Author Archives: Webadmin

சந்நதியெம் சந்ததிக்கு காவல்

அன்புகனிந்துன் பதியை வந்து அணைந்தேன். –இன்று ‘அன்னதானக் கந்தனே’ உன்வீதி உருண்டேன்! சந்நதியெம் சந்ததிக்கு காவல் உணர்ந்தேன். –உந்தன் தாள்நிழலே ஞானமடி என்று தெளிந்தேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

நியாயப் படுத்தல்கள்

நியாயப் படுத்தல்கள் முடிவுகளாய் மாறாது. நியாயப் படுத்தல்கள் இறுதித் தீர்வாகாது. நானென் ‘சரி’ உரைக்க நியாயப் படுத்துகிறேன். நானென் ‘பிழை’மறைக்க நியாயப் படுத்துகிறேன்.

Posted in கவிதைகள் | Leave a comment

விழா உலா

உன்னுடைய வீதியில்நீ உலவும் போது உன்னெழிலின் சூடுருக்க…பனியா கநான் உன்னடியில் உருகிடுவேன்! உன்னைக் கண்டென் உயிர்உளமும் குளிர்ந்து…பரவசத்தில் ஆழ்ந்து இன்பத்தின் எல்லைதொட்டு…துன்பம் விட்டு…

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லையூர் நாதனை நாடு

வேலைப் பிடித்து நல்லூரவன் வீதியில் வெள்ளி மயில்தனில் ஏறி – வந்து மின்னுவான் ஆசிகள் கூறி – அவன் காலைப் பிடித்திரு பத்தைந்து நாட்களும் கண்களில் ஒற்றுவோம் கூடி – “எம்மை காப்பாற்று” என்றாடிப் பாடி!

Posted in கவிதைகள் | Leave a comment

உயர்ந்தவன்

எல்லாத் திலும் ஒருவன் உயர்ந்தவனாய் ஆகிடுதல் சாத்தியமே தானா இச்செக வாழ்க்கையிலே…? ஒருவன் உயரத்தில் உயர்ந்தவனாய் இருந்திடலாம், ஒருவன் நிறத்தில் உயர்ந்தவனாய் திரிந்திடலாம்,

Posted in கவிதைகள் | Leave a comment

நம் நல்லூரான்

அன்பன் எனத்தொடர்ந்தால் அருளி, அணுக்கமான தொண்டனாக்கி, நெஞ்சால் நினைந்தணைக்கும் தோழனாக்கி, என்றும் தனதுயிர் நிழலில் களைப்பாறப்

Posted in கவிதைகள் | Leave a comment

பூமழைப் பொழுது

வேப்பம்பூ ஒவ்வொன்றும் துளிகளாச்சு! முற்றத்தில் வேப்பம்பூ மழைபொழிந்து வேப்பம்பூ வெள்ளம் காலடியிற் பரவிற்று!

Posted in கவிதைகள் | Leave a comment

இசைவேள்வி – 2016

இசையென்னும் சொற்-பொருளாய், இலக்க ணமாய், இலக்கியமாய், இசையமுதைப் படைக்க வல்லோர்… இசைவடிவாய் வாழுபவர்…இறங்கி:எங்கள் இரணம் ஆறிக் கொண்டிருக்கும் மடியில் பெய்த இசைமாரி நம்காற்றைச் சுகந்த மாக்கி,

Posted in கவிதைகள் | Leave a comment

ஊடல்

‘மெல்விரல் இதழ்களைந்தைக் கொண்ட கமலபாதம்… கொல்லும் எரிமலைக் குழம்பாய்க் கொதிக்கின்ற அனற்பாதை தன்னில் அவிந்து பொரியாதோ?

Posted in கவிதைகள் | Leave a comment

ஞானக்கண்

கண்ணில் பகலிரவைக் காணல் மிகஎளிது! வெள்ளை விழி…பகலாம்! வெளிச்சம் அயலிருந் தூட்டும் நடுநெற்றிக் கண்ணோ, நுதலிலிட்ட சந்தனத்தின்

Posted in கவிதைகள் | Leave a comment

நாம்

கலைகிறது முகிலினமெம் கனவு போலே! கரைகிறது கற்பூரம் மனது போலே! தொலைகிறது வசந்தங்கள் நனவு போலே! துடிக்கிறது உளம் பல்லி வாலைப் போலே! உலைக்கொதிப்பாய் இருந்தது ஊர்…இன்று ஆறி

Posted in கவிதைகள் | Leave a comment

சுவாதி

இரும்பு இரயில்கள் எண்ணற்று வருமிடத்தில் குருதி இரயிலாகி… தண்டவாளந் தேடிற்று! ஆயிரம் விழிகள் அகலத் திறந்துபார்க்க ஈனனின் கரங்கள் எழுதிற்று மரணவேதம்!

Posted in கவிதைகள் | Leave a comment

நிழலாக நில்

என்னிடர்த் தடைகள் நீக்கு! என்காலை இடறி வீழ்த்தக் கிண்டுவோர்…அதிலே வீழக் கீதைசொல்! பிழைகள் செய்தும் என்னுடன் மோதி வெல்ல

Posted in கவிதைகள் | Leave a comment

ஓர்குரலில் கூறல்.

போரின் பகடைக் காய்களென வீழ்ந்தவரை, போரின் இரும்புக் கரம் நசுக்கச் சாய்ந்தவரை, போரனலிற் சிக்கி அதிற்பொசுங்கிப் போனவரை, போர்க்கடலில் மீன்களுக்கு

Posted in கவிதைகள் | Leave a comment

இளைய ராஜா –73

நீ முதிர்ந்து விட்டாய். நீ கிழண்டி விட்டாய். தோன்றிற்று நரைதிரைகள். தோன்றிற்று நடைத்தளர்ச்சி. தாலாட்டு நீபாட தொட்டிலிலே தவழ்ந்தவர்கள் தாலாட்டுப் பாடுகிறார்

Posted in கவிதைகள் | Leave a comment