தகுதி

தங்கள் தரப்பில் தனித்துத்
திசைக்கொன்றாய்
மங்கிக் கிடந்தவரை, வாய்ப்புகளை,
கணம் முயன்று
ஒன்றாக்கி…எல்லோரும் ஒரே குரலில்
கூவவைத்து,
தன்’ஜாரியை’ பிளந்து தவிடு பொடிசெய்து,
உண்டு உறுதியான வழி
என்றூர் நம்பவைத்து,
மந்தைகளை சாய்ப்பதுபோல்
மனங்களையும் சாய்த்து,
இங்கே ஒரேகுரலாய் இணைந்தொன்றாய்
நின்றிருந்த
பங்காளர்கள் தம்முள் பகைக்கவைத்து,
திசைக்கொன்றாய்
சென்று சிதறி
ஈனக் குரலில் அவர்
சன்னமாய் அனுங்கவைத்து,
அக்குரல்களின் தயவில்
தங்கியும் இராது,
சாதித்த ‘இராஜதந்ரச்
சங்கைக்கு’
‘சாணக் கியத்திற்கு’ நிகராக
இங்குண்டா யாரும்?
இவர் ஜெயித்தல் இ(ல்)லை வியப்பும்!
06.08.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply