மரிப்பும் உயிர்ப்பும்

மதத்துவேசம் என்ற மாபெரிய
சிலுவையில்….தற்
கொலைக்குண்டு வெடிப்புச் சிதறலென்னும்
ஆணிகளால்
அறையுண்டு இயேசு…மீண்டும்
ஆவி துறந்து …இவ்
உலகே அதிர்ந்து இருளவைத்தார்…
முன்பொருநாள்
உயிர்த்து அதே உலகுக்கு
உயிர்கொடுத்த ஞாயிற்றில்!

என்று மீண்டுயிர்த்து
இருண்ட நிலம் ஒளிர
புன்னகைப்பார்?
குண்டுப் பொதிசுமக்கா
மத இணக்கம்
மின்னுகிற பொன்னுலகில்?
விழித்தெழுந்த மனிதர்நெஞ்சில்?

25.04.2019

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply