முருகா முருகா முருகா

நிதமும் வருவாய் மயிலில்
நிழலாய்ப் படிவாய் உயிரில்
விதியின் சதியை உதையும் கழலே
வினையை பொடிசெய் கனலே குளிரே (முருகா..) Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எம்மைத் தேற்றடா!

ஈர நல்லையின் வீர ஷண்முகா!
இன்றிடர் களைந் தெம்மை நோக்கடா!
பாரை மாய்த்திடும் பாவ நோயினை
பாடை யேற்றடா…பஸ்பமாக்க வா!
வேரிலே விழும் வேதனை இடர்
வெட்டி வீழ்த்தடா! மேன்மை சேர்க்க வா! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நின்று தடு ஊறு!

கவிதை என்ற உடலில் வாழும் உயிராகி
கனவு கோடி நனவில் நித்தம் தருவாயே
செவியில் வீழ்ந்து இதயம் தோய்ந்து மனஏரி
தெளியவைக்கும் கவி அன் றாடம் அருள்வாயே!
தவிலிசைக்கு தலைஅசைக்கும் திரு வீதி
தமிழ் மணக்க….எனது சிந்தும் இரசி நீயும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஜன நாயகம்

என் விருப்பினை எனது தெரிவினை
“இவர்க்கு” என்று எவர்க்கும் தெரியாது
இன்று புள்ளடி இட்டேன்; திரும்பினேன்!
“இஃது என் ஜனநாயகக் கடன்… அதை
நன்று செய்தன்” என்றார்த்தேன்; “அது மட்டும்
நாளை வென்றிட வேணும்” பிரார்த்தித்தேன்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தகுதி

தங்கள் தரப்பில் தனித்துத்
திசைக்கொன்றாய்
மங்கிக் கிடந்தவரை, வாய்ப்புகளை,
கணம் முயன்று
ஒன்றாக்கி…எல்லோரும் ஒரே குரலில்
கூவவைத்து, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கருகக் கூடுமோ?

ஊர டங்கு தொடர்ந்து வளர்ந்தது.
உயிர்ப் பயத்தில் பார் அடங்கிக் கிடந்திடும்
காலம்…இங்கும் கனத்துத் தவிக்குது.
கவலை பேயாய்க் கவிந்து படர்ந்தது.
வேரில் விழுந்து அரிக்கும் கிருமியால்
விழுதும் நொந்து விருட்சம் முழுவதும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இறைவரை கண்டோம் நேரில்!

தெய்வங்கள் தம்மை நேரில்
திசைகளில் கண்டோர் இல்லை!
தெய்வங்கள் சிலையாய் நிற்கும்;
செயற்படும் அழகைப் பார்த்து
உய்தவர் இல்லை! நஞ்சைத்
தான் உண்டு உலகைக் காத்த Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புதுமை ஆண்டு

புதிய தானதோர் ஆண்டு மலர்ந்தது!
புதுமை இம்முறை….யாரும் எவர்களும்
புதிதுடுத்து உயிர்த்து திருத்தலம்
போய்…அறுசுவை உண்டு சிலிர்த்திடும்
கதைகள் இல்லை! வீட்டில் இருந்துயிர்
களித்து குடும்பத்தி னோடு கதைத்துண்டு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இயல்பு வாழ்வு

தெளிவாச்சு வானம்! தெளிவாச்சு ஆழி!
தெளிவாச்சுக் காற்று!
தெளிவாச்சு கங்கை!
“ஆம்…மீண்டும் எங்கள் அழகியற்கை
வான் மலைகள்
ஆறின் தெளிவோட்டம் அதிசயம்” Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உணர்ந்ததை மறந்தால்….

ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி
அழியலை பூமியின் அழகு.
ஆழவந் தேபத் தாயிரம் ஆண்டா
அறியலை நீ..புவி மனது.
பாயிரம் தானே பார்த்தனை இன்னும்
பயிலலை யே புவி அறிவு. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஊர் மாறி உரு மாறி

காலாற யான் நடந்த களிமண் வீதி
காப்பற்றாய் மாறிநிற்கும்! காற்றை வாங்கி
மேலெல்லாம் ஒத்தடங்கள் பிடிக்கும்…மூலை
வேம்பு நின்ற இடத்தில் தொலைத் தொடர்பைக் காவும்
கோபுரமா நிழல் விரிக்கும்? கிடுகு வேலி
குறைந்தெங்கும் மதில் சூழும்…மாரி வெள்ளம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

செய் பிழை

காலம் கடத்தி ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தியே
ஆற்றப் படல் வேண்டும்!
காலம் கடத்தாது ஆற்றவேண்டிய கடமை
காலம் கடத்தாதே
ஆற்றப் படல் வேண்டும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கனவாக ஏன் கலைந்தாய்?

தீயணைக்கச் சென்றவனே….
சா அணைக்க ஏன் சரிந்தாய்?
தீ அணைந்திருக்கும் அங்கு;
தீப்பிடித்து.. எம் நெஞ்சு!
நீ அணைத்த தீயாலே நிஜம்
தப்பிப் பிழைத்ததன்று! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வேசம்

அகத்திலே… எனைவீழ்த்த அம்புகளைக்
கூர்தீட்டி,
அகத்திலே… எனைச் சாய்க்க
அரிய வியூகம் ஆக்கி,
அகத்திலே…
எனைப்புதைக்க ஆசைக் கிடங்குவெட்டி, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவி அறிக!

கவிதை என்பது கசிந்து உருகியும்,
கவிதை என்பது கட்டி இறுக்கியும்,
கவிதை என்பது கொஞ்சிக் குலாவியும்,
கவிதை என்பது கெஞ்சி அளாவியும்,
கவிதை கண்ணீர் சிந்த இழக்கியும்,
கவிதை கிச்சுக் கிச்சுக்கள் மூட்டியும், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment