எவ்வாறு புரியும் இவ் உலகு?

நேற்றிருந்தேன் மொட்டாய்.
இன்றுபூத்தேன் பூவாய்.
நாளை முகிழ்வேன்யான் காய்,கனியாய்.
அதன் பின்னே
வீழ்வேன் கனியிருந்து வித்தாய்.
நேற்றிருந்து
நாளைக்கும் அதன்பின்பும்
எனை நகர்த்துமாம் காலம்!
நான் நம்பு கின்றேன் யான்
வெம்பி மாளேன் என்றும்!
நீளும் வரலாற்றின் நிறைவினிலே
மொட்டாயா?
பூவாயா? காய் கனியாய் வித்தாயா?
யான்…எதுவாய்
பார்க்கப் படவுள்ளேன்
எவர் வாய் பதில் சொல்லும் ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply