பசி

சிங்கங்கள் மீண்டும் சிலிர்த்தெழுந்து
கர்ச்சித்து
தங்கி…இதுவரையும்
அமைதி தவம் செய்த
குகைவிட்டுக் கோபமுடன்
குமுறி வெளிவந்து
திகைத்த திசைகளைப் பார்த்து
“தேடி இரைபிடித்துக்
கொண்டுடனே வாருங்கள்!
கொண்டுவரும் வரை பசித்தீ
கொழுந்து விட்டெரியும்” எனக் கொதித்து
மயிர் சிலிர்ப்பி நிற்க…
எழுந்து மிரண்டதிர்ந்த
நரி ஓநாய் காகங்கள்
“ஏன் சோலி பொல்லாப்பு ஏன்”
என்று கலந்துபேசி
ஆதிக் கதைபோல….
நாளுக் கொரு இரையைப்
போடத் துணிந்தன காண்!
புது இரைகள் முன் கதைபோல்
போகுமோ தினமும் ஒன்றாய்?
புகைந்து இன்று கொழுந்துவிட்டுச்
சீறும் பசித்தீ அடங்குமட்டும்
சீயங்கள்
ஓயுமோ?
பொறுமை இழந்து ஊருள் புகுந்து
தின்னப்
பாயுமோ?
யார்தான் அறிவார் பராபரமே?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply