Category Archives: கவிதைகள்

ஊர் மாறி உரு மாறி

காலாற யான் நடந்த களிமண் வீதி காப்பற்றாய் மாறிநிற்கும்! காற்றை வாங்கி மேலெல்லாம் ஒத்தடங்கள் பிடிக்கும்…மூலை வேம்பு நின்ற இடத்தில் தொலைத் தொடர்பைக் காவும் கோபுரமா நிழல் விரிக்கும்? கிடுகு வேலி குறைந்தெங்கும் மதில் சூழும்…மாரி வெள்ளம்

Posted in கவிதைகள் | Leave a comment

செய் பிழை

காலம் கடத்தி ஆற்றவேண்டிய கடமை காலம் கடத்தியே ஆற்றப் படல் வேண்டும்! காலம் கடத்தாது ஆற்றவேண்டிய கடமை காலம் கடத்தாதே ஆற்றப் படல் வேண்டும்!

Posted in கவிதைகள் | Leave a comment

கனவாக ஏன் கலைந்தாய்?

தீயணைக்கச் சென்றவனே…. சா அணைக்க ஏன் சரிந்தாய்? தீ அணைந்திருக்கும் அங்கு; தீப்பிடித்து.. எம் நெஞ்சு! நீ அணைத்த தீயாலே நிஜம் தப்பிப் பிழைத்ததன்று!

Posted in கவிதைகள் | Leave a comment

வேசம்

அகத்திலே… எனைவீழ்த்த அம்புகளைக் கூர்தீட்டி, அகத்திலே… எனைச் சாய்க்க அரிய வியூகம் ஆக்கி, அகத்திலே… எனைப்புதைக்க ஆசைக் கிடங்குவெட்டி,

Posted in கவிதைகள் | Leave a comment

கவி அறிக!

கவிதை என்பது கசிந்து உருகியும், கவிதை என்பது கட்டி இறுக்கியும், கவிதை என்பது கொஞ்சிக் குலாவியும், கவிதை என்பது கெஞ்சி அளாவியும், கவிதை கண்ணீர் சிந்த இழக்கியும், கவிதை கிச்சுக் கிச்சுக்கள் மூட்டியும்,

Posted in கவிதைகள் | Leave a comment

சுயமழிப்பு

பகலைப் பகலாய் இருக்க விடாது …கரு முகில்கள்; பகலின் முகத்தை அவைமறைக்கும்! இரவை இரவாய் இருக்க விடாது…ராவில் எரியும் விளக்குகள்; இரவியல்பெழில் சிதைக்கும்!

Posted in கவிதைகள் | Leave a comment

தாகம்

சாவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியாய் நின்ற நம் வீதியோரப் பனைகளை விசிறியாக்கிப் போம்…காற்று தேன் நக்கித் தாகம் ஆற்றும் திக்கிலுள்ள பூக்களிலே!

Posted in கவிதைகள் | Leave a comment

தாய்மை

எத்தனை இடர்களை எவரெவர் புரிந்தாலும், எத்தனை துன்பத்தை இற்றைவரை மனுக்குலத்தோர் செய்து அழித்தாலும், சிதைத்து முடித்தாலும், வையத் துயிர் உடலை வாட்டி வறுத்தாலும்,

Posted in கவிதைகள் | Leave a comment

பிடி

நெகிழ்ந்த கயிறுகள் நின்று மீண்டும் இறுகி அகத்தைப் புறத்தை அழுத்தத் தொடங்கியதால்… அசைக்க முடியாமல் அலறி ஓயும் கை கால்கள்.

Posted in கவிதைகள் | Comments Off on பிடி

ஊர் இதம்

வண்ணமயில் தோகை விரித்தாடுகிற போது வாய்திறந்து சந்த கவி பாடுகிற போது என் மனது விண் படியில் ஏறுகிற போது இன்பமெழும்… ஆம் இதற்கு ஈடு இணை ஏது?

Posted in கவிதைகள் | Comments Off on ஊர் இதம்

சிரஞ்சீவி

சாமி உறங்கியதாய்… சாமி மயங்கியதாய்… சாமி உயிர்விட்டுச் சமாதியாய்ப் போனதுவாய்… ஏதும் குறிப்பில்லை எங்கும்! அது நிஷ்டை

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும் கனவுகள் மாறி உதிரும் கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும் கருத்ததும் மாறி அதிரும் ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும் ஞாயமும் மாறி மறுகும்

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லதே நடக்கட்டும்!

பொய்யாய்ப் பழங்கதையாய் போனதெல்லாம் போகட்டும்! மெய்யை வருத்தி, மேனியெல்லாம் புண் பெருக்கி, உள்ளத்தில் ஆறா ஒருகோடி காயங்கள் அள்ளி அடுக்கி,

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பது எப்போ?

கண்ணுக்குத் தெரியாக் கறுமக் கிருமிகளை மண்ணுக் கனுப்பி தனது அதிருப்தியையும் வெறுப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தி இந்நாளில் திரும்பிடுது தன் இயல்புத்

Posted in கவிதைகள் | Leave a comment

மூச்சைத் தேடி

நாதி யற்றவர் ஆனோர் …நிலத்தினில் நாளை என்பதை யாரின் துணையொடெவ் வீதி யாலே கடந்திடுவோம் …?அமர் விபத்தில் சிக்கி முடவர் குருடராய் வேதனை சுமந்தா நிதம் யாசகம் வேண்டி வாழுவோம்? நாமித் திசையதன்

Posted in கவிதைகள் | Leave a comment