சு’தந்திரம்’

உப்பிட்டவர் களை உள்ளளவும் நினைக்கத்
துப்பற்றுக் கடைகளிலே
தொங்கிடுது கருவாடு!
உப்பிடுதல் உயிர்க்கு …வாழ்வு;
உடல் அழுகா திருப்பதற்கு
உப்பிடுதல் வேறு;
இரண்டும் ஒன்றென்கிறதா உலகு?
உப்பு அறியாது.
உப்புக்குப் புரியாது.
உப்பிடுவோர் சுயநலத்தால்…,
இடும் உப்பின் அளவுகளால் …,
ஒப்பற்ற உயிர்வளர்ச்சி
கருவாடாய் மாறுதின்று !

08.02.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply