நிசி

இரைந்தபடி இருக்கிறது கடல்
அலைகளோடு
அசைந்தபடி இருக்கிறது சுகமளிககும் பூங்காற்று!
அலைந்தபடி இருக்கிறது
தென்னோலைக் கைவிரல்கள்.
நனைந்தபடி இருக்கிறது நள்ளிரவு.
தனித்திருந்து
கடலின் இரைச்சலிடை,
காற்றின் உலைச்சலிடை,
துடித்தெரியும் விளக்கின் துளிஒளியாய்த்
தவித்தபடி
நடுங்கித் துடிக்கிறது…
நனவின் இடர்களிடை
உடைந்தும் உடையாதும் உயிர்வலிக்க என்இதயம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply