தும்பிச் சூரன்!

ஈட்டி முனைக்கூரில்
தன் ஒருகாற் பெருவிரலை
ஊன்றிநின் றொருநூறு யுகங்கள்
தவம் செய்து
சாகா வரம் பெற்றுச்
சகலரையும் ஆட்டுவித்த
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கீழடி

தெய்வத் தமிழே! திசைதிக்கில் மூத்தவளே 
வையத் தினுக்கே வழிகாட்டி –உய்விக்கும் 
அன்னாய்…உனதுசேய்கள் ஆம்…உன் பெருமைகளைக் 
கண்டோமே கண்முன் களித்து!

Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

யாமறிவோம்

எங்களுக்குத் தெரியும் எதைச் செய்ய வேணுமென்று!
எங்களுக்குத் தெரியும் 
எதுசெய்தால் தவறென்று!
உங்களது கட்டளையை,
உங்களது வேண்டுகோளை ,
உங்களது ஆதரவை,
உங்கள் புறக்கணிப்பை,
உங்கள் உடன்பாட்டை,
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சொற்களை உயிர்ப்பித்தோன்

சடங்களெனக் கிடந்தன சொற்கள்
தரையெங்கும்
உடைந்து உதிர்ந்த கற்களென நொருங்கினவாம்!
பழுத்து விழுந்து சிதையும் சருகுகளாய்
அழுகி ஒழுகி அழியும் 
உடம்புகளாய்க்
கிடந்தன சொற்கள்…
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுயம்

மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உயிர்
மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…உடல்
மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…மரம்
மரபணு மாற்றி வடிவமைக்கப் பட்ட…இனம்
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மதமதம்

மனிதர் களையும் 
புனிதர் களையும் 
தனித்துவ எல்லை தாண்டி 
எரித்துப் புதைப்பதற்கு 
மதம்பிடித்து அலைகிறது மதம்;
அந்த மத மதத்தால் 
புதைந்தும் எரிந்தும் 
பொருளிழக்கும் 
மனித இனம்!

Posted in கவிதைகள் | Leave a comment

நினைவுக் குரங்கு

நினைவுக் குரங்கு 
நிமிடத்துக் கொருதரம்….தான் 
நினைத்தபடி அங்குமிங்கும் நின்று 
பாய்ந்து கொப்புமாறி 
ஓரிடமும் கணமும் ஒதுங்காமல் 
குதித்துப் 
பாய்கையிலே…..
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எவ்வாறு புரியும் இவ் உலகு?

நேற்றிருந்தேன் மொட்டாய்.
இன்றுபூத்தேன் பூவாய்.
நாளை முகிழ்வேன்யான் காய்,கனியாய்.
அதன் பின்னே
வீழ்வேன் கனியிருந்து வித்தாய்.
நேற்றிருந்து
நாளைக்கும் அதன்பின்பும்
எனை நகர்த்துமாம் காலம்!
நான் நம்பு கின்றேன் யான்
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பாவலனாம் காவலன்

கண்ணீரின் மழையிலே ககனங்கள் நனையவே
கவிஞானி பா இசைத்தான்.
கற்பனை ஆழியில் அற்புதம் பலநூறு
கவிமகன் மீட்டெடுத்தான்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நிழலென நீங்கான்

தலையினைக் குறி வைத்திடும் வேட்டினை 
தலைப் பாகையோடு சென்று விழ வைக்கும் 
கலை அறிந்தவன் கந்தன்…! உளத்தினால் 
கசிந்து உருகி அழைக்கும் அடியவர் 
மலைத் துயர்கள் முகிலாய்க் கலைந்திட, 
மனக் கவலைகள் மாய்ந்தே மடிந்திட, 
பல புதுமைகள் கணமும் நடத்துவான்!
பாச நிழலென நீங்கான்…தொடருவான்!

Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

வாழ்வில் தா ஒளி

உன்னடியே தஞ்சமென்று வந்து விழுந்தோம் –உந்தன்
ஒளிமுகத்தைக் கண்டு உள இருளைக் களைந்தோம்
எம் செயலில் ஏதுமில்லை என்று உணர்ந்தோம் –என்றும்
எல்லாமும் நீ பார்த்துக் கொள்வாய் என்று தெளிந்தோம்

Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

இன்னுமின்னும் நூறு சந்ததிக்கும்….

சந்தன வாசமும் செந்தமிழ் வேதமும் 
தண் மணி நாதமும் தவழும்.
சங்கொலி, தேன் குழல், சந்தக் கவிஇலயம், 
சல்லாரியால் இசை மலரும்.
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேட்டை

வாளை எடுத்து நல் வேதியர் –முன்னே 
வந்து கம்பீரங்கள் காட்டிட –திரு 
வேல்கள் பிடித்து நிரையென –பலர் 
வீறுடன் தோன்றித் தொடர்ந்திட –கொம்பு 
பேரிகை ஆர்க்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தேரோட்டம்

தேரசைந்து வாற நேரம் திசைகள் வேர்த்திடும் –நம்மைத் 
தேடி ‘ஆறு முகர்’ கிளம்ப ஆன்ம அதிர்வெழும்.
ஊர் உலகம் கூடி நல்லை வீதியில் விழும் –தேரும் 
ஓட…கற்களாக எங்கள் இடர்கள் பொடிபடும்!

Continue reading
Posted in கவிதைகள் | Leave a comment

பிழைபோக்கி அணை

அருளூட்டி அரசாளும் தேவன் –ஞான
அழகூறும் தமிழ் மண்ணின் சீலன்
பொருளோடு புகழ் கூட்டும் பாலன் –நாளும்
புதுமைகள் தரும் நல்லை வேலன்!
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment