முயல்வு

எட்டிய என் எல்லையில் இருந்து
அடுத்த எல்லைக்கு
எட்டி நடக்கின்றேன்!
இயங்குகிற என் காலும்,
உள்ளமும், இதயமும்,
உடலினது ஒத்துழைப்பும்,
தள்ளா துதவுகிற காலமும்
துணிவுதர
அடுத்தடுத்த எல்லைகளை
அடைய முயல்கிறது
விடைதெரியா வாழ்வு!
நாளை என்ன நடக்குமென
உறுதியாய் அறியாது உயிரெனினும்
மனம் உடைந்து
வறுமைப் படாதுதான் வளரும்
கனா…நனவு.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.