நினைவுக் குரங்கு

நினைவுக் குரங்கு 
நிமிடத்துக் கொருதரம்….தான் 
நினைத்தபடி அங்குமிங்கும் நின்று 
பாய்ந்து கொப்புமாறி 
ஓரிடமும் கணமும் ஒதுங்காமல் 
குதித்துப் 
பாய்கையிலே…..
மனக்கிளையின் பழங்களும் 
பூ பிஞ்சும் 
நாலு திசைகளுக்கும் சிதறிடுது!
குழப்படி செய் 
இக்குரங்கு ஓரிடத்தில் இராது;
தன் குட்டிகளைப் 
பக்காவாய்க் காவியே பாயுமன்றி 
கொப்பிழக்கப் 
பாயாது!
ஆனால் பாயும் அதன் வேகத்தில் 
தேகம் தடுமாறி 
எதும் செய்ய முடியாது 
தேய்கிறது;
அதைக்கண்டு 
ஊர் கிலி கொள்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply