை வாழ்விக்க 
இயேசுபிரான் உயிர்த்த நாளில் 
எவர்களினை வாழ்விக்க 
இப்பலிகள் எடுத்தார்கள்?
இனப்போர் முடிந்து எழுந்த போதைப் 
போர் மூண்டு 
தணிந்திடுமுன் மதப்போர் தனைத்தூண்ட 
இதயத்தை 
பிடுங்கி எறிந்துவிட்டா 
பேய்க்குண்டு பொருத்தினார்கள்?
“வெடிக்கவேணும் அமைதி” என்று 
எவ் இறையை நேர்ந்தார்கள்??

21.04.2019

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply