எனக்கானது

எனக்கான பருக்கையை எவர் அறுத்து எடுத்தாலும்,
எனக்கான பருக்கை எவரிடத்தில்
இருந்தாலும்,
எனக்கான பருக்கை எவர்கடையில் கிடந்தாலும்,
எனக்கான பருக்கையை எவர்தான்
பறித்தாலும்,
எனக்கான பருக்கை எங்கெங்கோ சென்றாலும்,
எனக்கான பருக்கையை
எவர்வாங்கிக் கொண்டாலும்,
எனக்கான பருக்கையை எவர்தான் சமைத்தாலும்,
எனக்கான பருக்கை எவர்தட்டில் வீழ்ந்தாலும்,
எனக்கான பருக்கை
எப்படியும் ஏதோ வழியில்
எனக்காகும்;
என்னுடலிற் தான் அது சுவறிவிடும்!
எனக்கான பருக்கை எப்படியும் எனக்காகும்!
எனக்கான பருக்கை எனைஅறிந்தா எனைநாடும்?
எனக்கான பருக்கை யான்
விரும்பாதும்… எனைச்சேரும்!
எனக்கில்லாப் பருக்கைக்காய்
ஏங்கித்தான் என்னாகும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.