சாஸ்வதம்

பறக்க எழும் மனது.
பறக்க விடும் சிறகு.
தொடுவானம் தாண்டிச் சுடரும்
ஒளிப்பந்தை
அடைய உயர உயர
அயராமல்
அலைகையில்….
நிலத்தில் அழிகிறது எனதுநிழல்!
மலையுச்சிக் கேறினாலும்,
பள்ளத்தாக் கிறங்கினாலும்,
கலக்கமில்லை எனக்கு….
வாழும் பாவலனின் புகழ்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply