Author Archives: Webadmin

கோடைத் தகிப்பு

தாரும் உருகிடுது. தாவரங்கள் கருகிடுது. வேரும் பதறிடுது. விலங்கெல்லாம் வாடிடுது. நீர்…ஆவியாக நெடுங்குளங்கள் வற்றிடுது.

Posted in கவிதைகள் | Comments Off on கோடைத் தகிப்பு

கோடை

நெருப்பள்ளிக் கொட்டுது நெடும்பகல். தீப்பிடித்து எரிகிறது திசைகள். ‘எரிபற்று நிலை’ கடந்து பொசுங்கிய காற்று பொடியாய்ப் புழுதியாய்

Posted in கவிதைகள் | Comments Off on கோடை

வல்லிபுரத்து மாயவா இறுவட்டு வெளியீடு 

Posted in Video | Comments Off on வல்லிபுரத்து மாயவா இறுவட்டு வெளியீடு 

பிரகடனம்

நெஞ்சில் நேர்மையும், வாயிலே உண்மையும், நீதியின் வழி சென்றிடும் கால்களும், அஞ்சிடாது தவறைத் திருத்திடும் ஆற்றலும், பணம் காசு பதவியில் கொஞ்சமும் பற்றற்ற குணமும்…நம் கோவில் குளம் பழ மரபில் நம்பிக்கையும்,

Posted in கவிதைகள் | Comments Off on பிரகடனம்

கனவு காண(ன)ல்

என்னென்ன கனாக்கள் இனிமேற் பலித்திடுமோ? என்னென்ன கனவுகள் இனி நனவாய் மாறிடுமோ? எந்தெந்தக் கனாக்கள் இடையில் கலைந்திடுமோ? எந்தெந்தக் கனவுகளை

Posted in கவிதைகள் | Comments Off on கனவு காண(ன)ல்

வசந்தம்

வலையெறிந்து போகிறது வசந்தம்! இளங்காற்று தலைகுளப்பி மேனியிலே தடவும் சுகந்தத்தை! சந்தனத் தென்றல் வருடிச் சுகம்கேட்கும்! மந்திரஞ் சொல் அலைகள்

Posted in கவிதைகள் | Comments Off on வசந்தம்

பங்கம் துடைப்பேன்

சொற்கள் நதியாய்ச் சுரந்துகொண்டே இருக்க, கற்பனை ஆழம் அகலம் காணாக் கடலாய் விரிந்த படி பெருக, விந்தைப் பொருள்வகையோ

Posted in கவிதைகள் | Comments Off on பங்கம் துடைப்பேன்

அறிவோன்

இறைவன் அறிவான் எவன் பொய்யன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் மெய்யன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் அழுக்கன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் தூயன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் நண்பன் என்பதனை. இறைவன் அறிவான் எவன் பகைவன் என்பதனை.

Posted in கவிதைகள் | Comments Off on அறிவோன்

என் கவி(வி)தைகள்.

காலனைக் கண்டு நடுங்கிடும் -கதை கவிஞன் எனக்கென்றும் இல்லையே-அவன் ஓலம் இட்டோடித் தொலைந்திட -எந்தன் ஊற்றுக் கவிதை உதவுமே -புது வேல்களாய்ப் பாயும் வரிகள்முன்-எந்த வில்லங்கம் துன்பந்தான் நிற்குமே?-உடல்

Posted in கவிதைகள் | Comments Off on என் கவி(வி)தைகள்.

காவல்

தேரடியில் தேடி எமைச் சீண்டுகிற காற்றும் தீர்த்தம் தரும் கேணியதன் தேனமுத ஊற்றும் கோபுரம் நிமிர்ந்துகலங் கரை யெனவே ஆளும் கூட்டி வரும்…’திக்குத் தெரியாத வரை’ நாளும் ஆறு நிலைப் பூசை மணி ஓசை வரவேற்கும்

Posted in கவிதைகள் | Comments Off on காவல்

நாயகன்

தீயவர்கள் சேர்ந்து நின்று தீமை செய்யும் போதிலும் தேடியே துயர் விதைக்கத் திட்டம் தீட்டும் போதிலும் வாயினால் பழிப்புரைத்து மாயவைக்கும் போதிலும் வஞ்சகங்களால் தடைகள் காலிலிட்ட போதிலும் நீ நிமிர்ந்து நின்று கொண்டு நீதி நியாயம் கேட்கிறாய். நெஞ்சுரம் குறைந்திடாது நேர்மையோடு ஆர்க்கிறாய்.

Posted in கவிதைகள் | Comments Off on நாயகன்

தணியாத தாகம்.

எல்லோரும் தம்மை ஏதோ ஒருவிதத்தில் எல்லோர்க்கும் நிரூபிக்கும் எத்தனத்தோ டியங்குகிறார்! ஒருவர் எழுதுகிறார். இன்னொருவர் பாடுகிறார். ஒருவரோ ஆடுகிறார்.

Posted in கவிதைகள் | Comments Off on தணியாத தாகம்.

கேள்விச் செகிடர்.

வானம் அதிரந்ததென -இடி மண்ணில் விழுந்ததென கானம் பிறந்ததடா -கனல் கண்ணைப் பறித்ததடா ஈனம் களைந்திடவே -எழும் ஈடில் இசை அதனை

Posted in கவிதைகள் | Comments Off on கேள்விச் செகிடர்.

வாழ்வைத் தொலைக்கும் வழி.

நிலத்தினடி நீர்தான் நிலைத்த வளமெமக்கும்! நிலத்தடியில் எம் ஊரில் தனித்துவமாய் நிற்கின்ற சுண்ணக்கற் பாறைப் படுக்கைமேல் வடிந்து தேங்கும் தண்ணீர்தான் எம்வாழ்வின்

Posted in கவிதைகள் | Comments Off on வாழ்வைத் தொலைக்கும் வழி.

என்னதான் ஆகுமோ இங்கு?

வீதியெங்கிலும் தீமை சூழ்ந்தது. வேதனைப் புதர் தான் வளர்ந்தது. பேதமாயிரம் பூத்தெழுந்தது. பிச்சல் பிடுங்கல்களே நிறைந்தது. சோதனைகளும் சூழ்ந்துவந்தது. சோறு தேடியே வாய்களோய்ந்தது.

Posted in கவிதைகள் | Comments Off on என்னதான் ஆகுமோ இங்கு?