சுக-வலி

எவ்வளவு சுகமாய் இதமாய் இருந்ததது?
அவ்வளவு கடி அரிச்சல்…
அகலா எரிச்சல்…அதால்
எவ்வளவோ பொறுமைகாத்து ஏலாது
கசக்குகையில்
எவ்வளவு சுகமாய் இதமாய் இருந்ததது?
ஆனால் இதனைக் கசக்கவரும்
சுகம் இனிமேல்
தீரா இரணவலியை
வேதனையைத் தான் தருமாம்!
சுகத்தாலும் துன்பம் வருமாம்!
மிகச்சிவந்து
அரித்தபடி.. மீண்டும் மீண்டும் கசக்கென்று
உரைக்கிறதே விழிகள்…
கண்ணீர் உகுந்தனவாம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply